Showing posts with label ஐயமும் தெளிவும். Show all posts
Showing posts with label ஐயமும் தெளிவும். Show all posts

Wednesday, March 7, 2012

சூனியம் - ஒரு பார்வை


விஞ்ஞான வளர்ச்சிகள் அதிகரித்துள்ள இன்றைய காலத்திலும் மக்கள் மத்தியில் மூட நம்பிக்கைகள் அதிகமாகவே காணப்படுகின்றன. மக்கள் சிந்திக்கத் தவறியதன் விளைவாக மூட நம்பிக்கைகளில் மூழ்கி ஒவ்வொருவரும் தம்மைத்தாமே அழித்துக் கொண்டிருக்கின்றனர். அப்படி மக்களை அழித்துக் கொண்டிருக்கும் மூட நம்பிக்கைகளில் ஒன்றுதான் 'சூனியம்' என்பதும்.

ஒருவன் மற்றொருவனுக்கு சூனியம் செய்துவிட்டால் போதும், அந்த சூனியத்தின் மூலமாக அவனைக் கொல்லவோ, கை கால்களை முடக்கவோ, தீராத நோய்களை உண்டாக்கவோ முடியும் என்று மக்கள் நம்புகின்றனர். இன்னும் சூனியத்தால் பல அற்புதங்கள் செய்ய முடியும் என்றும் நம்புகின்றனர்.

இவர்கள் நம்புவது போன்று சூனியத்தால் எதையும் செய்ய முடியும் என்றிருப்பின், தமக்குப் பிடிக்காத ஒரு சாரார் மற்றொரு சாராரை சூனியம் செய்து கொன்று விடலாமல்லவா? ஏன் கத்தி களையும், தடிகளையும் பெரும் ஆயுதங்களையும் தூக்கிக் கொண்டு கலவரம் செய்து கச்சேரி செல்ல வேண்டும்? சரி, குறைந்த பட்சம் சூனியம் செய்பவர்கள் அவர்களின் தொழிலிற்கு இடைறாக இருப்போரையாவது கொன்று சூனியத்தின் சக்தியை நிரூபிக்கலா மல்லவா?

பலர் சூனியத்தால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். அது ஏன்? எப்படி? என்று நமக்குச் சந்தேகம் எழுவது எதார்த்தமானதே.! இதை நாம் நன்றாக அறிந்து கொண்டால் இவ்வாறு ஏற்படும் சந்தேகங்களைத் தவிர்க்கலாம்.

சூனியம் என்பது மனதைக் குழப்பும் ஒரு கலை, இந்த கலையைச் செய்வதால் அவர்கள் மனக்குழப்பத்திற்கு உள்ளாகி சூனியத்தின் பெயரால் ஒவ்வொருவரும் தமக்குத்தாமே பாதிப்பை ஏற்படுத்திக் கொள்கிறார்களே தவிர, உண்மையில் எவ்விதப் பாதிப்பையும் சூனியம் ஏற்படுத்துவதில்லை.

ஒரு மனிதன் நன்றாகவே இருப்பான். அவனுக்கு எந்தக் குறையும் இருக்காது. அவனிடம் எவனாவது உனக்கு இன்ன ஆள் சூனியம் செய்து விட்டான் என்று மட்டும் கூறிவிட்டால் போதும், அவன் தன் மனதில் பல கற்பனைகளை வளர்த்து குழப்பமடைந்து தனக்கு ஏதோ நிகழப்போகிறது என்று எண்ணும் காரணத்தால் இவனாகவே பல பிரச்சனைகளை உருவாக்கிக் கொள்கிறான்.

உண்மையை அறிய வேண்டுமானால் மூட நம்பிக்கையில் மூழ்கியிருக்கும் ஒருவனைச், சோதிப்பதற்காக உனக்கு சூனியம் செய்யப்பட்டுள்ளது என்று சொல்லிப் பாருங்களேன்! அன்று முதலே அவன் அதிர்ச்சியில் அலைவதைக் காண்பீர்கள்.

 சூனியம் மனிதனுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது சுத்தப் பொய். இதைத் தெளிவாக தெரிந்தும் கூட மார்க்க அறிஞர்கள் என்று பெருமையடித்துக் கொள்பவர்கள் தகடு, தாயத்து, முட்டையில் எழுதுதல், அஸ்மா வேலைகள் என்று மக்களை ஏமாற்றுகின்றனர். இறைவனுடைய பாதையைவிட்டும் மக்களை வழிதவறச் செய்கின்றனர். இந்த லெப்பைகள் தங்கள் தொப்பைகளை வளர்க்க வேண்டும் என்பதற்காக மனித இனத்தை வழிகெடுப்பதைப் பார்க்கும் சிலர் இஸ்லாத்திலும் மூட நம்பிக்கைகள் உண்டு என்று எண்ணுகிறார்கள். அவர்கள் நன்கு தெரிந்து கொள்ளட்டும், இஸ்லாத்தில் மூட நம்பிக்கை என்பது கடுகளவும் கிடையாது. இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்கள் காலத்திற்குப் பின்பு åதர்கள் தங்கள் கைச்சரக்குகளை முஸ்லிம் மக்கள் மத்தியில் புகுத்தியதன் காரணமாகத்தான் முஸ்லிம்கள் மத்தியில் மூட நம்பிக்கைகள் வளர்ந்தன.

ஒவ்வொருவரும் தம் விருப்பத்திற்கு ஏற்பச் சட்டங்களை வளைத்துக் கொள்வது இஸ்லாமியச் சட்டமாகவோ கொள்கையாகவோ ஆகிவிடாது. இறைவனால் கொடுக்கப்பட்ட குர்ஆன் கூறுவதும்; அவனால் அனுப்பப்பட்ட இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்கள் வாழ்ந்து காண்பித்த வாழ்க்கை முறையும் தான் இஸ்லாம் என்பதைத் தெரிந்து கொள்ளட்டும்.

சூனியம் செய்து மூட நம்பிக்கைகளை உண்டாக்கி வழி கெடுப்பது அழிவை உண்டாக்கும் ஏழு பாவங்களில் ஒன்று என்று இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.

 சூனியம் என்பது ஒரு கலை தானே, அதை ஏன் இஸ்லாம் தடைசெய்கிறது என்று நமக்குச் சந்தேகம் எழலாம். நன்மையான செயல்களை உண்டாக்கும் கலை என்றால் அதை இஸ்லாம் நிச்சயம் தடை செய்திருக்காது. ஆனால் சூனியக்கலை மக்களை இறை நிராகரிப்பிற்கு இழுத்துச் செல்வதாலும் மக்கள் ஏமாற்றப்படுவதா லும் இஸ்லாம் அதைத் தடை செய்கிறது.


கண்களை ஏமாற்றுவதே சூனியம்


மூஸா(அலை) அவர்களை எதிர்ப்பதற்காக பிர்அவ்ன் சூனியக் காரர்களை ஒன்று திரட்டினான். அவர்கள் செய்த சூனியம் எந்த அளவிற்கு இருந்தது என்பதை இறைவன் திருக்குர்ஆனில் குறிப்பிடுகின்றான்.

(அவர்கள் எறிந்த) கயிறுகளும் அவர்களுடைய தடிகளும் சூனியத்தால் (பாம்புகளாகி) நெளிந்தோடுவது போல் அவருக்கு மூஸா(அலை) தோன்றியது. (அல்குர்ஆன் 20.66)

அந்த சூனியக்காரர்கள் எறிந்த கயிறுகளும், தடிகளும் பாம்புகளாக மாறவில்லை; பாம்புகள் போன்று தான் காட்சியளித்தன என்று இறைவன் தெளிவாகக் கூறுகின்றான். இந்த வசனத்தில் இறைவன்''யுகய்யலு'', என்ற வார்த்தையைப் பயன்படுத்தி யுள்ளான். இல்லாத ஒன்றை இருப்பது போன்று காண்பித்தல், மாயையை ஏற்படுத்துதல் என்பது இதன் பொருளாகும்.

சூனியம் (ஸிஹ்ர்) என்ற கலையின் மூலம் இல்லாத ஒன்றை இருப்பது போன்று காண்பிக்க முடியும் என்பது இதன் மூலம் தெளிவாகிறது. அப்படியானால் அதைக் கொண்டு ஏதும் தீங்கு செய்ய முடியுமா என்ற ஐயம் வரலாம்.

சூனியக்காரன் எங்கு சென்றாலும் வெற்றி பெறமாட்டான். (அல்குர்ஆன் 20.69)

''கணவன் மனைவி இடையே பிரிவினையை உண்டாக்கும் செயலை அவர்களிடமிருந்து கற்றுக் கொண்டார்கள். எனினும் அல்லாஹ்வின் கட்டளையின்றி அவர்கள் எவருக்கும் எத்தகைய தீங்கும் இதன் மூலம் இழைக்க முடியாது.'' (அல்குர்ஆன் 2.102)

என்னதான் சூனியம் செய்தாலும் அல்லாஹ்வின் நாட்டமின்றி யாருக்கும் எவ்விதத் தீங்கும் செய்ய முடியாது என்பது இந்த வசனத்தின் மூலம் தெளிவாகிறது. அப்படியே அது தீங்கு செய்தாலும் மனதில் குழப்பத்தை உண்டாக்கி, கணவன் மனைவிக் கிடையே பிரிவினையைத்தான் உண்டு பண்ண முடியுமே தவிர வேறு எதுவும் செய்ய முடியாது என்பதையும் இந்த வசனத்தில் இறைவன் தெளிவாக்கி விட்டான்.

ஷைத்தான் மனிதனை வழிகெடுக்க ஏற்படுத்திய சசூழ்ச்சிகளில் ஒன்றுதான் சூனியம் என்ற உண்மையை விளங்கிக் கொண்டால் குழப்பம் ஏற்படாது.

நீ என்னைக் கெட்டவனாக (வெளியேற்றி) விட்டதன் காரணத்தால் (ஆதமின் சந்ததியினரான) அவர்கள் உன்னுடைய நேரான பாதையில் (செல்லாது தடுப்பதற்காக அவ்வழியில்) உட்கார்ந்து கொள்வேன். பின்பு நிச்சயமாக நான் அவர்கள் முன்பும், அவர்கள் பின்பும், அவர்கள் வலப்பக்கத்திலும், அவர்கள் இடப்பக்கத்திலும் வந்து (வழிகெடுப்பதற்கான அனைத்து முறைகளையும் கையாண்டு அவர்களை வழி கெடுத்துக்) கொண்டிருப்பேன்; ஆதலால் நீ அவர்களில் பெரும்பாலானோரை (உனக்கு) நன்றி செலுத்துபவர்களாக காணமாட்டாய் என்று (இப்லீஸ்) கூறினான். (அல்குர்ஆன் 7:16,17)

உன் கண்ணியத்தின் மீது ஆணையாக, அவர்களில் அந்தரங்கச் சுத்தியான உன் அடியார்களைத் தவிர நிச்சயமாக அவர்கள் யாவரையும் நான் வழிகெடுப்பேன் என்றும் (இப்லீஸ்) கூறினான்.

(அதற்கு) அதுவே உண்மை; உண்மையையே நானும் கூறுகிறேன். நிச்சயமாக உன்னைக் கொண்டும், உன்னைப் பின்பற்றுவோர்கள் அனைவரைக் கொண்டும் நரகத்தை நான் நிரப்புவேன் என்று இறைவன் கூறினான். (அல்குர்ஆன் 38:82-85)

மனிதனை வழிகெடுத்து நரகத்தில் சேர்ப்பதற்கான வழிகள் என்னவெல்லாம் இருக்கின்றனவோ அவை அனைத்தையும் ஷைத்தான் கையாண்டு வழிகெடுப்பான் என்பதும் அதற்கு இறைவனும் அவனுக்கு அனுமதி கொடுத்து விட்டான் என்பதும் மேற்காணும் வசனங்களின் மூலம் நமக்குத் தெளிவாகிறது.

இன்று ஷைத்தான் பல வழிகளிலும் மனிதனுடைய உள்ளத்தில் ஊடுருவி வழிகெடுத்துக் கொண்டிருக்கின்றான். அவற்றில் ஒன்று தான் சூனியம் என்பது.

ஷைத்தான்கள் தாம் நிராகரிப்பவர்கள்; அவர்கள் தாம் மனிதர்களுக்கு சூனியத்தைக் கற்றுக் கொடுத்தனர். (அல்குர்ஆன் 2:102)

ஷைத்தான் சூனியத்தைக் கற்றுக் கொடுத்து அந்த சூனியக்காரர்களுக்கு அவன் உதவி செய்யும் காரணத்தால்தான் மனதில் குழப்பத்தை ஏற்படுத்தி கணவர் மனைவியிடையே பிரிவினையை உண்டாக்க முடிகிறது.

மனதில் குழப்பத்தை உண்டாக்குவதில் ஷைத்தான் மிகத் தீவிரமானவன், திறமையானவன்!

எனினும் (ஆதம், ஹவ்வா ஆகிய) அவ்விருவருக்கும் மறைந்திருக்கும் அவர்களுடைய (உடலை) மானத்தை அவர்களுக்கு வெளிப்படுத்தும் பொருட்டு ஷைத்தான் அவ்விருவரின் உள்ளங்களில் (தவறான எண்ணங்களை) ஊசலாடச் செய்தான்.

