Tuesday, December 11, 2012

அமெரிக்க அடிமை ஆதிக்கத்தின் அழியாச் சின்னம்.


அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் ஆரம்பம் செய்கிறேன்
House Of Slaves - அடிமைகள் இல்லம் 



 ஆப்ரிக்க கண்டத்தில் உள்ள ஒரு நாடு தான்  செனகல்.இதன் துறைமுகபட்டினம் தான் டாகர்.இந்த டாகரிலிருந்து 10 நிமிட படகுப் பயணத்தில் அமைந்ததுதான் ' கோரி தீவு '.

அதுல் தியுள்கவோன்கர் (Atul Deulgaunkar) என்ற பத்திரிகையாளர் கோரீ தீவுக்கு நேரடியாகச் சென்று, பின்னர் எழுதிய Memories Of Dark Era என்ற கட்டுரை  FrontLine இதழில் 2005 ஆம் ஆண்டு வெளியானது.அந்தக் கட்டுரை கோரீ தீவில் பதிந்திருந்த ரத்தக்கரை படிந்த வரலாற்றை நமக்கு தெளிவாக பறைசாற்றுகிறது.

1444 ஆம் ஆண்டு இந்த அழகிய தீவுக்கு காலடி வைத்த போர்த்துக்கல் நாட்டவர்கள் இதற்கு " கோரீ தீவு " என அழைத்தனர்.இந்த தீவின் வழியாகத்தான் ஆபிரிக்கர்களை தமது கரும்புத் தோட்டங்களில் வேலை செய்ய கடத்திச் சென்றனர்.15 - 16 ஆம் நூற்றாண்டுகளில் ஐரோப்பிய காலணிகள் அமெரிக்காவில் விரிவடைவதற்கு இந்த அடிமைகளின் கடுமையான உழைப்பு பெரிதும் உதவியது.போர்த்துக்கல் நாட்டவர்களைப் பின்பற்றி டச்சுக்காரர்களும் ஆங்கிலேயர்களும் பிரெஞ்சுக்காரர்களும் தங்களது சுரங்கங்களில் தோட்டங்களில் வேலை செய்ய ஆபிரிக்கர்களை கடத்திச் சென்றனர்.

900 மீட்டர்  நீளமும் 300 மீட்டர் அகலமும் கொண்ட இந்த குட்டித் தீவு இன்று ஒரு சுற்றுலாத்தலமாக மாறி இருக்கின்றது.இன்று அமெரிக்காவில் வாழும் கருப்பர்கள் தங்கள் முன்னோர்களின் தடங்களை கண்டறியும் முகமாக இங்கு வருகின்றனர்.இந்த தீவின் மண்ணை மரியாதையுடன் பார்க்கின்றனர்.

இந்த தீவில் ஒரு " அடிமைகள் இல்லம் " ஒன்று இருக்கின்றது.இது டச்சுக்காரர்களால் கட்டப்பட்டது.இது அவர்களின் மொழயில் " La Maison Des Esclaves " என்று அழைக்கப்பட்டது.அடிமைகள் இல்லத்தின் முன்பக்கம் ஒரு பெரிய மரக்கதவு.அதனை திறந்தவுடன் ஒரு சிறிய திறந்தவெளி.அதற்குப் பின் இரண்டு  மாடிக் கட்டடம்.கட்டடத்தின் கீழ்தளத்தில் "செல்"என்று அழைக்கப்படும் அறைகள் உள்ளன.

ஆப்ரிக்காவிலிருந்து கடத்தி வரப்படும் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் இந்த திறந்தவெளியில் நிறுத்தப்பட்டனர்.அடிமைகளை வாங்க வரும் வியாபாரிகள் மடியில் நின்று கொண்டு இவர்களைப் பார்ப்பார்கள்.நல்ல புச்டியான திடகாத்திரமான உறுதியான ஆண்களைத் தெரிவு செய்வார்கள்.60 கிலோ எடைக்கு மேலுள்ள ஆண்களுக்கு நல்ல கிராக்கி.

ஒரு ஆண் அடிமைக்கு பண்டமாற்றாக ஒரு துப்பாக்கியும்,பருத்த மார்புள்ள பெண்களுக்கு பண்டமாற்றாக மதுவும், குழந்தைகளுக்கு பண்டமாற்றாக கண்ணாடியும் விற்பவர்களுக்கு கொடுப்பார்கள்.கப்பல் முழுவதும் ஆள் சேரும் வரை அடிமைகள் ,செல்களில் அடைத்து வைக்கப்பட்டார்கள்.இந்த செல்கள் 2.6 மீட்டர அகலமும் 2.6 மீட்டர் நீளமும் கொண்டவை.

