Thursday, February 16, 2012

'டார்வின்' சொன்ன தத்துவம்.


அனைத்து வகை உயிரினங்களும் ஆரம்பத்தில் ஒரே வகையாக இருந்து,பின்னர்தான் பல வகை படைப்புகளாக பரிணமித்தன;பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னாள்,நீரில் ஒரே ஒரு செல் மட்டும் தோன்றியது என்பது டார்வின் தத்துவம்.கி.பி.1809 இல் பிறந்த  டார்வின் 1882 இல் மரணமடைந்தார்.இயற்பியல் அறிஞ்சர் என்று போற்றப்பட்ட இந்த ஆங்கிலேயர் முதன் முதலில் பரிணாமக் கொள்கையை வெளியிட்டார்.
 புவியின் வயது 5000 மில்லியன் ஆண்டுகள் என்று மன்னூல் ஆராய்ச்சியாளர்கள் கணிதிரிக்கிரார்கள்.சுமார் 3000 ஆண்டுகளுக்கு முன்னர் தான்,மனிதன் வாழ்வதற்கு ஏற்ற இடமாக இப்பூமி மாறியதாம்.இதற்கேல்லாம் வலுவான எந்தவிதமான விஞ்ஞான ஆதாரங்கள் இல்லை.மரபியல் கூறுகளின் அறிகுறிகள் சிலவற்றை வைத்து இந்த தகவலை அவர்கள் தருகிறார்கள்.1882 இல் டார்வின் இறந்த பின்னரே " மரபியல் " கல்விக்கு அறிவியல் பூர்வமாக ஒரு அஸ்திவாரம் கண்டறியப்பட்டது என்பதி நினைவில் வைத்துக் கொள்ளவேண்டும்.



நவீன மரபியல் என்ன சொல்கிறது என்பதை பார்ப்போம்:



அனைத்து உயிரினங்களுக்கும் 'செல்'கள் உள்ளன.மரபியல் கூறுகளை சுமந்து கொண்டிருக்கிற 'செல்'களின் உட்கருவில் (Nucleis) அமையப் பெற்ற வண்ண உயிரிகளே குரும்சோம்கள் எனப்படுகிறது.மனிதன்,மிருகம்,பறப்பன,ஊர்வன மற்றும் தாவரங்கள் ஆகிய படைப்புகளில் குரும்சோம்கள் உள்ளன.பரம்பரை குணாதிசயங்கள் பண்புகள் இயல்புகள் முதலான பண்புகள் இந்த மரபுக்கூறுகள் தான் தீர்மானிக்கிறது.வடிவத்தில் ஏற்படும் எந்த பரிணாமமும் இந்த மரபுக்கூறுகள் மூலமே உண்டாக முடியும்.ஆனால் எந்த ஒரு படைப்பும் வித்தியாசமான வேறுவகைப் படைப்பாக ஒருபோதும் மாறாது.இது இயற்கைக்கு ஒவ்வாத விடயம்.

உயிரினங்களின் உயிரணுக்களில் இந்த குரும்சோம்கள் இருப்பது 1903 இல் தான் கண்டுபிடிக்கப்பட்டது.குரும்சோம்கள் என்பது சில மீட்டர்கள் நீளமுள்ள 'நத்தை' வடிவிலான ஓர் உயிரி என்றும் கண்டறியப்பட்டது.ஒரு மில்லி மீட்டரில் 10 லட்சம் பாகங்களில் 2.3 பாகங்கள் அளவு நீளமுள்ள இடத்தில் அது அடைபட்டுக் கொண்டு இருப்பதுதான் ஆச்சரியம்.அப்படியிருந்தும் அதை நம் கண்களால் நாம் காணமுடியும் என்பது தான் அதனை விடவும் ஆச்சரியம்.ஆனால் இது எவ்வாறு தோன்றுகிறது என்பது இன்னும் புரியாத புதிராகவே உள்ளது.'நத்தை' வடிவிலான இந்த குரும்சோம்கள் மிக நுணுக்கமான அணு அளவுள்ள மரபியல் கூறுகளை சுமக்கின்றனவாம்.!


