Wednesday, December 5, 2012

இஸ்ரேல் பற்றிய ஒரு சிறு உண்மை


அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் ஆரம்பம் செய்கிறேன்



இஸ்ரேல் என்ற சட்டவிரோத ஒரு நாடு உருவாக்கப்பட்டதின் பின் அந்நாடும் அதை நாலாபுறத்திலிருந்து பாதுகாத்துவரும் மேற்குலக மற்றும் சில மத்தியகிழக்கு நாடுகளும் ஒரு நிகழ்ச்சி நிரலின் படியே செயற்பட்டு வருகிறது.இந்த நிகழ்ச்சி நிரலின் சாராம்சம் என்னவெனில் " இஸ்ரேலை உலகின் Super Power ஆக மாற்றுவதே ".அது உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம் எப்படி உலகின் ஒரு  சிறிய நாடு ஒன்று உலகின் வல்லரசாக மாற முடியும் என்று.இஸ்ரேல் காஸாவில் மேற்கு கரையில் தனது ரத்தவெறியை அரங்கேற்றினால் அந்நாடு விமர்சனத்துக்குல்லாகுமே தவிர அந்நாட்டுக்கு எதிராக உலகின் எந்தவிதமான நாடும் நடவடிக்கை எடுக்காது.எனவே இஸ்ரேல் தனக்கு விரும்பியதை செய்யும் அதை சியோனிச மேற்குலகம் அதை காக்கும்.சியோனிசம் என்பது வெறும் ஒரு இஸ்ரேலிய இயக்கம் மட்டுமல்ல அது உலகளாவிய இயக்கமாகும்.

அமெரிக்கா - ஐரோப்பா - அரபு நாடுகளில் பரந்து வாழும் சியோனிச யூதர்கள் , சட்டவிரோத யூத நாட்டை பாதுகாக்கும் நடவடிக்கைகளில் என்றும் ஈடுபட்ட வண்ணம் உள்ளனர்.இரண்டாவதாக இஸ்ரேல் நம்பமுடியாத ஒரு இராணுவ பலத்தை கொண்டுள்ளது.இஸ்ரேல் 300 க்கும் அதிகமான இராணுவ ஆயுதங்களை கொண்டுள்ளது.இஸ்ரேல் நினைத்தால் இவற்றைக் கொண்டு மத்திய கிழக்கை கண்சிமிட்டும் நேரத்தில் அதற்கு அழித்து விட முடியும்.அமெரிக்கவைப் ஒன்று இஸ்ரேலுக்கும் சிறந்த ஆயுத தொழில்நுட்பம் காணப்படுகிறது.ஒருவேளை அமெரிக்காவை விட சிறந்த தொழில்நுட்பம் காணப்படலாம்.அல்லாஹ் அறிவான்.யூதர்கள் நபி ஈஸா (அலை) (ஜீசஸ்) அவர்களை அல்லாஹ்வின் தூதராக ஏற்றுக்கொள்ளவில்லை.அவர்கள் இன்றும் அந்த தூரருக்காக காத்துக்கொண்டிருக்கிறார்கள்.நபி ஈஸா (அலை) அவர்களுக்குப் பின் நபி முஹம்மத் (ஸல்) அவர்களும் வந்து உலகுக்கு வழிகாட்டிக் கொண்டிருக்கிறார்கள்.இனி அல்லாஹ்வின் ஏற்பாட்டின்படி வர இருப்பவன் தஜ்ஜால் தான்.அல்லாஹ்வின் ஏற்பாட்டின்படி வர இருக்கும் தஜ்ஜால் உலகுக்கு பெரும் சோதனைக் களமாக இருக்குமென்பதில் மாற்றுகருத்துக்கு இடமில்லை.