அடிமைகள் அடைத்து வைக்கப்படும் " செல்கள் "

கழுத்தை சுற்றி இரும்பு வளையங்களால் பூட்டி, அந்த இரும்பு வளையத்தையும், கை, கால்களையும் நீண்ட சங்கிலியால் அடிமைகளைப் பிணைத்து வைப்பர்.அந்த சங்கிலியின் நுனியில் இரும்புப் பந்துகள் இணைக்கப்பட்டிருக்கும்.இரும்புப் பந்துகளின் கனத்தால் கழுத்தை மேலே தூக்கவே முடியாது.மலஜலம் கழிப்பதற்கு அடிமைகள் ஒரு நாளைக்கு ஒரு தடவைதான் அனுமதிக்கப்பட்டனர்.60 கிலோவுக்கு கீழே உள்ள ஆண்களுக்கெல்லாம் பன்றிகளைப் போல் தீனி ஊட்டப்பட்டனர்.ஏனெனில் அவர்களின் எடை 60 கிலோவுக்கு அதிகமாக இருந்தால்தான் நல்ல விலைக்கு விற்க முடியும் என்பதால்.

கடத்தி வரப்படுபவர்கள் யாராவது கத்தி ஆர்ப்பாட்டம் செய்தால் அவர்களுக்கென்று பயங்கரமான ஒரு பிரத்தியோக அறை காணப்படுகிறது.அங்கே அவர்கள் அடைப்படுவார்கள்.அந்த அறையின் அமைப்பின் படி அங்கு அங்கு நிற்கவும் முடியாது உட்காரவும் முடியாது.தென்னாபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலா 1991 இல் இந்த அடிமை இல்லத்தை பார்வையிட வந்த போது அந்த அறையில் அரைமணி நேரம் செலவழித்தாராம்.

அந்த அறை இதுதான்.

கடத்தப்பட்ட இளம்பெண்கள் மேல்தளத்தில் அடிமை வியாபாரிகளால் இஷ்டத்துக்கு பாலியல் புணர்ச்சிக்கு உள்ளாக்கப்பட்டனர்.அப்போது வலிதாங்காமல் அந்த  அபலைப் பெண்கள் கத்தும் சத்தம் வெளியே கேட்காமல் இருக்க பியானோ வாசிப்பார்களாம் இந்த கல்மனம் படைத்த கயவர்கள்.

இந்த இல்லத்தின் பின்புறம், ஓர் இருண்ட குறுகிய சந்து உள்ளது.அது நேரே அட்லாண்டிக் பெருங்கடலை முட்டும்.அந்த சந்தின் முடிவில் அமைந்திருக்கும் கதவை திறந்தால் கடலின் அலைகள் கரையை முத்தமிட்டுக் கொண்டிருக்கும்.

ஏறத்தாழ 2 கோடிக்கும் மேற்பட்ட ஆப்ரிக்கர்கள் இந்த குறுகிய பாதை வழியாகத்தான் அழைத்து வரப்பட்டு கப்பலில் ஏற்றப்பட்டனர்.இதன் வழியாக கப்பலில் ஏறியோர் இனி தங்கள் சொந்த இடங்களுக்கு திரும்பவே முடியாது.அதனால் இதன் கதவை " மீளமுடியாக் கதவு " " Door Of No Return " என்று அழைக்கின்றனர்.

" மீளமுடியாக் கதவு " " Door Of No Return "