குரும்சோம்கள் அல்லது நிறப்புரி

யூக்காரியோட்டிக் உயிரணுவின் பிரிகையின் பொழுது படியெடுக்கப்படும் நிறப்புரியின் படம். (1) நிறமியன்(Chromatid) – உயிரணுப் பிரிகையில் உருவேறும் நிலை எனப்படும் (S Phase) நிலைக்குப் பிறகு நிறப்புரியில் உள்ள ஒரேமாதிரியான இரண்டு படிகளில் (2) மையப்படி(Centromere) – இவ்விடத்தில் இரண்டு நிறமியன்களும் தொட்டுக்கொண்டு இருக்கும், இங்கே நுண்குழலிகள் (microtubules) ஒட்டிக்கொண்டு இணைப்பு கொள்ளுகின்றன. (3) குறுங்கை இழை. (4) நெடுங்கை இழை (wikipedia)


 இவ்விதம் உயிரணுக்களில் உள்ள குரும்சோம்கள் வகைக்கு வகை எண்ணிக்கையில் வித்தியாசப்படுகின்றன.உயிரினங்களின் வித்தியாசத்தைப் பகுத்துக் காட்டும் விதத்தில் இந்த வித்தியாசம் பெரிய அளவில் காணப்படுகின்றது.

குரங்கு வகைகளான கொரில்லா சிம்பன்சி முதலியவற்றில் 48 குரும்சோம்கள் உள்ளன என்று 1912 இல் அறிஞ்சர்கள் கண்டுபிடித்தனர்.இதே போல் மனிதனிலும் குரும்சோம்கள் 48 என்றே எல்லோரும் நினைத்துக் கொண்டிருந்தனர்.ஆனால் மனித செல்களில் உள்ள குரும்சோம்கள் எண்ணிக்கை 46 என 1956 கண்டுபிடிக்கப்பட்டது.இந்த அறிவியல்பூர்வமான கண்டுபிடிப்பு விவாதத்துக்கு இடமின்றி ஏற்றுக்கொள்ளப்பட்டது.

மனித குரும்சோம்கள்


வேறுபாடு 

இதிலிருந்து மனித செல்களில் உள்ள குரும்சோம்கள் எண்ணிக்கை குரங்கு வகைகளின் குரும்சோம்கள் எண்ணிக்கை வேறுபடுகிறது என்பது தெளிவாகிறது.குரங்கு குரங்காக தோன்றி நிலைத்துவிட்ட ஒரு உயிரினமாகும்.இதேபோலவே மனிதன் மனிதனாக தோன்றி நிலைத்துவிட்ட ஒரு உயிரினமாகும்.டார்வினின் தத்துவம் சுத்தப் பொய் என்பது இதிலிருந்து நிரூபணமாகிறது.

இதற்கிடையே 'ஒபாரின்' என்ற ரஷ்ய அறிவியலாளர் ஆதி மூலக் குழம்பிளிருந்துதான் முதன் முதலில் 'உயிரி மூலக்கூறுகள்' தோன்றின என்றார்.இவரது கருத்தும் மறுக்கப்பட்டு பல வருடங்கள் ஆகின்றன.உலகில் உயிரினத் தோற்றம்  'ஒபாரினின்' கருத்துப்படி கடலில் ஏற்படவில்லை  என்றும் அது களிமன்னில்தான் தோன்றியது என்றும் டாக்டர் கிரஹெம் கைரேன்ஸ் என்ற அறிவியலாளர் அண்மையில் அறிவித்தார்.இவர் கிளாஸ்கோ  பல்கலைக்கழகத்தின் மூத்த வேதியியல் நிபுணர் ஆவார்.


 'நாசா'வின் ஏமிஸ் ஆய்வு மையத்தில்ஆய்வு செய்துவந்த ஒரு குழுவின் ஆய்வு கைரேன்சின் ஆய்வுகளுக்கு மேலும் புதிய சாட்சியங்களை சேர்த்துக் கொடுத்தது.உயிர் தோன்றுவதற்கு இன்றியமையாத இரண்டு அடிப்படையான குணங்கள் சாதாரண களிமண்ணில் உள்ளன.அவையாவன.
  1. ஆற்றலை சேமித்து வைக்கும் திறமை.
  2. அதை ஒரு பொருளிலிருந்து இன்னொரு பொருளுக்கு மாற்றுகிற திறமை.