பிராந்தியரீதியாக பாரிய போர்களைத் தொடுத்து தனது வல்லரசுக்குக் கனவை நனவாக்க முயற்சி செய்யும்.விவிலியத்தில் கூறப்பட்டுள்ளது போல் எகிப்தின் நைல் நதிக் கரையிலிருந்து ஈராக்கின் யூப்ரடீஸ் நதிக்கரை வரை அவர்களின் கனவு தேசம் விரிந்து காணப்படுகிறது.இஸ்ரேலிய கோடியில் காணப்படும் இரு நீல நிறக் கோடுகளும் இதையே குறிக்கிறது.


அகன்ற  இஸ்ரேல் - GREAT ISREAL 



சட்டவிரோத இஸ்ரேலிய நாட்டின் மிக முக்கியமான இலட்சியங்களில் ஒன்றுதான் மஸ்ஜிதுல் அக்சாவை முழுமையாக தரைமட்டமாக்கிவிட்டு வரலாற்றில் காணப்படாத Temple Of Solomon என்ற ஆலயத்தை அந்த இடத்தில் நிர்மாணிப்பது.


சொலமன் டெம்பல் - கற்பனை சித்திரம்.


இஸ்ரேலின் அடுத்த மிக முக்கியமான குறிக்கோள் உலக நிதித்துறையை கைப்பற்றுவது.அது இன்று  95 % வெற்றியடைந்துள்ளது என்றே சொல்லலாம்.

இந்த பதிவைப் பார்க்கவும் -
உலகின் மத்திய வங்கிகள் ஒரு யூத குடும்பம் வசம். CLICK HERE



சியோனிசத்தின் கதை - STORY OF ZIONISM 
நன்றி - கலையகம் வலைப்பூ 



இன்ஷா அல்லாஹ் - பலஸ்தீனம் வெல்லும்.









3 comments:

  1. .... 2..உலக வரலாற்றில் இடம் பெற்ற மிகச் சிறந்த ஐரோப்பா கொடையாளரின் பெயரை உங்களால் கூற முடியுமா? அவர்தான் ஜார்ஜ் ஸோரஸ். ஒரு யூதர். இதுவரை அவர் 4 பில்லியன் டாலர்களை நன்கொடையாக வாழங்கியுள்ளார். உலகில் உள்ள விஞ்ஞானிகளுக்கும் பல்கலைக்கழகங்களுக்கும் இந்த உதவி கிடைத்துள்ளது. அவருக்கு அடுத்தபடியாக வால்டர் அனன்பர்க் என்ற மற்றோரு யூதர் 2 பில்லியன் டாலர்களை வழங்கி 100 நூலகங்களைக் கட்டியுள்ளார்.

    ஒலிம்பிக் போட்டிகளில் மார்க் ஸ்பிட்ஸ் ஏழு தங்கப் பதக்கங்களைப் பெற்று சாதனை படைத்துள்ளார். லென்னி கிரேஸல்பர்க் மூன்று முறை ஒலிம்பிக் தங்கப் பதக்கம் பெற்றவர். ஸ்பிட்ஸ், கிரேசில் பர்க் மற்றும் போரிஸ் பெக்கர் ஆகியோர் யுதர்களே.

    இந்தப் பூமியில் 1,476,233,470 முஸ்லிம்கள் வழ்கின்றனர். 100 கோடி மக்கள் ஆசியாவிலும் 40 கோடி மக்கள் ஆப்ரிக்காவிலும் 4.4 கோடி பேர் ஐரோப்பாவிலும் 60 லடசம் பேர் அமெரிக்காவிலும் உள்ளனர். ஒவ்வொரு யூதருக்கும் 100 முஸ்லிம்கள் உள்ளனர்.ஆனாலும் பலம் குன்றிப் போயிருப்பது ஆச்சர்யமாக உள்ளது.