கிட்டத்தட்ட 300 வருடங்களாக, அதாவது 1536 முதல் 1848 வரை 6 லட்சம் ஆப்ரிக்கர்கள் இந்த தீவில் இறந்துள்ளனர்.1793 இல் எலி விட்னி என்பவர் பருத்தியிலிருந்து கொட்டையை நீக்கும் இயந்திரத்தை கண்டுபிடித்தார்.இதனால் பருத்தியின் உற்பத்தி திடீரென பன்மடங்காக அதிகரித்தது.இதன் காரணமாக பருத்திப் பண்ணைகள் பெருமளவில் அதிகரித்தது.இங்கு கடத்தி வரும் ஆப்ரிக்க அடிமைகள் உழைக்க வைக்கப்பட்டனர்.தங்கள் ரத்தம் சிந்தி முழு நாள் முழுவதும் அவர்கள் உழைத்தனர்.
அவர்களால்தான் அமெரிக்க பொருளாதாரம் வளம் மிக்கதாக மாறியது.ஆப்ரிக்க கருப்பர்கள்தான் கால்வாய்கள் - இரும்புப்பாதைகள் - சாலைகள் அமைத்தனர்.விவசாயத்திலிருந்து தொழில் புரட்சிக்கு மாறியவுடன் அடிமைகளின் தேவை இன்னும் அதிகரித்தது.இதனால் கோரி தீவு வழியாக மேலும் மேலும் அவர்கள் கடத்தப்பட்டனர்.

ஆப்ரிக்க கறுப்பர்களின் கடும் உழைப்பு காரணமாகத்தான் இன்று மேலை நாடுகள் மேன்மைதங்கிய நாடுகளாக மாறின என்பதில் எந்தவிதமான மாற்றுக்க்கருத்தும் இல்லை.

அது ஒரு மிருகத்தனமான அநாகரீகமான மனிதாபிமானமற்ற காலம் !

அமெரிக்காவில் அடிமைகள் ஏலம்.1769

தண்டனை வழங்கப்படும் ஒரு அடிமை.

வயல்களில் ஆண்கள் வேலை செய்த அதே நேரத்தில் பெண்களும் வேலைக்கு அமர்த்தப்பட்டனர்.கர்ப்பமான பெண்கள் பேறுகாலம் வரை வேலை செய்ய வேண்டும்.அடிமைகளின் இறப்பு விகிதம் அதிகமான போது, இந்த மனித இழப்பை ஈடுகட்ட பண்ணை முதலாளிகள் அதிகமான குழந்தைகளை பெற்றுக் கொள்ளும்படி அடிமைகளை ஊக்குவித்தனர்.15 குழந்தைகள் பெற்றால் உனக்கு சுதந்திரம் அளிப்பேன் என்று வாக்குறுதிகளும் கொடுத்தனர்.

ஐ.நா வின் கல்வி, அறிவியல், கலாச்சார அமைப்பு  (UNESCO) கோரீ தீவை 1978 இல் உலக பரம்பரை சொத்தாக அறிவித்ததுதட்போது அது செனகல் நாட்டு அரசால் பராமரிக்கப்பட்டு வருகிறது.

மேலை நாடுகளின் ஆதிக்க மனோபாவத்துக்கு மௌன சாட்சியாக இந்த அடிமை இல்லம் இன்று நின்றுகொண்டிருக்கிறது.


இன்று அமெரிக்காவில் வாழ்ந்து கொண்டிருக்கும் கறுப்பர்களின் முன்னோர்கள் அன்று ஆப்ரிக்காவிலிருந்து அடிமைகளாக கப்பலில் கடத்தப்பட்டவர்கள்.அப்படி கடத்தப்பட்டவர்கள் முஸ்லிம்களாக இருந்தார்கள் என்ற பேருண்மையை அலெக்ஸ் ஹேலி ( Alex Heli ) என்ற எழுத்தாளர் தனது ஆராய்ச்சியின் போது கண்டுபிடித்தார்.இவர் தனது பரம்பரையின் வேர்களை கண்டறிந்து அதனை " வேர்கள் - Roots " என்ற நாவலில் விவரிக்கிறார்.இவர் எழுதிய அடுத்த நூல் தான் மெல்கம் - x.


நன்றி.


  • வேர்கள் ( Roots ) - தமிழாக்கம் - M.S. அப்துல் ஹமீது.
  • Memories Of Dark Era - Atul Deaugaonkar - Frontline Magazine - 2005.link 
  • House Of Slaves - Wikipedia.com link 
  • Atlantic Slave Trade - Wikipedia.com link 


அலெக்ஸ் ஹெலியும் - மெல்கம் x உம்.




7 comments:

  1. அஸ்ஸலாமு அலைக்கும்,

    படிக்கும்போதே மனம் கனக்கின்றது சகோ. எப்படியெல்லாம் இருந்திருக்கின்றார்கள் வரலாற்றில். இன்று நாம் மனிதாபிமானம் குறித்து அதிகமாக பேசுகின்றோம், தடுக்க முயற்சிக்கின்றோம். அன்றைய அளவில் அதற்கு கூட ஆள் இல்லாமல் இருந்திருக்கின்றது என்று எண்ணும் ரொம்பவே மனம் வேதனை படுகின்றது. இந்த இருண்ட பக்கத்தை கண் முன்னே நிறுத்தியதற்கு நன்றி.