ஆதம்(அலை) அவர்களையே ஆட்டிப் பார்த்த அவனுக்கு, பிற மனிதர்களை வழிகெடுப்பது ஒன்றும் கடினமல்ல. பிறருடைய உள்ளத்தில் ஊசலாட்டம் செய்வது, அவனுக்கு இலகுவான செயல்! அந்த அடிப்படையில் சூனியத்தின் மூலம் மனிதர்களுடைய உள்ளங்களில் ஊசலாட்டத்தை உண்டு பண்ணி அவர்களைக் கோவில், தர்கா, போன்ற இடங்களுக்கோ அல்லது சூனியக்காரன் வசிக்கும் இடத்திற்கோ இழுத்துச் சென்று இறைமறுப்பாளர்களாக ஆக்கி தன் இலட்சியத்தில் வெற்றி காண்கிறான்.

இதை அறியாத மக்கள் அவனுடைய அச்சசூழ்ச்சிக்குள்ளாகி தங்களை அழிவின் பக்கம் கொண்டு செல்கின்றனர். ஷைத்தானுடைய சூழ்ச்சி எப்படி இருப்பினும் உண்மையான இறை நல்லடியார்களிடம் அது செல்லாது என்பதையும் 38:33 வது வசனத்தில் இறைவன் தெரிவிக்கின்றான்.

''சூனியம், ஷைத்தானின் சூழ்ச்சிகளில் ஒன்று'' நல்லடியார்களிடம் ஷைத்தானுடைய சூழ்ச்சி செல்லாது என்றால் இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்களுக்கு ஏன் சூனியத்தால் பாதிப்பு ஏற்பட்டது என்ற ஐயம் இப்போது நமக்கு வந்திருக்கும்.

ஆம்! இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டது உண்மை தான். அதன் விளைவாக அவர்கள், தாம் செய்த வேலையைச் செய்யவில்லை என்றும், தாம் செய்யாத ஒன்றைச் செய்தது போன்றும் எண்ணிக்கொண்டு சிறிது காலம் மனத்தடுமாற்றத்தில் இருந்தார்கள். தாம் சூனியம் செய்யப்பட்டிருந்ததும் அவர்களுக்குத் தெரியவில்லை. அல்லாஹ் தான் வானவர்கள் மூலம் இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்களுக்குத் தெரிவித்தான். அதற்கு தீர்வையும் கூறினான் என்பதை நாம் புகாரியில் இடம் பெற்றுள்ள ஹதீஸின் வாயிலாக அறிகின்றோம்.

இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டது. அதன் காரணமாக அவர்கள், தாம் செய்யாத ஒரு செயலைச் செய்திருப்பதாக அவர்களுக்கு(குறுகிய காலத்தில்) மாயை ஏற்படுத்திக் கொண்டிருந்தது. அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி) நூல்: புகாரி.

இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்கள் தாம் செய்யாத செயலைச் செய்தது போன்று மாயை ஏற்படும் அளவிற்கு அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டது. இறுதியில் ஒருநாள் அவர்கள் பிரார்த்தனை செய்த வாறு இருந்தார்கள். அதன் பிறகு : ''என்(மீது செய்யப்பட்டுள்ள சசூனியத்திற்கான) நிவாரணம் எதில் உள்ளதோ, அதை எனக்கு அல்லாஹ் அறிவித்து விட்டதை நீ அறிவாயா? என்னிடம் (கனவில்) இரண்டு நபர் (இருவானவர்களான ஜிப்ரயிலும் மீக்காயிலும்) வந்தனர். அவர்களில் ஒருவர் (ஜிப்ரயில்) என் தலைமாட்டில் அமர்ந்தார். மற்றொருவர் (மீக்காயில்) என் கால்மாட்டில் அமர்ந்தார்.

ஒருவர் மற்றொருவரிடம் ''இந்த மனிதரை பீடித்துள்ள நோய் என்ன'' என்று கேட்டார். மற்றொருவர்(ஜிப்ரீல்) ''இவருக்கு சூனியம் செய்யப்பட்டுள்ளது'' என்று பதிலளித்தார். அதற்கு அவர் ''இவருக்கு சசூனியம் செய்தது யார்?'' என்று கேட்டார் .அவர்(பதிலுக்கு) ''லபீத் இப்னு அஃஸம் (என்னும் åதன்)'' என்று பதிலளித்தார். ''(அவன் சூனியம் வைத்தது) எதில்?'' என்று அவர்(மீக்காயில்) கேட்க அதற்கு, ''சீப்பிலும், (இவரது) முடியிலும், ஆண்(பேரிச்சம்) பாளையின் உறையிலும்'' என்று (ஜிப்ரீல்) பதிலளித்தார். அதற்கு அவர், ''அது எங்கே இருக்கிறது'' என்று கேட்க, ''(பனூ ஸுரைக் குலத்தாரின் தோட்டத்திலுள்ள) 'தர்வான்' எனும் கிணற்றில் '' என்று பதிலளித்தார்கள் என்று, இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்கள் கூறிவிட்டு அந்தக் கிணற்றை நோக்கிப் புறப்பட்டார்கள்; பிறகு திரும்பி வந்தார்கள். திரும்பி வந்த போது என்னிடம், ''அந்தக் கிணற்றிலிருக்கும் பேரீச்ச மரங்கள் ஷைத்தான்களின் தலைகளைப் போல் உள்ளன'' என்று கூறினார்கள். நான், ''அதைத் தாங்கள் வெளியே எடுத்தீர்களா'' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ''இல்லை. என்னை அல்லாஹ் குணப்படுத்தி விட்டான்.(அதை வெளியே எடுத்தால்) அது மக்களிடையே(சூனியக்கலை பரவக் காரணமாகி) குழப்பத்தைக் கிளப்பிவிடும் என்று நான் அஞ்சினேன்'' என்று பதிலளித்தார்கள். பிறகு அந்தக் கிணறு தூர்க்கப்பட்டு விட்டது. அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி) நூல்: புகாரி

இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்களுக்குச் சூனியம் வைத்ததும் அது நிகழ்ந்ததும் உண்மையென்பதை மேற்கண்ட ஹதீஸ்கள் தெளிவாக்குகின்றன. ஆனால் அது ஏன் நிகழ்ந்தது என்பதைச் சிந்திக்கத் தவறி இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்களுக்கே சூனியம் பாதித்துவிட்டது என்றால் அது நம்மை விட்டு வைக்குமா என்று மட்டும் எண்ணிக் கொண்டிருக்கிறோம்.

இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்களின் இச்சம்பவத்தின் மூலம் இறைவன் நமக்கு ஏராளமான படிப்பினைகளைத் தந்துள்ளான். நாம் அவற்றைக் கவனிக்க வேண்டும்.

1. சூனியம் என்பது மனத்தடுமாற்றத்தை ஏற்படுத்துவதைத் தவிர வேறொன்றும் செய்துவிடாது.

2. இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்களும் மனிதர்தான். அவர்கள் இறைத்தன்மையைப் பெற்றவரோ, வானவர்களின் பண்புகளைப் பெற்றவரோ இல்லை. இறைத்தூதர் என்பதால் மனிதர்களில் உயர்ந்தவர் என்ற சிறப்புதான் அவர்களுக்கு உண்டு.

3. ஒருவன் மற்றொருவனுக்கு, சூனியம் செய்துவிட்டால், அதை சசூனியம் செய்யப்பட்டவன் அறிந்து கொள்ள முடியாது அல்லது மற்றொரு சூனியக்காரனிடம் சென்று கேட்டாலும் அவனும் அதை அறிந்திருக்க முடியாது. அப்படி யாரும் அறிந்து கொள்ள முடியும் என்றிருப்பின் இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்கள்தான் முதலில் அதை அறிந்திருக்க முடியும். அவர்களுக்கே அல்லாஹ்தான் தன் வானவர்கள் மூலமாக அறிவித்தான். ஒருவன் மற்றொருவனுக்கு சூனியம் செய்துவிட்டான் என்பதை சசூனியம் செய்தவனும் அல்லாஹ்வும் மட்டுமே அறிய முடியும். எனவேதான் சூனியம் செய்யப்பட்டிருப்போமோ என்று எவரும் குழப்பமடைய வேண்டிய அவசியமில்லை.

4. அப்படியே தனக்கு சூனியம் செய்யப்பட்டதை ஒருவன் அறிந்து கொண்டாலும், அதற்கான தீர்வு உலகத்தில் எங்கும் கிடையாது. அல்லாஹ்விடத்தில் மட்டுமே இருக்கிறது. எனவே அவனிடமே பாதுகாப்பு தேட வேண்டும். சூரத்துல் ஃபலக், சூரத்துன்னாஸ் ஆகிய அத்தியாயங்களை அருளி இறைவன் தன்னிடம் மட்டுமே ஒவ்வொரு தீங்கை விட்டும் பாதுகாவல் தேடுமாறு இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்களுக்கும் அவர்கள் சமுதாயத்தினருக்கும் கட்டளை யிட்டுள்ளான்.

இறைவன் காட்டித்தந்துள்ள, தீர்வை விட்டு விட்டு நாம் நமது விருப்பத்திற்கு இணங்கி கோவில், தர்கா போன்ற இடங்கள் சென்று தீர்வைத் தேடினாலோ மற்றொரு சூனியக்காரனிடம் சென்று தீர்வைக் கேட்டாலோ நிச்சயம் வெற்றி பெற முடியாது. மறுமையிலும் இறைவனிடம் தண்டனை கிடைக்கும் என்பதில் ஏதும் ஐயமில்லை.

வானவர்கள்தான் மனிதர்கள் மத்தியில் சூனியத்தை பரப்பினார்கள் என்றும் ஒரு கதை கட்டி விடப்பட்டுள்ளது. இது யூதர்களின்  நாச வேலையில் ஒன்று என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். வானவர்கள் ஒரு போதும் சூனியத்தைப் பரப்பவில்லை என்ற விஷயத்தை 2:102 வசனத்தின் விளக்கவுரைகளை நன்றாகக் கவனிக்கும் போது நம்மால் கண்டு கொள்ள முடியும். இந்த அளவிற்கு பெரும் குழப்பத்தை உண்டாக்கி மக்களைக் கெடுக்கும் சூனியத்தை எவன் செய்கின்றானோ அவன் தனக்குத்தானே அழிவைத் தேடிக் கொள்கிறான். இப்பெரும் பாவத்திலிருந்து இறைவன் மனித இனத்தைக் காப்பானாக!





ஆக்கம் 

M.M.அப்துல் காதிர் உமரி
"அந்த ஏழு பாவங்கள்"




Thursday, February 16, 2012

'டார்வின்' சொன்ன தத்துவம்.


அனைத்து வகை உயிரினங்களும் ஆரம்பத்தில் ஒரே வகையாக இருந்து,பின்னர்தான் பல வகை படைப்புகளாக பரிணமித்தன;பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னாள்,நீரில் ஒரே ஒரு செல் மட்டும் தோன்றியது என்பது டார்வின் தத்துவம்.கி.பி.1809 இல் பிறந்த  டார்வின் 1882 இல் மரணமடைந்தார்.இயற்பியல் அறிஞ்சர் என்று போற்றப்பட்ட இந்த ஆங்கிலேயர் முதன் முதலில் பரிணாமக் கொள்கையை வெளியிட்டார்.
 புவியின் வயது 5000 மில்லியன் ஆண்டுகள் என்று மன்னூல் ஆராய்ச்சியாளர்கள் கணிதிரிக்கிரார்கள்.சுமார் 3000 ஆண்டுகளுக்கு முன்னர் தான்,மனிதன் வாழ்வதற்கு ஏற்ற இடமாக இப்பூமி மாறியதாம்.இதற்கேல்லாம் வலுவான எந்தவிதமான விஞ்ஞான ஆதாரங்கள் இல்லை.மரபியல் கூறுகளின் அறிகுறிகள் சிலவற்றை வைத்து இந்த தகவலை அவர்கள் தருகிறார்கள்.1882 இல் டார்வின் இறந்த பின்னரே " மரபியல் " கல்விக்கு அறிவியல் பூர்வமாக ஒரு அஸ்திவாரம் கண்டறியப்பட்டது என்பதி நினைவில் வைத்துக் கொள்ளவேண்டும்.



நவீன மரபியல் என்ன சொல்கிறது என்பதை பார்ப்போம்:



அனைத்து உயிரினங்களுக்கும் 'செல்'கள் உள்ளன.மரபியல் கூறுகளை சுமந்து கொண்டிருக்கிற 'செல்'களின் உட்கருவில் (Nucleis) அமையப் பெற்ற வண்ண உயிரிகளே குரும்சோம்கள் எனப்படுகிறது.மனிதன்,மிருகம்,பறப்பன,ஊர்வன மற்றும் தாவரங்கள் ஆகிய படைப்புகளில் குரும்சோம்கள் உள்ளன.பரம்பரை குணாதிசயங்கள் பண்புகள் இயல்புகள் முதலான பண்புகள் இந்த மரபுக்கூறுகள் தான் தீர்மானிக்கிறது.வடிவத்தில் ஏற்படும் எந்த பரிணாமமும் இந்த மரபுக்கூறுகள் மூலமே உண்டாக முடியும்.ஆனால் எந்த ஒரு படைப்பும் வித்தியாசமான வேறுவகைப் படைப்பாக ஒருபோதும் மாறாது.இது இயற்கைக்கு ஒவ்வாத விடயம்.