அருள்மறை


இனி முதல் மனிதர் எப்படி படைக்கப்பட்டார் குரான் என்ன சொல்கிறது என்று பார்ப்போம் :

நிச்சயமாக நாம் (ஆதி) மனிதரைக் களி மண்ணிலிருந்துள்ள சத்தினால் படைத்தோம்.
(23:12)

அவன்தான், உங்களைக் களிமண்ணிலிருந்து படைத்துப் பின்னர் (உங்களுக்கு ஒரு குறிப்பிட்ட) தவணையையும் ஏற்படுத்தியுள்ளான்; இன்னும், (உங்களைக் கேள்விகணக்கிற்கு எழுப்புவதற்காகக்) குறிக்கப்பட்ட தவணையும் அவனிடமே உள்ளது; அப்படியிருந்தும் நீங்கள் சந்தேகப்படுகிறீர்கள்.
(6:2)

அல்லாஹ்விடத்தில் நிச்சயமாக ஈஸாவின் உதாரணம் ஆதமின் உதாரணம் போன்றதே; அவன் அவரை மண்ணிலிருந்து படைத்துப் பின் “குன்” (ஆகுக) எனக் கூறினான்; அவர் (மனிதர்) ஆகிவிட்டார்.
(3:59)




முதல் மனிதர் களிமண்ணால் படைக்கப்பட்டார்,அடுத்தடுத்து மனிதர்கள் விந்தினால் படைக்கப்பட்டனர் என்ற கருத்தை குரான் சுமார் 15 இடங்களில் வலியுறுத்திக் கூறுகிறது.இதேபோல் மனித இனம் ஆரம்பத்திலிருந்து ஒரே மூலத்திலிருந் படைக்கப்பட்டது தான் என்றும் ஒரே ஆன்மாவிலிருந்தே மனித இனம் பல்கிப் பெருகியது என்றும் 5 இடம்களில் குரான் கூறுகிறது.




இங்கு பலருக்கு ஒரு சந்தேகம்.இஸ்ரேவேலர்கள் இறைச்சட்டங்கள் மீறி பூமியில் அக்கிரமம் புரிந்தபோது அவர்களைக் குரங்குகளாக இறைவன் மாற்றியதாக திருக்குரான்  குறிப்பிடுகிறது.


உங்க(ள் முன்னோர்க)ளிலிருந்து சனிக் கிழமையன்று (மீன் பிடிக்கக் கூடாது என்ற) வரம்பை மீறியவர்களைப்பற்றி நீங்கள் உறுதியாக அறிவீர்கள். அதனால் அவர்களை நோக்கி “சிறுமையடைந்த குரங்குகளாகி விடுங்கள்” என்று கூறினோம்.
(2:65)

 முந்தைய சமூக மக்கள் இப்படி குரங்குகளாக மாற்றப்பட்டார்கள் என்று குரான் மூன்று இடங்களில் கூறுகிறது.ஒரு வேளை டார்வினின் தத்துவத்தை இவ்வசனங்கள் வலியுருத்துவனவாக எடுத்துக் கொள்ளக் கூடாதா ??? இதுவே அந்த சந்தேகம்.

முதலில் மனித இனமே குரங்கிலிருந்து உருவானது என்பதே டார்வினின் கொள்கை.இஸ்ரேவேலர்கள் இடையில் வந்தவர்கள்.இரண்டாவதாக மனிதர்கள் குரங்குகளாக உருமாற்றப்பட்டார்கள் என்றே குரான் கூறுகிறது மற்றபடி குரங்குகள் மனிதர்களாக உருமாற்றப்பட்டார்கள் என்றல்ல.மூன்றாவதாக குரங்குகளாக மாற்றப்பட்ட அந்த தீய மனிதர்கள் சில தினங்களிலேயே அளிக்கப்பட்டு விட்டார்கள்.மேலும் வாரிசுகளும் அற்றுப்போனார்கள் என்று ஹதீஸ் கூறுகிறது.(முஸ்லிம்)




(படங்கள் - விக்கிபீடியா)



இந்த அறிவியல் கட்டுரை 
அறிவியல் தமிழ் அறிஞ்சர் 
  மணவை முஸ்தபா  
அவர்களால் எழுதப்பட்டது.




2 comments:

  1. அஸ்ஸலாமு அழைக்கும் , உங்களின் ஆக்கம் மிக சிறப்பை உள்ளது எனினும் குரான் இல் " அல்லாஹ் மனிதனை படைபதாய் மலக்குமார்களிடம் கூறும் பொது உலகத்தில் குழப்பம் விளைவித்து இரத்தம் ஓட்டக்கூடிய அவர்களை ஏன் படைக்கப் போகிறாய் என்று கேட்டதாக உள்ளது "" இவ்வாறு எனில் மலக்குமார்கள் எவ்வாறு மனிதனை பற்றி அறிந்தனர்?

    ReplyDelete
  2. பரிமாண மாற்றம் என்பது உடல் மாற்றம் மட்டும் அல்ல.. குரோமோசோம் கூட பரிமாணம் அடைந்திருக்கும்.. அதே குரோமோசோம் இருந்தால் நீங்கள் இன்னும் குரங்காகவே இருக்க வேண்டும்..

    ReplyDelete