    இஸ்லாமிய மாநாட்டு அமைப்பில் (OIC) 57 முஸ்லிம் நாடுகள் உள்ளன. அனைவரும் சேர்ந்து 500 பல்கலைக்கழகங்களை மட்டுமே அமைத்துள்ளனர். 30 இலடசம் முஸ்லிம்களுக்கு ஒரு பல்கலைக்கழகம் என்ற விகிதத்தில். அமெரிக்கா 5758 பல்கலைக்கழகங்களையும் இந்தியா 8407 பல்கலைக்கழங்களையும் பெற்றுள்ளன.
    3:04 AM
    Anonymous said...
    2004 இல் ஷாங்காய் ஜியோ டான்க் பல்கலைக்கழகம் நடத்திய உலகப் பல்கலைக்கழங்களின் தர வரிசைப் பட்டியலில் முதல் 500 இடத்தில் ஒரு முஸ்லிம் பல்கலைக்கழகமும் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    YNDP தகவல்படி கிறிஸ்தவ நாடுகளில் கல்வியறிவு விகிதம் 90% கிறிஸ்தவர்கள் அதிகம் வாழும் 15 நாடுகளில் எழுத்தறிவு 100%, முஸ்லிம் பெரும்பான்மை நாடுகளில் சராசரி 40% மட்டுமே.

    முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் நாடுகளில் பத்து லட்சம் முஸ்லிமுக்கு 230 விஞ்ஞானிகள் மட்டுமே உள்ளனர். அமெரிக்கா 4000 விஞ்ஞானிகளையும் ஜப்பான் 5000 விஞ்ஞானிகளையும் பெற்றுள்ளது. முழு அரபுலகிலும் முழு நேர ஆராய்ச்சியாளர்களின் மொத்த எண்ணிக்கை 35000 மட்டுமே. முஸ்லிம் நாடுகள் அந்தந்த நாடுகளின் மொத்த வருமானத்தில் கல்விக்காக 0.2 % மட்டுமே செலவிடுகின்றன. கிறிஸ்தவ நாடுகள் 5% செலவிடுகின்றன.

    முஸ்லிம் உலகம் அறிவை உற்பத்தி செய்வதில், பெறுவதில் பின்தங்கி உள்ளதே இதற்கு காரணம்.

    1000 மக்களுக்கு எத்தனை நாளிதழ்கள், புத்தகங்கள் உள்ளன என்பதை வைத்து அந்த சமூகத்தின் அறிவை எடை போட முடியும். பாகிஸ்தானில் 1000 மக்களுக்கு 23 நாளிதழ்கள் உள்ளன. சிக்கப்பூரில் 360. UK வில் 10 லட்சம் மக்களுக்கு 2000 புத்தகங்கள், எகிப்தில் 20 மட்டுமே.

    இந்தியாவிற்கு அதிநவின ரடாா் மற்றும் ராணுவ ஆயுதங்கள் ஏவுகணைகள் ஆகியவை அளித்து வருகின்றது இஸ்ரேல். பால்கன் ரக போர்விமானம் இரண்டை இந்தியா இஸ்ரேலிடமிருந்து வாங்கியுள்ளது. இந்நிலையில் இஸ்ரேல் குறித்து இவ்வளவு வெறுப்பு இந்திய முஸ்லீம்களக்கு தேவையா ?

    .

    ReplyDelete
  2. இந்த உலகில் மொத்தம் உள்ள யூதர்களின் எண்ணிக்கை 1.41 கோடி ஆகும்.70 இலட்சம் பேர் அமெரிக்காவில் உள்ளனர். 50 இலட்சம் பேர் ஆசியாவிலும், 20 இலட்சம் பேர் ஐரோப்பாவிலும், ஒரு இலட்சம் பேர் ஆப்ரிக்காவிலும் வாழ்கின்றனர். இவ்வுலகில் உள்ள யூதருக்கு 100 முஸ்லிம்கள் உள்ளனர். ஆனால் யூதர்கள் முஸ்லிம்களின் வலிமையை விட நூறு மடங்கு அதிகம் வலிமையுடன் காணப்படுகிறார்களே! இது ஆச்சர்யமாக உள்ளது.