உயிரினங்களின் உயிரணுக்களில் இந்த குரும்சோம்கள் இருப்பது 1903 இல் தான் கண்டுபிடிக்கப்பட்டது.குரும்சோம்கள் என்பது சில மீட்டர்கள் நீளமுள்ள 'நத்தை' வடிவிலான ஓர் உயிரி என்றும் கண்டறியப்பட்டது.ஒரு மில்லி மீட்டரில் 10 லட்சம் பாகங்களில் 2.3 பாகங்கள் அளவு நீளமுள்ள இடத்தில் அது அடைபட்டுக் கொண்டு இருப்பதுதான் ஆச்சரியம்.அப்படியிருந்தும் அதை நம் கண்களால் நாம் காணமுடியும் என்பது தான் அதனை விடவும் ஆச்சரியம்.ஆனால் இது எவ்வாறு தோன்றுகிறது என்பது இன்னும் புரியாத புதிராகவே உள்ளது.'நத்தை' வடிவிலான இந்த குரும்சோம்கள் மிக நுணுக்கமான அணு அளவுள்ள மரபியல் கூறுகளை சுமக்கின்றனவாம்.!


குரும்சோம்கள் அல்லது நிறப்புரி

யூக்காரியோட்டிக் உயிரணுவின் பிரிகையின் பொழுது படியெடுக்கப்படும் நிறப்புரியின் படம். (1) நிறமியன்(Chromatid) – உயிரணுப் பிரிகையில் உருவேறும் நிலை எனப்படும் (S Phase) நிலைக்குப் பிறகு நிறப்புரியில் உள்ள ஒரேமாதிரியான இரண்டு படிகளில் (2) மையப்படி(Centromere) – இவ்விடத்தில் இரண்டு நிறமியன்களும் தொட்டுக்கொண்டு இருக்கும், இங்கே நுண்குழலிகள் (microtubules) ஒட்டிக்கொண்டு இணைப்பு கொள்ளுகின்றன. (3) குறுங்கை இழை. (4) நெடுங்கை இழை (wikipedia)


 இவ்விதம் உயிரணுக்களில் உள்ள குரும்சோம்கள் வகைக்கு வகை எண்ணிக்கையில் வித்தியாசப்படுகின்றன.உயிரினங்களின் வித்தியாசத்தைப் பகுத்துக் காட்டும் விதத்தில் இந்த வித்தியாசம் பெரிய அளவில் காணப்படுகின்றது.

குரங்கு வகைகளான கொரில்லா சிம்பன்சி முதலியவற்றில் 48 குரும்சோம்கள் உள்ளன என்று 1912 இல் அறிஞ்சர்கள் கண்டுபிடித்தனர்.இதே போல் மனிதனிலும் குரும்சோம்கள் 48 என்றே எல்லோரும் நினைத்துக் கொண்டிருந்தனர்.ஆனால் மனித செல்களில் உள்ள குரும்சோம்கள் எண்ணிக்கை 46 என 1956 கண்டுபிடிக்கப்பட்டது.இந்த அறிவியல்பூர்வமான கண்டுபிடிப்பு விவாதத்துக்கு இடமின்றி ஏற்றுக்கொள்ளப்பட்டது.

மனித குரும்சோம்கள்


வேறுபாடு 

இதிலிருந்து மனித செல்களில் உள்ள குரும்சோம்கள் எண்ணிக்கை குரங்கு வகைகளின் குரும்சோம்கள் எண்ணிக்கை வேறுபடுகிறது என்பது தெளிவாகிறது.குரங்கு குரங்காக தோன்றி நிலைத்துவிட்ட ஒரு உயிரினமாகும்.இதேபோலவே மனிதன் மனிதனாக தோன்றி நிலைத்துவிட்ட ஒரு உயிரினமாகும்.டார்வினின் தத்துவம் சுத்தப் பொய் என்பது இதிலிருந்து நிரூபணமாகிறது.

இதற்கிடையே 'ஒபாரின்' என்ற ரஷ்ய அறிவியலாளர் ஆதி மூலக் குழம்பிளிருந்துதான் முதன் முதலில் 'உயிரி மூலக்கூறுகள்' தோன்றின என்றார்.இவரது கருத்தும் மறுக்கப்பட்டு பல வருடங்கள் ஆகின்றன.உலகில் உயிரினத் தோற்றம்  'ஒபாரினின்' கருத்துப்படி கடலில் ஏற்படவில்லை  என்றும் அது களிமன்னில்தான் தோன்றியது என்றும் டாக்டர் கிரஹெம் கைரேன்ஸ் என்ற அறிவியலாளர் அண்மையில் அறிவித்தார்.இவர் கிளாஸ்கோ  பல்கலைக்கழகத்தின் மூத்த வேதியியல் நிபுணர் ஆவார்.


 'நாசா'வின் ஏமிஸ் ஆய்வு மையத்தில்ஆய்வு செய்துவந்த ஒரு குழுவின் ஆய்வு கைரேன்சின் ஆய்வுகளுக்கு மேலும் புதிய சாட்சியங்களை சேர்த்துக் கொடுத்தது.உயிர் தோன்றுவதற்கு இன்றியமையாத இரண்டு அடிப்படையான குணங்கள் சாதாரண களிமண்ணில் உள்ளன.அவையாவன.
  1. ஆற்றலை சேமித்து வைக்கும் திறமை.
  2. அதை ஒரு பொருளிலிருந்து இன்னொரு பொருளுக்கு மாற்றுகிற திறமை.

அருள்மறை


இனி முதல் மனிதர் எப்படி படைக்கப்பட்டார் குரான் என்ன சொல்கிறது என்று பார்ப்போம் :

நிச்சயமாக நாம் (ஆதி) மனிதரைக் களி மண்ணிலிருந்துள்ள சத்தினால் படைத்தோம்.
(23:12)

அவன்தான், உங்களைக் களிமண்ணிலிருந்து படைத்துப் பின்னர் (உங்களுக்கு ஒரு குறிப்பிட்ட) தவணையையும் ஏற்படுத்தியுள்ளான்; இன்னும், (உங்களைக் கேள்விகணக்கிற்கு எழுப்புவதற்காகக்) குறிக்கப்பட்ட தவணையும் அவனிடமே உள்ளது; அப்படியிருந்தும் நீங்கள் சந்தேகப்படுகிறீர்கள்.
(6:2)

அல்லாஹ்விடத்தில் நிச்சயமாக ஈஸாவின் உதாரணம் ஆதமின் உதாரணம் போன்றதே; அவன் அவரை மண்ணிலிருந்து படைத்துப் பின் “குன்” (ஆகுக) எனக் கூறினான்; அவர் (மனிதர்) ஆகிவிட்டார்.
(3:59)




முதல் மனிதர் களிமண்ணால் படைக்கப்பட்டார்,அடுத்தடுத்து மனிதர்கள் விந்தினால் படைக்கப்பட்டனர் என்ற கருத்தை குரான் சுமார் 15 இடங்களில் வலியுறுத்திக் கூறுகிறது.இதேபோல் மனித இனம் ஆரம்பத்திலிருந்து ஒரே மூலத்திலிருந் படைக்கப்பட்டது தான் என்றும் ஒரே ஆன்மாவிலிருந்தே மனித இனம் பல்கிப் பெருகியது என்றும் 5 இடம்களில் குரான் கூறுகிறது.




இங்கு பலருக்கு ஒரு சந்தேகம்.இஸ்ரேவேலர்கள் இறைச்சட்டங்கள் மீறி பூமியில் அக்கிரமம் புரிந்தபோது அவர்களைக் குரங்குகளாக இறைவன் மாற்றியதாக திருக்குரான்  குறிப்பிடுகிறது.


உங்க(ள் முன்னோர்க)ளிலிருந்து சனிக் கிழமையன்று (மீன் பிடிக்கக் கூடாது என்ற) வரம்பை மீறியவர்களைப்பற்றி நீங்கள் உறுதியாக அறிவீர்கள். அதனால் அவர்களை நோக்கி “சிறுமையடைந்த குரங்குகளாகி விடுங்கள்” என்று கூறினோம்.
(2:65)

 முந்தைய சமூக மக்கள் இப்படி குரங்குகளாக மாற்றப்பட்டார்கள் என்று குரான் மூன்று இடங்களில் கூறுகிறது.ஒரு வேளை டார்வினின் தத்துவத்தை இவ்வசனங்கள் வலியுருத்துவனவாக எடுத்துக் கொள்ளக் கூடாதா ??? இதுவே அந்த சந்தேகம்.

முதலில் மனித இனமே குரங்கிலிருந்து உருவானது என்பதே டார்வினின் கொள்கை.இஸ்ரேவேலர்கள் இடையில் வந்தவர்கள்.இரண்டாவதாக மனிதர்கள் குரங்குகளாக உருமாற்றப்பட்டார்கள் என்றே குரான் கூறுகிறது மற்றபடி குரங்குகள் மனிதர்களாக உருமாற்றப்பட்டார்கள் என்றல்ல.மூன்றாவதாக குரங்குகளாக மாற்றப்பட்ட அந்த தீய மனிதர்கள் சில தினங்களிலேயே அளிக்கப்பட்டு விட்டார்கள்.மேலும் வாரிசுகளும் அற்றுப்போனார்கள் என்று ஹதீஸ் கூறுகிறது.(முஸ்லிம்)




(படங்கள் - விக்கிபீடியா)



இந்த அறிவியல் கட்டுரை 
அறிவியல் தமிழ் அறிஞ்சர் 
  மணவை முஸ்தபா  
அவர்களால் எழுதப்பட்டது.




Friday, January 20, 2012

உயிரினம் உருவானது எப்படி ?





உயிரினம் உருவானது பற்றி டார்வின் (1809 - 1882 ) மற்றும் கிளவுட் பெர்னாட் ( 1813 - 1878 ) ஆகிய அறிஞ்சர்கள் தெரிவித்துள்ள கருத்தைத்தான் நாம் அனைவரும்  அறிந்து வைத்துள்ளோம்.மனித இனம் தண்ணீரிலிருந்து ஆரம்பமானது என்று கூறும் இந்த அறிஞ்சர்கள்,உயிரினங்களின் உதயமும்,நீரில் ஒரே செல்லாக இருந்து பின்னர் பல்லாயிரம் ஆண்டுகளில் படிப்படியாக வளர்ந்து பலவகை உயிரினங்களாக பரிணமித்தது என்று கருதுகிறார்கள்.இதை விளக்கும் முகமாக அனேக பல அனுமானக்கருத்துக்களை அல்லிவீசுகின்றனர்.இருப்பினும் இவர்களின் கூற்றை உறுதி செய்யக் கூடிய அறிவியல் சான்றுகள்,ஆராச்சி பூர்வமான ஆதாரங்கள் ஒன்றும் கிடையாது.

உயிரினம் உருவானது எப்படி என்பது பற்றி அறிஞ்சர்கள் கடும் கருத்து வேறுபாடு கொண்டு, ஒவ்வொருவரும் தம்மையே அதற்கு விளக்கம் என்று நினைத்துகொல்கிறார்கள்.ஆய்வுப்பூர்வமாக நிரூபிக்கப்பட்ட சான்றுகள் எதையும் அவர்கள் காட்டவில்லை.இவர்கள் குழப்பத்தில் மூழ்கி இருக்கும் வரை உண்மை அவர்களின் கைக்கு எட்டப்போவதில்லை.ஆனால் நாம் முஸ்லிம்கள் எந்த விடயத்திலும்  வலி தவறி செல்லவேண்டியதில்லை.திருக்குருஆனின் வழிகாட்டுதல் நமக்கு ஒரு பேரருளாக கிடைத்திருக்கும் பொது நாம் வழுக்கி விழ வேண்டியதில்லை.

உயிரினம் உருவானது பற்றி மனித மூலைகளில் ஒருவான கருத்துக்கள் எதற்கும் எந்தவிதமான வலுவான ஆதாரமும் இல்லை.இந்த விடயத்தில் தெளிவான விளக்கத்தை எந்த அறிஞ்சரும் அளிக்கவில்லை.அனுமானம்,யூகம்,கற்பனை என்ற அளவிலேயே அவர்களின் அபிப்ராயங்கள் அலைமோதுகின்றன.இதற்கு காரணம்,உயிரினம் உறவான போது  அதை யாரும் அறிகிளிருந்து பார்க்கவில்லை.அதை பற்றி அறிவிக்கும் அறிவியல் சாட்ச்சியும் இல்லை.தான்,இந்த உலகை படைக்கும் போது  எவரையும் உடன் வைத்துக்கொள்ளவில்லை.என்பதை "குகை" என்ற அத்தியாயத்தில் அல்லாஹ் இவ்வாறு கூறுகிறான்.