    உங்கள் சகோதரன்,
    ஆஷிக் அஹமத் அ

    ReplyDelete
  2. அஸ்ஸலாமு அலைக்கும் சகோ.

    படிக்க படிக்க மனதுக்கு ரொம்ப கஷ்டமாக உள்ளது :'( படங்கள் திகீர்ப்பைத் தருகிறது. நாகரிக ஆடை போர்த்திய அநாகரிக மிருகங்களுக்கு ஏது மனசாட்சியும் மனிதாபிமானமும்? இந்த செய்தியெல்லாம் வெளி உலகுக்கு வந்தாலும் அது யாராலும் திரும்பிப் பார்க்கப்படுவதில்லை. காரணம் அந்த கொடுங்கோலர்கள் அமெரிக்க, ஐரோப்பியர்களாக இருப்பதால்!

    பகிர்வுக்கு நன்றி சகோ. ஜஸாகல்லாஹ் ஹைரா!

    ReplyDelete
  3. மனது கனத்து விட்டது, மிக கொடுமையான இந்த நிகழ்வை மறக்க சிலகாலம் ஆகும், எனக்கு

    ReplyDelete
  4. மீண்டும் வேண்டும் ஒரு ஹிட்லர்..

    ReplyDelete
  5. ஹதீஸ் 4122. ஆயிஷா(ரலி) அறிவித்தார்
    அகழ்ப்போரின்போது ஸஅத் இப்னு முஆத்(ரலி) தாக்கப்பட்டார்கள். அன்னாரின் கை நரம்பில் குறை»களில் ஒருவனான ‘ஹிப்பான் இப்னு அரிஃகா என்றழைக்கப்பட்டவன் அம்பெய்து (அவர்களைக் காயப்படுத்தி)விட்டான். அப்போது நபி(ஸல்) அவர்கள் அவரை அருகிலிருந்து நலம் விசாரிப்பதற்கு வசதியாக (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலிலேயே (அவருக்குக்) கூடாரமொன்றை அமைத்தார்கள். அகழ்ப் போரை முடித்துக் கொண்டு வந்த இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஆயுதங்களைக் கீழே வைத்துவிட்டுக் குளித்தார்கள். அப்போது ஜிப்ரில்(அலை) அவர்கள் தங்களின் தலையிலிருந்து புழுதியைத் தட்டிய வண்ணம் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வந்து, ‘நீங்கள் ஆயுதங்களைக் கீழே வைக்கவில்லை. அவர்களை நோக்கி (படை நடத்தி)ச் செல்லுங்கள்’. என்று கூறினார்கள். அதற்கு, எங்கே? என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். அப்போது, பனு குறைழா குலத்தினர் (வசிப்பிடம்) நோக்கி ஜிப்ரில் (அலை) அவர்கள் சைகை செய்தார்கள். உடனே, இறைத்தூதர்(ஸல்) அவர்கள், பனு குறைழா நோக்கிச் சென்றார்கள். (பல நாள் முற்றுகைக்குப் பின்னர்) அவர்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களின் தீர்ப்புக்கு இறங்கி வந்தனர். அப்போது நபி(ஸல்) அவர்கள், தீர்ப்பை ஸஅத் இப்னு முஆத்(ரலி) அவர்களிடம் ஒப்படைத்தார்கள். சஅத் அவர்கள் “பனு குறைழாக்களில் போர் புரியும் வலிமை கொண்டவர்கள் கொல்லப்பட வேண்டும் குழந்தைகளும் பெண்களும் கைது செய்யப்படவேண்டும் அவர்களின் சொத்துகள் பங்கிடப்பட வேண்டும் என்று தீர்ப்பளிக்கிறேன்’. என்று கூறினார்கள்.

    --இவ்வரலற்றுக்குறிப்புப்படி 600 ஆண்களுக்குமேல் தலை சீவப்பட்டு கொலை செய்யப்பட்டனர். பெண்களும் குழந்தைகளும் அடிமையாக்கபட்டு சந்தையில் விற்கப்பட்டனர்.