    நாசரேத்தில் இயேசு யூதராக இருந்தார். உலகில் எல்லாக் காலங்களிலும் அதிக தாக்கத்தை ஏற்படுத்திய, நூற்றாண்டின் சிறந்த மனிதர் என டைம் இதழ் புகழ்கின்ற விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் யூதராக இருந்தார். உளவியலின் தந்தை, சிக்மன் ஃபராய்டு ஒரு யூதர். கார்ல் மார்க்ஸ், பால் சாமுவேல்சன், மில்டன் ஃப்ரீட்மேன் ஆகியோர் யூதர்களாக இருந்தனர்.

    பெஞ்சமின் ரூபின் மனித குலத்திற்கு மருந்தை உடலுக்குள் செலுத்தும் ஊசியை வழங்கினார் ஜோனஸ் சால்க் போலியோ தடுப்பு மருந்தை முதலில் உருவாக்கினார். அலர்ட் ஸாபின் தற்போதுள்ள போலியோ சொட்டு மருந்தை உருவாக்கினார். கொர்ட்ருட் எலியன் லீகேமியா என்ற நோயைப் போக்கும் மருந்தை கண்டுபிடித்தார். பாருச் பிளம்பர்க் ஹெபாடிடிஸ் B தடுப்பு மருந்தைக் கண்டுபிடித்தார். பால் எர்லிக் சிஃபிலிஸ் என்ற பாலியல் நோய்க்கு சிகிச்சை அளித்தார். எலீ மெட்ச்நிகாஃப் தொற்று நோய்கள் தொடர்பான ஆய்வுக்காக நோபல் பரிசைப் பெற்றார்.

    பெர்னார்டு கட்ஸ் நரம்புத் திசு மாற்ற ஆய்வுக்காக நோபல் பரிசைப் பெற்றார். ஆண்ட்ரூ ஸ்கேலி ‘ என் டோக்ரினாலஜி’ ஆய்வில் நோபல் பரிசைப் பெற்றார். ஆரோன் பெக் உளவியல் சிகிச்சையை கண்டு பிடித்தவர். கிரிகரி பின்கஸ் மாத்திரையை முதலில் உருவாக்கியவர். வால்ட் என்பவர் கண் ஆராய்ச்சிக்காக நோபல் பரிசு பெற்றவர். ஸ்டேலி கோஹன் கருவியல் ஆராய்ச்சிக்காக நோபல் பரிசைப் பெற்றார். வில்லம் கோஃப் சிறுநீரக இரத்த சுத்திகரிப்பு இயந்திரத்தை உருவாக்கினார். இவர்கள் அனைவரும் யூதர்கள் ஆவர்.

    கடந்த 105 வருடங்களில் 1.41 கோடி உள்ள யூதர்கள் 180 நோபல் பரிசுகளை வென்றுள்ளனர். 140 கோடி உள்ள முஸ்லிம்கள் மூன்று நோபல் பரிசுகளை மட்டுமே வென்றுள்ளனர். (அமைதிக்காகத் தரப்படும் விருதுகள் நீங்கலாக.)

    யூதர்கள் ஏன் வலிமையுடன் திகழ்கின்றனர்? ஸ்டேன்ஸி மெஸார் முதல் மைக்ரோ சிப்பைக் கண்டு பிடித்தவர். லியோ ஸலார்ட் முதன் முறையாக நியூக்ளியர் சங்கிலித் தொடர்பைக் கண்டுபிடித்தார். பீட்டர் ஸ்கல்ட்ஸ் ஆப்டிகல் ஃபைபர் கேபிள்கள்; சார்லஸ் அட்லர் - போக்குவரத்து சிக்னல் விளக்கு; பென்னோ ஸ்ட்ராஸ் - ஸ்டெய்ன்லஸ் ஸ்டீல்; ஐசடோர் கிஸி - ஒலித் திரைப்படங்கள்; எமைல் பெர்லினர் - தொலைபேசி மைக்ரோ ஃபோன்; சார்ல்ஸ் கின்ஸ்பர்க் - வீடியோ ஒளிப்பதிவுக் கருவி ஆகியவற்றையும் கண்டுபிடித்தனர்.
    3:04 AM
    Anonymous said...
    ரால்ஃப் லாரன் (போலோ), லீவிஸ் ஸ்ட்ராஸ் (லீவிஸ் ஜீன்ஸ்), ஹோவர்டு ஸ்கல்ஸ் (ஸ்டார்பக்ஸ்), செர்ஜிபிரின் (கூக்ளி), மைக்கேல் டெல் (டெல் கம்யூட்டர்), லேரி எல்லிசன் (ஓராகள்), டொன்னா கரண் (DKHY),இர்வ் ராப்பின்ஸ் (பாஸ்கின்ஸ் & ராபின்ஸ்), பில்ரோசன்பர்க் (டன்கின் டொனட்ஸ்) ஆகியோர் தொழில் உலகில் முன்னணி முதலீட்டாளர்கள் ஆவர்.