வானங்களையும், பூமியையும் படைப்பதற்கோ, இன்னும் அவர்களையே படைப்பதற்கோ (அவர்களை நான் உதவிக்கு) அருகே வைத்துக் கொள்ளவில்லை! வழி கெடுக்கும் இவர்களை (எதிலும்) நான் உதவியாளர்களாக ஏற்படுத்திக் கொள்ளவுமில்லை.
(18:51)
இதிலிருந்து படைப்புக்களின் தோற்றம் பற்றி ஒன்றும் தெரியாது என்று தெளிவாக அறியமுடிகிறது.திருக்குருஆன் வந்து சொல்லிக் கொடுத்ததை தவிர,இது தொடர்பாக நமக்கு ஒன்றும் மேலதிகமாக தெரியாது என்பதே உறுதி.படைப்புக்களின் தோற்றம் பற்றி திருமறை பின்வருமாறு கூறுகிறது.

மேலும், அவன்தான் வானங்களையும், பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான் அவனுடைய அர்ஷு நீரின் மேல் இருந்தது. உங்களில் யார் அமலில் (செய்கையில்) மேலானவர் என்பதைச் சோதிக்கும் பொருட்டு (இவற்றைப் படைத்தான்; இன்னும் நபியே! அவர்களிடம்) “நிச்சயமாக நீங்கள் மரணத்திற்குப் பின் எழுப்பப்படுவீர்கள்” என்று நீர் கூறினால், (அதற்கு அவர்களிலுள்ள நிராகரிப்பவர்கள்) காஃபிர்கள், “இது தெளிவான சூனியத்தைத் தவிர வேறில்லை” என்று நிச்சயமாகக் கூறுவார்கள்.
(11:07)


நபிமொழி


இந்த இடத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அமுதவாக்கு ஒன்றை குறிப்பிடலாம்.இம்ரான் பின் ஹுசைன் (ரலி) அவர்கள் அறிவிக்கும் அந்த ஹதீஸில் நபியவர்கள் கூறுகிறார்கள்.

எந்தவொரு பொருளும் இல்லாத நேரத்திலிருந்தே அல்லாஹ் இருக்கிறான்.அவனது ''அர்ஷ்'' நீரின் மீது இருந்தது.பின்னர் வானங்கள் மற்றும் பூமி என்பவற்றை அவன் படைத்தான்.அனைத்தையும் எட்டில் பதித்தான்.(புஹாரி)

அப்துல்லா பின் அம்ர் (ரலி) அறிவிக்கும் இன்னொரு ஹதீஸில் நபிகள் நாயகம் அறிவிக்கிறார்கள்.

வானங்கள் மற்றும் பூமியை படைப்பதற்கு ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பே படைப்புகளின் விதியை அல்லாஹ் எழுதிவிட்டான்.அவனது ''அர்ஷ்'' நீரின் மீது இருந்தது.(முஸ்லிம்)

இந்த வசனம் மற்றும் நபிமொளிகளிளிருந்து படைப்புக்களின் தொடக்கத்திலிருந்து நீர் இருந்தது என்றும் எல்லா படைப்புகளுக்கும் முன்னால் இறைவன் நீரை படைத்து  இருந்தான் என்றும் தெரிகிறது.இந்த நீர் எதைக் குறிக்கிறது ? அது சாதரணமான தண்ணீர் தான ? அல்லது திடப்பொருட்கள் இதற்கு முன் பெற்றிருந்த திரவ நிலையைக் குறிக்க " நீர் " எனும் சொல் ஆளப்பட்டுள்ளதா என்பதை அறுதியிட்டுச் சொல்ல முடியாது.திருக்குர்ஆன்  இங்கு  அடிப்படை விடயத்தை மட்டும் சொல்லியிருக்கிறது.பொதுவாக அறிவியல் சம்பத்தப்பட்ட விடயத்தை மட்டும் கூறிவிட்டு,அதன் விளக்கங்களை மனிதனின் ஆய்வுக்கு விட்டு விடுவதே திருமறையின் மரபாகும்.

இதன்படி அல்லாஹ்வின் "அர்ஷ்"நீரின் மீது இருந்தது:நீரே அல்லாஹ்வின் முதல் படைப்பு என மேற்கண்ட வசனம் தெரிவிக்கின்றது.வேறு சில வசனங்களை ஆராயும் போது,நீரஈருந்து உயிரினம் உருவானது என்று தெரிகிறதே ஒழிய ஆரம்பத்தில் உயிரினங்கள் நீரில் ஒரே செல்லாக இருந்தது என்று தெரியவில்லை.

மேலும், எல்லா உயிர்ப் பிராணிகளையும் அல்லாஹ் நீரிலிருந்து படைத்துள்ளான்; அவற்றில் தன் வயிற்றின் மீது நடப்பவையும் உண்டு; அவற்றில் இரு கால்களால் நடப்பவையும் உண்டு; அவற்றில் நான்கு (கால்)களை கொண்டு நடப்பவையும் உண்டு; தான் நாடியதை அல்லாஹ் படைக்கிறான்; நிச்சயமாக அல்லாஹ் எல்லாவற்றின் மீதும் பேராற்றலுடையவனாக இருக்கின்றான்.
(24:45)


என்று திருமறை பறைசாற்றுகிறது.அனைத்து உயிரினங்களையும் நீரிலிருந்து படைத்ததாக சந்தேகத்துக்கு இடமின்றி இந்த வசனம் மூலமிறைவன் விவரிக்கின்றான்.உயிரினக்களில் ஒரு குறிப்பிட்ட இனமான மனிதனைப் படைத்தது பற்றி அல்லாஹ் தனது திருமறையில் பின்வருமாறு குறிப்பிடுகிறான்.

இன்னும் அவன்தான் மனிதனை நீரிலிருந்து படைத்து, பின்னர் அவனுக்கு வம்சத்தையும், சம்பந்தங்களையும் ஏற்படுத்துகிறான்; மேலும் உம்முடைய இறைவன் பேராற்றலுள்ளவன்.
 (25:54)


மனிதன் தன்னைப்பற்றி தீவிரமாக ஆராய்வான் என்பதற்காகவே மனிதப்படைப்பு குறித்து அவன் தனியாகவே குறிப்பிடுகிறான்.






இந்த கட்டுரையை எழுதியவர்  
அறிவியல் தமிழ் அறிஞ்சர்
மணவை முஸ்தபா 
அவர்கள்.


ஜசாகல்லாஹு ஹைரைன்.









Friday, January 6, 2012

மதம் தேவையில்லை மனச்சாட்சியே போதும்...???


மனசாட்சி ஒரு மகத்தான சக்தியே. எனினும் மனசாட்சி என்றால் என்ன? எல்லோருடைய மனசாட்சியும் ஒன்று போன்றதுதானா? அதன் தீர்மானமும் எப்போதும் எல்லோரிடமும் ஒன்று போன்றது தானா? அது குற்றங் குறையற்றது என்று யாராவது கூற முடியுமா?

பிறந்த குடும்ப சூழலும் வளர்ந்த சமூக சூழலும் பின் தொடர்ந்து வரும் பாரம்பரிய சூழலும் மனசாட்சியை நிர்ணயிப்பதிலும் பெரும்பங்கு வகிக்கின்றது.

எல்லோருடைய சிந்தனையும் செயல்படும் ரீதியும் ஒன்று போல் இருப்பதில்லை.  மனிதர்கள் பலரும் பல குணாதிசயங்களைக் கொண்டவர்களாகவும், அதனுள் ஒன்றுக்கொண்று மாறுபட்டவர்களாகவும் உள்ளனர். அவர்களின் ஆசைகளும் பலவிதங்களாகும். கற்றறிந்த அறிவற்கும், பாமர அறிவிற்கும் பலத்த ஏற்ற தாழ்வுகள் உண்டு அந்நிலையில் ஒவ்வொருவரும் தம்முடைய ஸ்தானத்தில் நின்று கொண்டு தான் காரணகாரியங்களைப் பார்க்கின்றார்கள். எல்லோரும் ஒன்றுபோல் சிந்திப்பது சாத்தியமானதல்ல. அதனால் சிந்தனைகளும் அதன் அடிப்படையிலான செயல்பாடுகளும் மாறுபட்டதாகவே இருக்கும்.

அழகு விரும்பக்கூடியதாகும். சிலருக்கு சில பொருட்கள் மீது விருப்பமிருக்கும் அதுவே வேறு சிலருக்கு அதன் மீது வெறுப்பாயிருக்கும். அதுபோல நன்மை, தீமைகளும் அவ்விதம் ஆகலாமல்லவா? தனிமனிதனின் ரசனைக்கேற்ப அழகும் விருப்பமும் மாறுபாடும் போது நன்மை தீமையில் மட்டும் மாற்றம் ஏற்படாது என்று கூறவே முடியாது.

என் மனசாட்சிக்கு நன்மையாகத் தெரியும் காரியம் உங்களுடைய மனசாட்சிக்கு தீமையாக தெரியலாம். உங்களுக்கு நன்மையாகத் தெரியும் காரியம் எனக்கு தீமையாகத் தெரியலாம். உண்மையில் நன்மை நன்மை தான். தீமை தீமை தான். அது மனசாட்சியின் அடிப்படையில் மாறுபட்டாலோ மனித சமூகத்திற்கு கேடுதான். சமூக பொருளாதார கடமைகளை அனுசரித்து மாறிவரக்கூடியதல்ல நன்மை தீமைகள். அது கால, தேச. வர்க்க, நிற இன மத பேதங்களுக்கு பொதுவாக இருக்க வேண்டும்.

மனித மனசாட்சியோ, சமூக சூழ்நிலையோ பொருளாதார அடிப்படையோ தேசிய சூழலோ தான் நன்மை தீமையை நிச்சயிக்கிறது என்றால் அது அசாத்தியமாயிருக்கும். ஆகவே நன்மை, தீமைகளை நியாய அநியாயங்களை நிர்ணயிக்க மனித இச்சைகளுக்கோ, மனசாட்சிக்கோ அருகதையில்லை எனலாம்.

நான் யார்? எங்கிருந்து வந்தேன்? எங்கே போவேன்? வாழ்க்கை என்றால் என்ன? அது எதற்குரியது? அது எவ்வாறு இருக்க வேண்டும்? என்பது போன்ற ஐயங்களுக்கெல்லாம் இறைவெளிப்பாடுகள் மூலமேயல்லாது வேறு எதன் மூலமும் தெளிவான பதிலை புரிந்து கொள்ளவோ, அறிந்து கொள்ளவோ முடியாது.

சார்லஸ் டார்வினும். ஃ பிராய்டும், மெக்டுகல்ஸும். அட்லரும். மார்கஸ்ஸும் மனிதனைக் கண்டது மாறுபட்ட விதத்திலாகும். குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன் என்றார் டார்வின். மனிதன் ஒரு மிருகமே அவனுக்கு வழிகாட்டுவது உணர்ச்சிகளே என்றார் மெக்டுகல்ஸ். மனிதன் ஒரு சிற்றின்ப ஜீவி. அவனிடம் அமிழ்ந்து கிடக்கும் நாம் வேட்கையை திருப்திபடுத்தவே அவன் நிர்பந்திக்கப்படுகிறான் என்றார் ஃபிராய்ட் மனிதன் ஒரு சிற்றின்ப ஜீவ அல்ல. அவனை இயக்குவது அவனடைய அகம்பாவம் தான் என்றார் அட்லர், மனிதர் மிருகங்களைப் போல் தனது பொருளாதார தேவைகளுக்கும் உடற்பசி தேவைகளுக்கும் அடிமை. அவன் ஒரு பொருளாதார மிருகம் என்றார் மார்க்ஸ்.

தம்முள், தம்முன் எந்தவொரு பிரச்சனை பெரிய ரூபம் எடுத்து நிற்கிறதோ அதையே முழு மனித சமூகத்தின் பிரச்சனை எனக்  கருதினார்கள். மனிதரில் மார்க்ஸ் பார்த்தது உடற்பசி, ஃபிராய்ட் பார்த்தது காமப்பசி, உணர்ச்சிக்கு அடிமையானவன் என்றார் மெக்டுகல்ஸ் அட்லரோ அவன் அகங்கரி என்றார். அந்தன் ஆனையைப் பார்த்த கதை போல இவர்கள் பார்வைகளும் அமைந்ததே தவிர மனிதனை முழுமையாக அறிந்திருக்கவில்லை.

அறிவு ஜீவிகளும், அறிவியல் ஆய்வாளர்களும் மனிதனைக் குறித்து சிந்திப்பதானது தங்கள் முன் நடந்த அனுபவப்பட்ட காரண காரியங்களை கொண்டேயாகும். அறிவியல் தாகம் கொண்டவர்கள் மனிதனைக் குறித்து புதிது புதிதாக பல விஷயங்களை கண்டறியும் போது இன்னும் அறியாதது எவ்வளவோ இருக்க தங்களுடைய அறிவில்லாமையின் ஆழத்தை விளங்கிக் கொள்கின்றார்கள்.