    புகாரி 2229:
    அபு சயீத் அவர்கள் கூறியதாவது. நான் நபியவர்களிடம் அமர்ந்திருக்கும்போது “அல்லாஹ்வின் தூதரே, எங்களுக்கு (பெண்) போர்க் கைதிகள் கிடைக்கின்றனர். அவர்களை நல்ல விலைக்கு விற்க நாங்கள் விரும்புவதால் நாங்கள் அஸ்ல் செயலைச் செய்யலாமா?” என்று கேட்டேன். அதற்கு நபியவர்கள்“அப்படியா நீங்கள் செய்கிறீர்கள்? இதைச் செய்யாமலிருப்பது உங்கள் மீது கடமையில்லை. (அதாவது இதற்கு தடை யில்லை) ஆயினும் அஸ்ல் செய்யாமலிருப்பதே மேலானதாகும். ஏனெனில் உருவாகும் என்று அல்லாஹ் விதித்துள்ள எந்த உயிரும் உருவாகாமல் இருந்ததில்லை” என்று கூறினார்கள்.


    கறுப்பினத்திற்கு எதிராக வெள்ளையினம் நடத்திய கொடூரங்களுக்கு வக்காலத்து வாங்கி இத் தகவலைத் தரவில்லை. நெஞ்சை கசக்கிப் பிழிவது எப்படி பட்டவர்களுக்கு என்பதை புரிந்து கொள்ளவே எழுதியுள்ளேன்.
    ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுததாம்

    ReplyDelete
  6. சாகித் அவர்களுக்கு
    //புகாரி 2229:
    அபு சயீத் அவர்கள் கூறியதாவது. நான் நபியவர்களிடம் அமர்ந்திருக்கும்போது “அல்லாஹ்வின் தூதரே, எங்களுக்கு (பெண்) போர்க் கைதிகள் கிடைக்கின்றனர். அவர்களை நல்ல விலைக்கு விற்க நாங்கள் விரும்புவதால் நாங்கள் அஸ்ல் செயலைச் செய்யலாமா?” என்று கேட்டேன். அதற்கு நபியவர்கள்“அப்படியா நீங்கள் செய்கிறீர்கள்? இதைச் செய்யாமலிருப்பது உங்கள் மீது கடமையில்லை. (அதாவது இதற்கு தடை யில்லை) ஆயினும் அஸ்ல் செய்யாமலிருப்பதே மேலானதாகும். ஏனெனில் உருவாகும் என்று அல்லாஹ் விதித்துள்ள எந்த உயிரும் உருவாகாமல் இருந்ததில்லை” என்று கூறினார்கள்.///
    என்ன ஒரு மொள்ளமாரித்தனம் சகோதரா ஹதீஸை பதிவதேன்றால் அதனை முழுமையாக பதி அதை விடுத்து உனக்கு ஏற்றார் போல் ஹதீஸை மாற்றாதே...அந்த உண்மையான ஹதீஸ் இதோ
    ###புகாரி 2229:
    அபு சயீத் அவர்கள் கூறியதாவது. நான் நபியவர்களிடம் அமர்ந்திருக்கும்போது “அல்லாஹ்வின் தூதரே, எங்களுக்கு (பெண்) போர்க் கைதிகள் கிடைக்கின்றனர். அவர்களை நல்ல விலைக்கு விற்க நாங்கள் விரும்புவதால்(அவர்களுடன் உடலுறவு கொள்ளும் பொது) நாங்கள் அஸ்ல்(உடலுறவின் பொது)பெண்குறிக்குள் விந்தை விட்டுவிடும் செயலைச்) செய்யலாமா?” என்று கேட்டேன். அதற்கு நபியவர்கள்“அப்படியா நீங்கள் செய்கிறீர்கள்? இதைச் செய்யாமலிருப்பது உங்கள் மீது கடமையில்லை. (அதாவது இதற்கு தடை யில்லை) ஆயினும் அஸ்ல் செய்யாமலிருப்பதே மேலானதாகும். ஏனெனில் உருவாகும் என்று அல்லாஹ் விதித்துள்ள எந்த உயிரும் உருவாகாமல் இருந்ததில்லை” என்று கூறினார்கள்.
    இதன் அர்த்தமாவது புரியாமல் ஏன் கண்டதை வந்து இங்கு வாந்தி எடுக்கிறாய் சாகித்...
    ஏக இறைவன் உனக்கு நேர்வழி காட்டுவானாக....

    ReplyDelete