    (2006 ல் அதிகாரத்தில் இருந்த யூதர்கள் மட்டும் )ரிச்சர்டு லெவின்,யேல் பல்கலைக்கழகத் தலைவர் ஒரு யூதர். அவரைப் போன்றே ஹென்ரி கிஸ்ஸிங்கர் (அமெரிக்கா உள்துறைச் செயலாளர்). ஆலன் கிரீன்ஸ் பான், ஜோசப் லிபர்மேன், மெடலின் ஆல்பிரைட் காஸ்பர் வீன்பர்கள், மேக்ஸிம் லிட்வினோவ். டேவிட் மார்ஷல் (சிங்கப்பூரின் முதல் முதலைமைச்சர்), ஐசக் இஸாக்ஸ் (ஆஸ்திரேலிய காவ்ர்னர் ஜெனரல்), பெஞ்சமின் டிஸ்ரேலி, யெவ்ஜனி பிரிமா கோவ் (ரஷ்யப் பிரதமர்), பாரி கோல்டு வாட்டர், ஜார்ஜ் ஸாம்போய் (போர்ச்சுகல் அதிபர்), ஜான் டெட்ஸ் (CIA, இயக்குநர்), ஹெர்ப் கிரே (கனடா துணைப் பிரதமர்), பியர்ரி மென்டஸ் (பிரான்ஸ் பிரதமர்), மைக்கேல் ஹோவர்டு (இங்கிலாந்து உள்துறைச் செயலாளர்), புரூனோ கிரிஸ்கி (ஆஸ்திரிய வேந்தர்), ராபர்ட் ரூபின் (அமெரிக்க நிதிச் செயலாளர்) ஆகியோரும் யூதர்களே.

    ஊடகத் துறையில், வோல்ஃப் பிளிட்சர் (CNN), பார்பரா வால்டர்ஸ் (ABC News), யூகின் மேயர் (வாஷிங்டன் போஸ்ட்), ஹென்ரி கிரன்வால்ட் (TIme - எடிட்டர்), காதரின் கிரஹாம் (வாஷிங்டன் போஸ்ட் அதிபர்), ஜோசப் லெலிட் (நியூயார்க் டைம்ஸ் எடிட்டர்), மேக்ஸ் ஃப்ரான்கல் (நியூயார்க் டைம்ஸ்) ஆகிய யூதர்கள் புகழ்பெற்று விளங்குகின்றனர்.

    ReplyDelete
  3. முகம்மது தன்னை இறைவனின் தூதர் என்று ஏற்றுக் கொள்ளாத யுதர்களை அரேபியாவை விட்டு கொடுரமாகக் கொன்று பயங்காட்டி விரட்டினார். இன்று அரேபியாவின் பெரும்பகுதி யுதர்கள் வாழ்ந்த பகுதிதான்.அவைகளைக் கணக்கெடுத்து திரும்பிக் கொடுத்துவிட அரபு நாடுகள் தயாரா ? குரல் கொடுக்க தாங்கள் தயாரா

    ReplyDelete