மனிதனைக் குறித்து மனிதன் முழுமையாக அறியாத போது அவன் எப்படி ஜீவிக்க வேண்டும் என்று அவன் மனம் அறிந்திருப்பது சாத்தியமில்லை.

தெய்வீக வெளிப்பாடுகளை ஏற்றுக் கொள்ளாதவர்களை எடுத்துக் கொள்ளுங்கள். அவர்களுக்கு மரணத்திற்குப்பின் என்ன என்பது பற்றியே சந்தேகம். அவர்களைப் பொறுத்தவரை வாழ்க்கையானது ஜனனத்தோடு தொடங்கி மரணத்தோடு முடிந்துவிடக்கூடிய ஒன்றாகவே இருக்கிறது. இவ்வெண்ணம் வாழ்க்கையின் லட்சியத்தையும், வாழ்க்கைப் பாதையையும் பாதிக்கின்றது. தெய்வீக வெளிப்பாடுகள் அல்லாது மனிதன் தன்னைக் குறித்துக் தன்னைப் படைத்த இறைவனைக் குறித்துக் அறிவதற்குரிய மார்க்கங்களே இல்லை.

தன்னைப் பற்றியும் தம் சுற்றுச்சூழலைப் பற்றியும் உள்ளே விடும் எண்ணங்கள் தானே மனசாட்சியாக உங்கள் முன் உருவெடுத்து நிற்கின்றது. ஆக அறைகுறை அறிவினைக் கொண்டது தானே மனசாட்சி இத்தகைய மனத்தின் சாட்சி, இத்தகைய மனத்தின் சாட்சி எப்படியொரு தெளிவான வழிகாட்டுதலாக இருக்கமுடியும். சமூகத்திற்கு தேவையான சட்டதிட்டங்களை நிர்ணயிப்பது அநேகமாக ஆணாகவே இருக்கின்றனர். அதனால் அச்சட்டத்திட்டங்களில் ஆண்களின் எண்ணங்களாகவே இருக்கும். கருப்பன் உருவாக்கும் சட்டம் அவனுக்கு அனுகூலமாகியும் வெள்ளையன் உருவாக்கும் சட்டம் அவனுக்கு அனுகூலமாகவுமே இருக்கும். ஆசைகளுக்கும், மோகங்களுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்தே அவரவர்கள் சட்டங்கள் இயற்றவார்கள். தொழிலாளியும், அவ்வாறே முதலாளியும் அவ்வாறே. ஒவ்வொரு நாடும். சமூகம். தங்களுடைய நாட்டிற்கும், சமூகத்திற்கும் அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள்.

நிக்கோலோ மேக்ஸ்வல்லி கூறினார் : நன்மையென்பது ஒரு பெயர் மட்டுமே. உண்மையில் தீமையேயுள்ளது. அதனால் தன் நாட்டை  வல்லரசாக்க விரும்பும் எந்த அரசும் தீமை செய்வது எப்படி என்று தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும். இதுதானே தேசிய வாதத்தின் அடிப்படை.

எந்தவொரு விஷயத்திலாவது தன் சுயநலத்தைப் பேண வேண்டும் என்னும் எண்ணமில்லாதவர்கள் ஒருவரையும் காணமுடியாது. அத்தகையவர்களால் உருவாக்கப்படும் சட்டதிடடங்களிலும் அந்நிலை பிரதிபலிக்கவே செய்யும்.

மனித சமூகம் முழுவதையும் சமமாக காண படைத்த இறைவனால் மட்டுமே முடியும். எல்லா நாட்டவர்களையும் சமமாக நடத்தி நீதியை நிலைநாட்ட அவனால் மட்டுமே முடியும். அத்தகைய தெய்வீக வெளிப்பாடுகள் மூலம் அருளிய சட்டதிட்டங்களுக்கு கட்டுப்படாமல் கேவலம் மனசாட்சிக்கு கட்டுப்பட்டு வாழ்வதால் அது எப்படி சமாதான வாழ்வாக இருக்க முடியும்.

இறைவன் தன் தெய்வீக வெளிப்பாடுகளான இறைவேதம், இறைதூதர் மூலம் மனித சமூகத்திற்கு அருளிய வாழ்ககைத் திட்டமானது தனி மனிதனடையவும். குடும்பத்துடையவும். சமூகத்துடையவும். நாட்டினுடையவும், உலகத்தினுடையவும் சமாதானத்தை அடிப்படையாகக் கொண்டது. அதனால் அதற்குக் கட்டுப்பாடு நடக்க வேண்டும் என்று இஸ்லாம் மார்க்கம் உரத்து கூறுகிறது. அதுவே நிடித்த நிரந்தர சமாதானத்திற்கு வழிகாட்டவும். லட்சியத்தை சென்றடையும் மார்க்கமாகவும் இருக்கும்.



ஆக்கம் 
அபூ ஆஸியா
-





Wednesday, December 28, 2011

இஸ்லாமும் அடிமைத்தனமும்.


மனிதர்கள் அனைவரும் ஒரே மூலத்திலிருந்து பிறந்தவர்கள். நீங்கள் ஒருவரிலிருந்து மற்றொருவராகத் தோன்றியவர்களே. என்று மனிதர்களின் பரிபூரண சமத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு எழுப்பப்பட்ட இஸ்லாம் அடிமைத்தனத்தைத் தனது சமூக வாழ்க்கையின் ஒர் அம்சமாகக் கொள்ளுமா?

ஆதத்தின் மக்களை நாம் உண்மையிலேயே கண்ணியப்படுத்தியுள்ளோம் என்று கூறும் குர்ஆனே மனித சமுதாயத்தில் ஒரு கூட்டதார்களை வீட்டுத் தட்டு முட்டு சாதனங்களைப் போல் விற்கப்பட்டுக் கொண்டும், வாங்கப்பட்டுக் கொண்டும் இருக்கும்படியான ஏற்பாடுகளைச் செய்யுமா?

'எவர்; எழுதப்படிக்கத் தெரியாத நபியாகிய நம் தூதரைப் பின்பற்றுகிறார்களோ.. அவர்.. அவர்களுடைய பழுவான சுமைகளையும் அவர்கள் மீதிருந்த விலங்குகளையும் (கடினமான கட்டளைகளையும் இறக்கிவிடுவார்' (7:157) என்றே குர்ஆன் கூறுகிறது.

எனில் அடிமைகளை வைத்துக் கொள்ளவும், நிர்வகிக்கவும் சில விதிமுறைகளை ஏற்படுத்தியது என்றால் அது காலச்சூழ்நிலையைக் கருத்தில் கொண்ட ஒரு தற்காலிக விதிமுறையாகும்.

முந்தைய கால கட்டங்களில் போருக்குப் பின் வெற்றி பெற்ற நாட தோல்வியடைந்த நாடுகளின் போர் வீரர்களையும், பெண்களையும், குழந்தைகளையும் அடிமைகளாக உபயோகப்படுத்துவதையும், விற்கப்படுவதையும் வழக்கமாக கொண்டிருந்தது. இந்நிலை திருக்குர்ஆன் இறக்கியருளப்பட்ட கால கட்டத்தில் இறக்கியருளிய நாட்டிலும், அதன் சுற்றுச்சூழலிலும் இருந்து வந்தது. மேல் நாடுகளில் 18-ம் நூற்றாண்டின் கடைசி வரை கூட இருந்து வந்தது. அதுவும் யுத்தக் களத்தில தோல்வியடைந்தவர்களையல்ல. யுத்தம் என்றால் என்னவென்றே தெரியாத நிரபராதிகளையாகும்.

அமெரிக்காவில் மேற்கிந்தியர் எனப்படும் கருப்பு இனமக்களை பிடித்து விற்பனை செய்யும் வழக்கம். இந்த 20-ம் நூற்றாண்டு வரை இருந்தது. மேனாட்டவர் ஆப்ரிக்காவின் மத்திய பகுதியில் வாழ்ந்த கருப்பு இனமக்களை மிருகத்தனமாக வேட்டையாடிப் பிடித்து அடிமைகளாக விற்பதற்காக கப்பலேற்ற உபயோகிக்கப்பட்ட கடற்கரைக்கு அடிமைக்கரை என்று பெயரே வைக்கப்பட்டது. இப்படி ஒரு நூற்றாண்டுக்குள் (1680-1786) பிரிட்டானிய குடியேற்ற நாடுகளுக்கு அடிமைகளாக அனுப்பப்பட்ட கருப்பர் தொகை இரண்டு கோடி என்று அவர்களின் அறிக்கையே கூறுகிறது.1790-ம் ஆண்டில் மட்டும் 75,000 அப்பாவி மக்கள் அடிமைகளாக்கப்பட்டு பிரிட்டானிய குடியேற்ற நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர். அமெரிக்காவில் ஆபிரஹாம் லிங்கன்; காலக்கட்டம் வரை கூட அடிமைத்தனம் இருந்து வந்தது என்று அலெக்ஸ்ஹெய்ல் தன்னுடைய வுhந சுழழவள என்றும் நூலில் கூறுகிறார்.

அடிமைகள் (சூத்திரர்) கடவுளின் பாதத்திலிருந்து பிறந்தவர்கள் அவர்கள் பிறப்பாலே இழிந்தவர்கள். பிராமணர், ஷத்திரியர், வைஷியர் இட்டப் பணியை ஏற்றுப் நடப்பதே அவர்கள் தலைவிதியாகையால் அதனை அவர்கள் எதிர்க்கவோ, மாற்றவோ முடியாது என்று சாதி இந்துக்கள் நம்பி நடத்தினர். அவர்களுக்கு கடவுள் இட்ட ஒரே வழி மரணத்திற்கு பின் தன் ஆன்மாக்கள் மறுபிறவியில் ஒரு தலைசிறந்த நிலையினை அடையலாம் என்ற நம்பிக்கையில் தன் இழிநிலையையும், தண்டனையையும் மிகப் பொறுமையுடன் சகித்து கொண்டு வாழ வேண்டாம் என்று போதிக்கப்பட்ட, அவர்களை அடக்கி ஆண்டவர்கள் மிக இழிந்த நிலைக்கு அவர்களை தாழ்தியதோடு நில்லாது, அடிமைகள் தம்மை இவ்இழிநிலைக்கும், துன்பத்திற்கும் ஆளாக்கிய அநீதியான சமூக அமைப்புக்கு எதிராக கிளர்ந்தெழும் எண்ணத்தைக் கூட அகற்றி வைத்தனர்.

ரோமிலும், கிரேக்கத்திலும், பரசீகத்திலும், பண்டைய இந்தியாவிலும் அடிமைகளை எவ்வாறு எவ்வளவு குரூரமாக நடத்தினார்கள் என்பதை இன்று நினைத்தாலும் வேதனை பொங்கும். நபி (ஸல்) அவர்கள் இஸ்லாத்தை எடுத்து போதித்த அரபு நாட்டின் நிலையோ அடிமைத்தனம் பேணுவதில் எந்நாட்டவர்களுக்கும் சளைத்தவர்களாக இருந்ததில்லை. அச்சூழ்நிலையில் மனித குலத்தின் அருட்கொடையாக வந்த முஹம்மது (ஸல்) கொண்டு வந்த மார்க்கம் அடிமைத்தனத்தை நிறுத்த பல்வேறு வழிமுறைகளை கையாண்டது.

கணவன், மனைவி, குழந்தைகள் உட்பட ஒட்டு மொத்த குடும்பத்தையுமே அடிமைப்படுத்தி அவர்களைக் கொண்டு கடினமான வேலைகள் வாங்கியும், அவர்களுடைய சம்பாத்தியத்தை அனுபவிக்கவும் செய்திருந்த ஒரு சமூகமாயிருந்தது அரபு சமூகம். அத்தகைய சமூகத்தில் இஸ்லாம் அடிமைத்தனத்தை உடனே தடை செய்யாமல் படிப்படியாக குறைத்து முடிவு நிலைக்கு கொண்டு வந்தது. நேரடியாக தீடிரென்று அடிமைத்தனத்தை தடை செய்யுமாயின் அது சுய சமூகத்தில்; மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவதோடு அல்லாமல், பிற சமூகத்தால் மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும் என்பதாலே அடிமைத்தனத்தை திடிரென்ற தடை செய்யாமல் நிர்பந்தத்தின் அடிப்படையில் அடிமைகளை வைத்துக்கொள்ள அனுமதித்தது.


 அடிமைகளைப் பேணுதல்



நிர்பந்தத்தின் அடிப்படையில் அடிமைகளை வைத்துக்கொள்ள அனுமதித்த இஸ்லாம் அவர்களை எவ்வாறு பேண வேண்டும் என்று சில வரைமுறைகளை வகுத்துத் தந்தது.

'தாய் தந்தையர்க்கும், நெருங்கிய உறவினர்களுக்கும், அனாதைகளுக்கும், ஏழைகளுக்கும், அண்டை வீட்டிலுள்ள உறவினகளக்கும், அருகிலுள்ள அண்டை வீட்டாருக்கும் (பிரயாணம், தொழில் போன்றவற்றில்) கூட்டாளிகளாக இருப்போருக்கும், வழிப்போக்கர்களுக்கும் உங்களிடமுள்ள அடிமைகளுக்கும் அன்புடன் உபகாரம் செய்யுங்கள் நிச்சயமாக அல்லாஹ் கர்வமுடையோராக வீண் பெருமையுடையோர்களாக இருப்பவர்களை நேசிப்பதில்லை (4:36)

'உங்கள் அடிமைகள் உங்கள் சகோதரர்களே. எனவே யார் தனது ஆதிக்கத்தில் ஒரு சகோதரரைப் பெற்றிருக்கினறரோ அவர் தாம் உண்பது போலவும் உடுப்பது போலவும் தமது சகோதரருக்கும் உண்ணவும் உடுக்கவும் கொடுக்க வேண்டும். அவர்களின் சக்திக்கு அப்பாற்பட்ட எதையும் செய்யுமாறு அவர்களைக் கேட்க வேண்டாம். அப்படியான எதையும் செய்யம் படி கேட்டால் அதில் அவர்களுக்கு உதவிபுரியுங்கள்' என்று நபி (ஸல்) அவர்கள் உபதேசித்துள்ளார் (புகாரி)

உங்களில் எவரும்'இவன் எனது அடிமை', 'இவள் எனது அடிமைப்பெண்' என்று சொல்லக்கூடாது பதில் 'இவர் எனது ஆள்' என்றும் 'இவள் எனது பணிப்பெண்' என்றும் சொல்ல வேண்டும் என்றும் நபி (ஸல்) அவர்கள் போதித்துள்ளார்கள். இன்னும்

'யார் தனது அடிமையைக் கொல்கிறாரோ அவரை நாம் கொல்வோம். அவரது மூக்கை அங்கவீனப்படுத்துபவரின் மூக்கை நாம் அறுப்போம், அடிமைக்கு விதையடிப்பவரை அதற்குப்பதில் நாம் விதையடிக்கச் செய்வோம்' என்றும் எச்சரிக்கை செய்துள்ளார்கள். (புகாரி முஸ்லிம்)

அடிமைகளுக்கு விதையடித்து பாலியல் உணர்வுகளை நசித்து மிருகங்களைப் போல் நடத்திவந்த காலச் சூழ்நிலையில் அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து விவாக பந்தம் ஏற்படுத்திக் கொடுக்கக் கூட இஸ்லாம் கட்டளையிட்டது.

உங்களில் வாழ்க்கைத் துணை இல்லா (ஆடவர், பெண்டி)ருக்கும், அவ்வாறே (வாழ்க்கைத் துணையில்லா) ஸாலிஹான உங்கள் (ஆண் பெண்) அடிமைகளுக்கும் விவாகம் செய்து வையுங்கள் (24:32)

'தங்கள் கற்பைப் பேணிக் கொள்ள விரும்பும் உங்கள் அடிமைப் பெண்களை அற்பமான உலக வாழ்க்கை வசதிகளைத் தேடியவர்களாக விபச்சாரத்திற்கு (அவர்களை) நிர்பந்திக்காதீர்கள்' (24:33) என்றும் கட்டளையிட்டது.

இன்னும் அடிமைகள் தங்கள் உணர்வுகளை தவறான வழிகளில் தணித்துக் கொள்ளும் வகையில் சென்றடாதிருக்க அவர்களின் உணர்வுகளை மதித்து விவாகம் செய்து வையுங்கள். அல்லது நீங்களே திருமணம் செய்து கொள்ளுங்கள். (பார்க்க திருக்குர்ஆன் 4:25) என்றும் போதிக்கப்பட்டது.

இணைவைக்கும் ஒரு பெண் உங்களை கவரக்கூடியவர்களாக இருந்த போதிலும் அவளைவிட மூஃமினான ஓர் அடிமைப்பெண் நிச்சயமாக மேலானவன் ஆவாள் (2:221) என்று கூறி அடிமைகளின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பதோடு சம அந்தஸ்தையும் வழங்கியது.

அடிமைகளை கண்ணியத்தோடு பேணினாலும், அடிமைத்தனத்தை முற்றாக தடை செய்யாமல் போர்க்கைதிகளை மேலும் மேலும் அடிமைகளாக்கி வைத்துக் கொண்டது ஏனென்றால்: தூதரின் கால கட்டத்திலும் சரி பின் சில கால கட்டங்களிலும் சரி யுத்தக் கைதிகளை அடிமைகளாக்கி வைத்துக் கொண்டதென்றால் அது எதிரி நாட்டார்கள் நடவடிக்கைகளை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட முடிவு ஆகும். இரு நாடுகளுக்கு மத்தியில் போர் மூண்டால் பிடிபட்ட யுத்தக் கைதிகளை அடிமைகளாக்கி வைப்பதும், சித்திரவதை செய்து கொல்வதுமான பழக்கம் பழங்காலந்தொட்டு நிலவி வந்தது.

UNIVERSAL HISTORY OF THE WORLD  என்னும் வரலாற்று கலைக்களஞ்சியத்தில் (PAGE 2273) பின்வரும் நிகழ்ச்சி கூறப்பட்டுள்ளது. '599-ம் ஆண்டில் ரோம சக்ரவர்த்தி ஆண்டில் மாரியஸ் போர்களில் தன் படைகள் கைப்பற்றிய இலட்சக்கணக்கான கைதிகளில் ஒரு சிலரைக் கூட விடுதலை செய்ய மறுத்துவிட்டான். பதிலாக அவர்கள் அனைவரையும் வாளுக்கு இறையாக்கினான். இவ்வாறு செய்யக் காரணம் அவர்களை வாழ விடுவதை விடக் கொன்றுவிடுவதே சிக்கனமானது என்ற அவன் கருதியதாகும்'.

யுத்தக் கைதிகளை கூட்டதோடு கொன்று குவிக்கும் பழக்கம் பிற்காலத்திலும் தாராளமாக இருந்தே வந்தது. தேசத் துரோகிகள் என்றும் எதிரிநாட்டு உளவாளிகள் என்றும், எதிரி நாட்டு கைதிகள் என்றும் கூறி கொன்று குவித்த சம்பவங்கள் ஹிட்லரின் ஜெர்மனியிலும், முசோலினியின் இத்தாலியிலும் மட்டுமல்ல, கம்யூனிஸ்டுகளின் சொர்க்க பூமியாக இருந்த ரஷ்யாவிலும். அண்மையிலே கன்பூசியாவிலும் நடந்ததுண்டு. இத்தகைய கொடூரமான மிருகச் செயலை இஸ்லாம் ஒரு போதும் அங்கீகரிக்கவோ அனுமதிக்கவோ செய்ததில்லை.

(மூஃமீன்களே! வலிந்து உங்களுடன் போரிடவரும்) நிராகரிப்பவர்களை நீங்கள் (போரில்) சந்திப்பீர்களாயின், அவர்களுடைய கழுத்துக்களை வெட்டுங்கள். கடும் போர் செய்து (நீங்கள் அவர்களை வென்று) விட்டால் (அவர்களுடைய) கட்டுக்களை பலப்படுத்தி விடுங்கள். அதன் பிறகு யாதொரு ஈடுபெற்றோ அல்லது (ஈடுபெறாது) உபகாரமாகவோ அவர்களை விட்டு விடுங்கள். (47:4) என்று இறைவன் கூறுகிறான்.

இவ் இறைவசனத்தில் எதிரிகளை போர்க்களத்தில் வைத்து நேருக்கு நேர் போரிடும் போது மட்டும் வெட்டுங்கள் என்று கட்டளையிடுகிறது. போருக்குப்பின் போர்வீரர்களை கைதிகளாக பிடித்திருந்தால் அவர்களுக்கு பதிலாக ஈட்டுத் தொகை பெற்றுக் கொண்டோ அல்லது உபகாரமாகவோ விடுவித்து விடுங்கள் என்று கூறுகிறது.

நபித்தோழர்களில் பிரசித்திப்பெற்ற இப்னு உமர் (ரலி) குர்ஆன் வியாக்யானிகளான ஹஸன் பஸரி, ஹம்மாத் இப்னு அபீசுலைமான் போன்றோர்கள் இவ்வசனத்தின் அடிப்படையில் போர்க்கைதிகளை கொல்வது கூடாது என்று ஃபத்வா வழங்கியுள்ளார்கள். அப்படியாயின் போர்க்கைதிகளை என்ன செய்ய வேண்டும். ஆயுட்காலம் முழுவதுமோ அல்லது சொற்ப காலமோ சிறையிலடைத்து வைக்க வேண்டும் என்றால் அத்தகைய சிறைச்சாலை வசதி ஏற்பாடுகள் எதுவும் அக்காலக்கட்டத்தில் இருந்ததில்லை. எனவே போர்க்கைதிகளை போர் வீரர்களுக்கு பங்கிட்ட வழங்கிவரும் வழக்கத்தை கையாண்டது. அடிமைகளைப் பெற்றுக் கொண்டவர்கள் தங்கள் வேலைகளை வாங்கிக் கொண்டு அவர்களை பராமரித்து வந்தனர். இவர்களே அடிமைகளாக கருதப்பட்டு வந்தனர். இத்தகைய அடிமைத்தனத்தை நிர்பந்தத்தின் அடிப்படையில் சகித்துக் கொள்ள வேண்டியதாயிற்று.

முஸ்லிம்களுக்கும், எதிரிகளுக்குமிடையில் பலபோர்கள் நடைபெற்றன. இப்போர்களில் கைதிகளாக்கப்பட்ட பல முஸ்லிம்கள் எதிரிகளால் அடிமைகளாக்கப்பட்டனர். அவர்களின் சுதந்திரம் பாதிக்கப்பட்டது. அவர்கள் அடக்கி ஒடுக்கப்பட்டதோடு அக்காலத்தில் அடிமைகள் அனுபவித்த எல்லாவித இன்னல்களையும், அவர்களும் அனுபவிக்க நேர்ந்தது. பெண்மணிகளின் கண்ணியம் மிக மோசமாக பங்கப்படுத்தப்பட்டது. தந்தையும் மகனும், நண்பர்களுமாக பல ஆண்கள் ஒரே பெண்ணை பகிர்ந்து கொண்டனர். கைப்பற்றப் பட்ட குழந்தைகள் வெறுக்கத்தக்க இழிவான அடிமை நிலையில் வளர்க்கப்பட்டனர். இத்தகைய நிலைமைகள் அக்கால வாழ்க்கையில் நிலைத்துவிட்டதால் இஸ்லாத்தின் கைக்குள் வந்த எல்லா கைதிகளையும் உடனடியாக விடுதலை செய்வது சாத்தியமாகவில்லை. கைது செய்யப்பட்ட முஸ்லிம்களும் அவர்களின் உற்றார் உறவினர்களும், பகைவர்களால் அடிமைகளாக்கப்பட்டு மிகக் கொடிய சித்திரவதைக்குள்ளும் மானபங்கப்படுதத்பபட்டுமிருந்தனர். இந்நிலையில் முஸ்லிம்கள் கைது செய்தவர்களை விடுதலை செய்வது, அடிமைப்பட்ட முஸ்லிம்களுக்குச் செய்யப்படும் கொடுமைகளுக்கு உற்சாக மூட்டவதாகவும் அமைந்திருக்கும். எதிரி நாட்டு போர்க்கைதிகளை அடிமைப்படுத்தாமல் விட்டுவிட்டாலோ அவர்கள் திரும்பத் திரும்ப போருக்கு வர தயங்க மாட்டார்கள். நாம் வெற்றி பெற்றால் அவர்களை அடிமைப்படுத்தி அனுபவிக்கவும், கொடுமைப் படுத்தவும் செய்யலாம். நாம் தோற்றுவிட்டாலோ நம்மை முஸ்லிம்கள் கைது செய்யவம் மாட்டார்கள் அடிமைப்படுததவும் மாட்டார்கள் என்ற கருதி திரும்பத் திரும்ப போருக்கு வர தயங்க மாட்டார்கள். எனவே மேலும் மேலும் போரைத் தவிர்க்க இஸ்லாம் மேற்கொள்ளத்தக்கதாக இருந்த ஒரே சிறந்த வழி தனது கைதிகளையும் அடிமைகளாக நடத்துவதாகும்.

பகைவர்கள் தாம் யுத்தங்களிற் சிறைப்படுத்தியவர்களைத் தொடர்ந்து பிடிவாதமாக அடிமையாக்கி வர இஸ்லாம் மட்டும் தனது போர்க்கைதிகளை அடிமைகளாக்குவதைச் தன்னிச்சையாக ஒழித்துவிட இயலாது. எனவே இதற்கு மாற்றுவழி இல்லாதவரையும். உலகம் முழுவதும் உள்ள மக்கள் யுத்தக் கைதிகளை அடிமைகளாகவன்றி வேறு விதத்தில் நடத்துவதற்கான ஓர் அடிப்படைப் பற்றி இணக்கம் காணும் வரை இஸ்லாம் அடிமைத்தனத்தை சகித்துக. கொள்ள வேண்டியதாயிற்று.

அரசு நடத்தும் போர் அல்லாமல் எந்த ஒரு தனிமனிதனும் மற்றொரு தனிமனிதனை அடிமையாக்க முடியாது என்றும் விளங்கிக் கொள்ள வேண்டும்.


 அடிமை விடுதலை


இஸ்லாம் தன் வசமிருந்த எல்ல வழிவகைகளையும் பயன்படுத்தி அடிமைத்தனத்தை ஒழிக்க முயற்சி செய்ததேயன்றி கொள்கையளவில் கூட அதனை அங்கீகரிக்கவில்லை.

'பின்னர் ஓர் உதவியாக அவர்களை விடுதலை செய்து விடுங்கள் அல்லது யுத்தம் முடியும் வரை அவர்கள் பணங்கொடுத்து தம் விடுதலையைப் பெற்றுக் கொள்ள அனுமதியுங்கள் (47:4) என்று குர்ஆன் உபதேசிக்கிறது. இஸ்லாத்திற்காக நடந்த முதல் யுத்தமான பத்ர் யுத்தத்தில் கைது செய்யப்பட்ட சில கைதிகளை முஸ்லிம்களை மீட்பதற்குப் பதிலாக விடுதலை செய்தனர். அத்துடன் வேறு சிலரை கருணையின் நிமித்தம் விடுதலை செய்தனர்.

அடிமைகளைப் படிப்படியாக ஒழிக்க திட்டமிட்ட இஸ்லாம் முதலாவதாக எல்லோருமே அல்லாஹ்வின் அடிமைகள் என்ற உணர்வை மக்களிடையே பரப்பி, உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற பேதம் இறைவனை வழிப்படுவதில் எள்ள ஏற்றத்தாழ்வின் மூலமமேயன்றி வேறு எதிலும் கணிக்க முடியாது. இஸ்லாமிய வாழ்க்கை முறையை நம்பி அதை ஏற்று வாழும் யாவரும் சகோதரர்கள் என்ற எண்ணத்தை வளர்த்தது. மக்கள் மனங்களில் அன்பு, ஆதரவு அரவணைப்பு, ஆறுதல் கூறல் போன்ற அருட்குணங்களை வளர்த்து அப்போதிருந்த அடிமைகளை நடுத்தெருவில் தவிக்க விட்டுவிடாமல் அவர்களை அன்போடும், பண்போடும் நடத்தச் செய்தது. அடிமைகளை விடுவித்தல் இதை அல்லாஹ்வுக்கு மிக்க விருப்பமான ஒரு செயலாக அறிமுகம் செய்து இறைநேசர் பலரும் தம்மிடமிருந்த அடிமைகளை விடுதலை செய்ய வைத்தது.

'(நன்மை தீமையாகிய) இருபாதைகளை நாம் அவனுக்குக் காண்பித்தோம். ஆயினும் அவன் கணவாயைக் கடக்கவில்லை.

(நபியே!) கணவாய் என்பது என்ன என்பதை உமக்கு எது அறிவிக்கும் (அது) ஒர் அடிமையை விடுவித்தல்...' என்று குர்ஆன் (90:10,14) போதித்தது.

ஒரு சமயம் நபித்தோழர் அபூதர் (ரலி) நபி (ஸல்) அவர்களிடம் கேட்டார். 'அடிமைகளை விடுவித்தலில் மிகச் சிறப்பானது எது? என்ற அதற்கு நபி (ஸல்) அவர்கள், எஜமானனின் மிகவும் விலையுர்ந்த அடிமைகளை விடுவித்தலாகும்' என்றார்கள். (புகாரி, முஸ்லிம்)

பல்வேறு குற்றங்களுக்கும், பாவச் செயல்களுக்கும் தண்டனையாக அடிமைகளை விடுதலை செய்ய வேண்டும் என்னும் சட்டத்தையும் கூறி அடிமைகளை விடுவிக்க ஏற்பாடுகளை செய்தது. உதாரணமாக

1. ஒரு முஸ்லிம் தன் மனைவியுடன் பாலுறவு கொள்வதன் மூலம் தன் நோன்பை முறிப்பாராயின் இச்செயலுக்கு தண்டனையாக ஒரு அடிமையை விடுதலை செய்ய வேண்டும்.

2. அவ்வாறே ஹஜ் கடமையை நிறைவேற்றும் போது மனைவியுடன் பாலுறவு கொண்டாலும் தண்டனையாக ஓர் அடிமையை விடுதலை செய்ய வேண்டும்.

3. ஒரு முஸ்லிம் தன் மனைவித் தன் தாய் போன்றிருக்கிறாள் என்ற ஒப்பிட்டுக் கூறினால் இது ஒரு தீயப் பேச்சாகக் கருதப்படுகிறது. இக்குற்றத்திற்கு பரிகாரமாக ஓர் அடிமையை விடுதலை செய்ய வேண்டும் என்றது.

-இத்தகைய காரணங்கள் எதுவும் இல்லாத போதும் ஓர் அடிமையை உரிமை விடுவத அல்லாஹ்வின் அன்பைப் பெறுதலுக்குரிய மிகச் சிறந்ததோர் செயலாகும் என்றும். உரிமை விடப்படும் ஓர் அடிமையின் ஒவ்வொரு உறுப்பும் அவ்வடிமையை உரிமை விட்டவனை நரக நெருப்பிலிருந்து காப்பாற்ற உதவும் என்றும் இறைதூதர் (ஸல்) அவர்கள் கூறக் கேட்ட ஆரம்ப கால முஸ்லிம்கள், தங்களிடமிருந்த அடிமைகளை மட்டுமல்ல இயன்றளவு அடிமைகளை விலைகொடுத்து வாங்கியும் உரிமையிட்டடார்கள். இறைதூதர் (ஸல்) அவர்கள் 63 அடிமைகளை விடுதலை செய்துள்ளதாகவும், அவர்களின் அருமை மனைவி ஆயிஷா (ரலி) அவர்கள் 67 அடிமைகளை விடுதலை செய்ததாகவும் சரித்திரக் குறிப்புகள் கூறுகின்றன.

அடிமைத்தளையிலிருந்து தம்மை விடுவித்துக் கொள்ள பொருளோ, பணமோ தேவைப்படும் அடிமைகளுக்கு ஜகாத் நிதியிலிருந்து கொடுத்தும் அவர்களை விடுதலை செய்ய உதவ வேண்டும் என்றும் குர்ஆன் கூறுகிறது (பார்க்க குர்ஆன் 9:60)

இஸ்லாம் அடிமைத்தனத்தை ஆதரிக்கவில்லை. அடிமைத்தளையை அறுத்தெரியவும் மனிதனுடைய சமத்துவத்தைக் காக்கவும் அக்கரை எடுத்துள்ளது.



ஆக்கம் எழுதியவர் - அபூ ஆஸியா






Wednesday, December 7, 2011

2012,மாயன்கள் மற்றும் உலக முடிவு


2012 என்ற இந்த நான்கு இலக்கங்கள் அல்லது அவ்வருடம் " 2012 " என்ற ஹாலிவூட் திரைப்படம் வரும்வரை உலக மக்களிடையே அவ்வளவு பேசப்பட்ட ஒரு வார்த்தையல்ல.எப்ப அந்த திரைப்படம் உலக திரையரங்குகளில் வெளியிடப்பட்டதோ அதிலிருந்து இந்த வார்த்தை உலக மக்களிடையே பேசப்படும் ஒரு பிரபலமான வார்த்தையாகிப்போனது,அதக்கு காரணம் அத்திரைப்படம் தாங்கிவந்த 2012 இல் உலகம் அழியும் என்ற செய்திதான்.

இந்த திரைப்படத்தைப் பார்த்துவிட்டு 2012 இல் உலகம் அழியும் என குலம்பிப்பியிருப்பவர்களுக்கு மெக்சிகோவின் மானுடவியளுக்கான  தேசிய நிறுவகம் ஒரு ஆறுதல் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது(National Institute Of Anthropological).இதோ அந்த செய்தி.

நீங்கள் 2012  இல் உலகம் அழிந்து விடும் என்ற கவலையில் வாழும் ஒருவரா ? உங்களுக்கு இனி அந்த கவலையே வேண்டாம்.ஏனெனில் மாயன்களை   அடிப்படையாக வைத்து கணிக்கப்பட்ட அந்த கணிப்பு தற்போது தவறென்று நிரூபிக்கப்பட்டுள்ளது.இதை நிரூபித்தவர்கள் மெக்சிகோவின் மானுடவியளுக்கான நிறுவனம் ஆகும்.

மாயன் நாட்காட்டி நம் பாவிக்கும் நாட்காட்டியின் 2012-12-21 திகதியுடன் முடிவுக்கு வருகிறது.இது 5126 ஆவது மாயன் ஆண்டின் முடிவாகும்.இந்த ஆண்டின் முடிவின் பின் மாயன்களின் படைப்பிக்கும் யுத்தத்துக்கும் பொறுப்பான கடவுளான போலோன் யோக்தே (BOLON YOKTHE) இன் வருகை இடம்பெறும் என மாயன்கள் கணித்து வைத்திருந்தனர்.

போலோன் யோக்தே
 2012  உலகம் அழியும் அதை  மாயன்கள் அறிந்து வைத்திருந்தனர்.அதையே அவர்களின் நாட்காட்டி குறிக்கிறது என்ற கணிப்பை முதன் முதலில் வெளியிட்டவர் ஜோஸ் ஆர்குலஸ் ( JOSE ARGULOSE ) என்ற எழுத்தாளராவார்.இவர் 1987 ஆம் ஆண்டு வெளியிட்ட "தி எண்டிங் ஒப் தி டைம் வி நோ இட் " என்ற நூலிலேயே இதை முதன் முதலாக வெளியிட்டார்.அந்த நாட்களிலேயே இந்த கருத்துக்கு எதிர் கருத்துக்கள் எழுந்தன.ஜோஸின் கருத்துக்கு பதில் கருத்துகக் கூறிய மாயன் வரலாற்று நிருபர்கள் மாயன்களின் நாட்காட்டி முடிவென்பது உலகத்தின் முடிவல்ல அது ஒரு சகாப்தத்தின் முடிவேயாகும் என்று அப்போதே பதில் கூறப்பட்டது.மீண்டும் 2012 என்ற திரைப்படம் மூலம் உலக மக்களின் கவனத்தை ஈர்த்த இந்த விடயம் தொடர்பாக மெக்சிகோவின் மாயன் நிபுணர்கள் மீண்டும் தமது கருத்தை தெரிவித்துள்ளனர்.


"நாங்கள் இந்த விடயம் தொடர்பாக மக்களை அறிவூட்ட விரும்புகிறோம்,ஏனெனில் 2012 தொடர்பாக மாயன்கள் எந்த விதமான முன்னரிவித்தளையும் கணிக்கவில்லை.அது ஒரு தசாப்பத்தத்தின் முடிவேயன்றி உலகின் முடிவல்ல.இந்த கட்டுக்கத்தையை பரப்பியவர்களின் நோக்கம் வியாமாரமே அன்றி வேறில்லை" என எரிக் வேலச்கிவ் தெரிவித்தார்.இவர் மெக்சிகோவின் மானுடவியல் பல்கலைக்கழகத்தின் மாயன் காலாச்சார நிபுணர் ஆவார்.
மெக்சிகோவின் மானுடவியளுக்கான தேசிய நிறுவனம், 2012 உலகம் அழியும் என தவறான கணிப்பை வெளியிட்டு அதனை மீடியாக்கள் மூலம் பரப்பி வருபவர்களுக்கு தமது கண்டனங்களை தெரிவித்துள்ளது.மேலும் "தான்களே
உலகை காப்பவர்கள் என்ற பகல் கனவில் வாழும் மேற்கு  உலகம் தமது குறுகிய அரசியல் பொருளாதார நோக்கங்களுக்காக மாயன் கலாச்சாரங்கள் போன்ற பண்டைய கலாச்சாரங்களின் உண்மைத் தன்மையை மறைத்து பொய்யை பரப்பி வருகின்றன" என அந்த கண்டன அறிக்கை கூறுகிறது.
 


(இந்த 2012 திரைப்படம் மற்றும் அதனூடாக காட்டப்பட்ட விடயங்கள் தொடர்பான இஸ்லாமிய நிலைப்பாடு இன்ஷா அல்லாஹ் அடுத்த ஆக்கத்தில் அலசப்படும்.மேலே உள்ள செய்தி Reuters செய்திச் சேவை வெளியிட்ட ஆக்கத்தை தழுவி எழுதப்பட்ட ஒன்றாகும்.)


இந்த ஆக்கத்தை வாசித்தமைக்கு நன்றி.தவறுகள் இருந்தால் சுட்டிக்காட்டவும்  திருத்திக்கொள்கிறேன்.
ஜசாகல்லாஹு ஹேர்.

உங்கள் நண்பன்
எம்.ஹிமாஸ் நிலார்  




Monday, September 19, 2011

கிப்லா மாற்றமும் உலகத் தலைமைத்துவமும்

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்
 
கிப்லா மாற்றமும் உலகத் தலைமைத்துவமும்
 
            ரமலானுக்குப் பின் அண்ணலார் மிக அதிகமாக நோன்பு நோற்ற மாதம் ஷஅபான் மாதம். இது இஸ்லாமிய வரலாற்றில் முதன்மையான மற்றொரு நிகழ்வுக்கு சாட்சி வகிக்கும் மாதமும் கூட. பராஅத் இரவு பற்றிய விவாதங்களுக்கிடையே, எல்லோரும் மறந்து போன வரலாற்று நிகழ்வு அது. பைத்துல் முகத்தஸை நோக்கி தொழுது கொண்டிருந்த முஸ்லிம் சமூகம் அல்லாஹ்வின் ஆணைக்கேற்ப மக்காவில் உள்ள கஅபாவை நோக்கித் தொழ ஆரம்பித்தது ஹிஜ்ரி இரண்டாம் ஆண்டு ஷஅபான் மாதம் முதலே ஆகும்.

 
            கிப்லா மாற்றம் என்பது தொழுகையின் சட்ட அம்சங்களுடன் தொடர்புடைய ஒரு பிரச்சினை மட்டுமன்று. தொழுகையின் போது கிப்லாவை நோக்கித் தான் நிற்க வேண்டுமா, கிப்லாவை நோக்கித் திரும்பினால் போதுமா? ஆகியவை எல்லாம் சட்ட நூல்களில் அடி முதல் நுனி வரை அலசி ஆராயப்பட்டுள்ளன என்றாலும் கிப்லா மாற்றம் தொடர்பான வரலாற்று ஆய்வுகளை அதிகம் காண முடிவதில்லை. கஅபாவை கிப்லாவாக நிர்ணயிப்பதற்கு முன் முஸ்லிம்கள் பாலஸ்தீனத்தில் உள்ள பைத்துல் முகத்தஸை நோக்கித் தொழுது கொண்டிருந்தனர். ஓரிறைக் கோட்பாட்டின் அடையாளச் சின்னமாக எல்லாக் காலத்திலும் திகழ்ந்த கஅபாவிற்கு பதிலாக, துவக்கத்தில் பைத்துல் முகத்தஸை கிப்லாவாக நிர்ணயம் செய்ததற்கான காரணம் என்ன?
            அதைக் குறித்து குர்ஆன் கூறுவதைக் கேளுங்கள் : “(இதற்கு முன்பு) எந்தத் திசையை நோக்கி நீர் தொழுது வந்தீரோ, அதனைக் கிப்லாவாக நாம் ஆக்கி வைத்திருந்ததெல்லாம் யார் இறைத்தூதரைப் பின்பற்றுகிறார்கள்; யார் மாறிச் சென்று விடுகிறார்கள் என்பதை நாம் அறிவதற்காகத்தான்! இது (கிப்லா மாற்றம் மிக்க கடினமாகவே இருந்தது. ஆனால் அல்லாஹ் காட்டிய நேர்வழியைப் பெற்றிருந்தவர்களுக்கு அது சிறிதும் கடினமாக இருக்க வில்லை.” (2:143)
            அரேபியர்கள் குருட்டுத்தனமான ஒரு சார்புத் தன்மை கொண்டவர்களாகவும், இனப் பெருமைப் பாராட்டுவதில் கர்வம் கொள்ளக்கூடியவர்களாகவும் இருந்தனர். குலப்பெருமையில் மூழ்கித் திழைத்த அவர்களுக்கு கஅபாவை விட்டுவிட்டு அவர்களின் பண்பாட்டுப் பிண்ணனியுடன் எந்தத் தொடர்பும் இல்லாத, பைத்துல் முகத்தஸை மையமாக ஆக்குவது என்பதை நினைத்துப் பார்க்கவே முடியாது. இந்த இனப்பெருமைக்கு சாவு மணியடிக்கும் விதத்தில்தான் பைத்துல் முகத்தஸ் கிப்லாவாக ஆக்கப்பட்டது. இத்தகைய குறுகிய கண்ணோட்டத்தையும் தீண்டாமையையும் இதயத்தில் வைத்துப் பூசிப்பவர்களுக்கு இறைச் செய்தியின் உன்னதத்தை உள்வாங்கிக் கொள்வது சாத்தியமாக இருக்கவில்லை. அதனால்தான் இத்தகைய குறுமதியாளர்களையும் மண்ணின் மைந்தர்கள் என வாதிடுவோர்களையும் இறைமார்க்கத்தில் இணைந்திடுகின்ற பரந்த மனப்பாண்மை கொண்டவர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்ட வேண்டும் என்பது தான் துவக்கத்தில் பைத்துல் முகத்தஸைக் கிப்லாவாக நிர்ணயம் செய்ததில் உள்ள இறை விவேகம்.
            மூடத்தனமான அரபு தேசியவாத்திற்குப் பதிலாக மனித குலத்தை ஒன்றாகக் கருதுகின்ற, சமமாகப் பாவிக்கின்ற நிலையை அண்ணலாரிடம் பயிற்சி பெற்ற முஸ்லிம் சமூகம் பெற்று விட்டதால் பைத்துல் முகத்தஸின் தலைமைப் பதவியை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என அல்லாஹ் கருதியதாலேயே இந்தக் கிப்லா மாற்றம் நடைபெற்றது. கிப்லா மாற்றம் என்பது தொழுகையின் திசை மாற்றச் சடங்காக மட்டும் இருக்க வில்லை என்பதே இதன் பொருள்.
            கிப்லா மாற்றத்தைப் பிரகடனம் செய்வதற்கு முன்னோடியாக மேலே விவரிக்கப்பட்ட விவாதத்தை அல்லாஹ் ஆரம்பிப்பது இப்படித்தான்; “ மக்களில் அறிவீனர்கள், ( இவர்களுக்கு என்ன நேர்ந்து விட்டது?) இவர்கள் எந்த கிப்லாவை முன்னோக்கிக் கொண்டிருக்கிறார்களோ அதிலிருந்து (திடீரென) இவர்களைத் திருப்பியது எது? என நிச்சயம் கேட்பார்கள். (நபியே! அவர்களிடம்) சொல்வீராக : கிழக்கு, மேற்கு அனைத்தும் அல்லாஹ்விற்கே உரியனவாகும். தான் நாடுகின்றவர்களை அவன் நேரான வழியில் செலுத்துகின்றான். மேலும் இவ்வாறே (முஸ்லிம்களான) உங்களை நாம் உம்மத்தன் வஸத்தன் – சமநிலையுடைய சமுதாயமாக ஆக்கினோம். நீங்கள் மக்களுக்கு சான்று வழங்குபவர்களாயும், இறைத்தூதர் உங்களுக்குச் சான்று வழங்குபவராயும் திகழ்ந்திட வேண்டும் என்பதற்காக! (2 : 142 – 143)
            இந்த வசனத்தை விளக்கி மௌலானா மௌதூதி எழுதுகின்றார் : முஹம்மது நபியின் சமுதாயத்தின் தலைமைத்துவத்தைக் குறித்த பிரகடனம் இது. இவ்வாறே என்ற சொல்லில், முஹம்மது நபியின் தலைமைத்துவத்தை ஏற்றுக் கொண்டவர்களுக்கு நேரிய வழியை அறிந்து கொள்ளவும், அதன் மூலம் முன்னேறி உம்மத்தன் வஸத்தன் என்ற உயர் தகுதியைப் பிடிக்கவும் காரணமான வழிகாட்டுதலின் பக்கமும், கிப்லாவை மாற்றிய நிகழ்வின் பக்கமும் என இரண்டையும் சுட்டிக்காட்டும் குறிப்பு உள்ளது. கிப்லா ஒரு பகுதியிலிருந்து இன்னொரு பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளது என்று மட்டுமே அதனைக் குறித்து அறிவீனர்கள் புரிந்து வைத்திருந்தனர். உண்மையில், பைத்துல் முகத்தஸிலிருந்த கிப்லாவை கஅபாவுக்கு மாற்றியது உலகத் தலைமைத்துவப் பதவியிலிருந்து அல்லாஹ் இஸ்ரவேலர்களை அதிகாரப்பூர்வமாக அகற்றி விட்டான். முஹம்மது நபியைப் பின்பற்றியவர்களுக்கு அந்தப் பதவியை அளித்துள்ளான் என்பதன் அடையாளமாகும். (தஃப்ஹீமுல் குர்ஆன் பாகம் 1, பக்கம் 108, குறிப்பு 144)
            பின்னர் கிப்லா மாற்றம் குறித்த அதிகாரப்பூர்வ பிரகடனம் அருளப்பட்டது. “நபியே! உம்முடைய முகம் (அடிக்கடி) வானத்தை நோக்குவதை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இதோ, நீர் எந்தக் கிப்லாவை விரும்புகின்றீரோ அதன் பக்கமே நாம் உம்மை திருப்பி விடுகின்றோம். மஸ்ஜிதுல் ஹராம் (கஅபா ஆலயம்) பக்கமாக உம்முடைய முகத்தைத் திருப்புவீராக! இனி நீங்கள் எங்கிருப்பினும் (தொழுகைக்காக) அதன் பக்கமே உங்கள் முகங்களைத் திருப்புவீராக!” (2:144).
            உம்முடைய முகம் அடிக்கடி வானத்தை நோக்குவதை நாம் காண்கின்றோம் என்றும், நீங்கள் விரும்புகின்ற கிப்லாவின் திசையை நோக்கி நாம் உம்மைத் திருப்பி விடுகின்றோம் என்றும் கூறப்பட்டிருப்பதை விளக்கும்போது அவர் எழுதுகின்றார்: “…….இஸ்ரேலியர்களின் தலைமைப் பதவி முடிவடைந்து விட்டது எனவும், பைத்துல் முகத்தஸின் தலைமைப் பதவி முடிவடைந்து விட்டது எனவும், இப்றாஹீம் (அலை) அவர்கள் எழுப்பிய மையத்தை நோக்கித் திரும்பும் வேளை வந்து விட்டது எனவும், அண்ணலார் அவர்களே எண்ணத் தொடங்கி விட்டார்கள். (பாகம் 1, பக்கம் 111, குறிப்பு 146).
            கிப்லா மாற்றம் தொடர்பான விவாதம் இவ்வாறு முடிவடைகிறது: நீர் எங்கிருந்து புரப்பட்டுச் சென்றாலும் உமது முகத்தை மஸ்ஜிதுல் ஹராம் பக்கம் திருப்புவீராக. உங்களுக்கு எதிராக மக்களுக்கு எந்த ஆதாரமும் கிடைக்கக் கூடாது என்பதற்காக நீங்கள் எங்கிருந்தாலும் உங்கள் முகங்களை (தொழுகையின் போது) அதன் பக்கமாக திருப்புங்கள். – ஆனால் அவர்களைச் சேர்ந்த அக்கிரமக்காரர்கள் தர்க்கித்துக் கொண்டுதான் இருப்பார்கள். எனவே நீர் அவர்களுக்கு அஞ்ச வேண்டாம். எனக்கே அஞ்சுவீர்களாக! எதற்காகவெனில், நான் என் அருட்கொடையை உங்கள் மீது முழுமையாக்க வேண்டும் என்பதற்காகவும், மேலும் நீங்கள் நேரிய பாதையை அடையக்கூடும் என்பதற்காகவும்தான். (2:150)
            இந்த வசனத்தில் அடிக்குறிப்பிட்டுள்ள பகுதியை விளக்கி மௌதூதி எழுதுகின்றார் : இஸ்ராயீலர்களிடமிருந்து பறிக்கப்பட்டு இந்த சமுதாயத்திற்கு வழங்கப்பட்டுள்ள உலக தலைமைத்துவம் என்பது ஓர் அருட்கொடையாகும். ஒரு சமுதாயத்திற்கு இம்மையில் கிடைக்கின்ற மிகச் சிறந்த நன்மை என்னவெனில், அவர்களை உலக மக்களின் தலைவர்களாகவும் வழிகாட்டிகளாகவும் ஆக்குவதாகும். இறையச்சம், சத்திய மார்க்கத்தின் மூலம் மனித சமூகத்தை வழிநடத்திச் செல்லும் பொறுப்பு அவர்களிடம் ஒப்படைக்கப்படுவதாகும். இந்தப் பதவியும் சிறப்பும் ஒரு சமுதாயத்திற்கு வழங்கப்படுவதன் பொருள், அல்லாஹ்வின் அருட்கொடை அவர்களுக்கு முழுமையாக கிடைத்தது விட்டது என்பதாகும். கிப்லா மாற்றம் தொடர்பான இந்தக் கட்டளை மேலே குறிப்பிடப்பட்ட சிறப்புத் தகுதி உங்களுக்கு வழங்கப்பட்டிருப்பதன் தெளிவான அடையாளமாகும்.
            சுருக்கத்தில் இஸ்ராயீலர்களிடம் இருந்த உலகத் தலைமைத்துவத்தைப் பறித்து முஹம்மது நபியின் சமூகத்திடம் ஒப்படைப்பதற்கான நிகழ்வாகவே இருந்தது கிப்லா மாற்றம். இங்கே சில கேள்விகள் எழுகின்றன. ஏன் அல்லாஹ் இப்படி ஒரு முடிவை எடுத்தான்? இஸ்ராயீலர்களிடமிருந்து தலைமைப் பதவியைப் பறிக்கின்ற போது அவர்களிடம் காணப்பட்ட குறைபாடுகள் என்னென்ன?
            இஸ்ராயீலர்களிடமிருந்த குறைபாடுகளையும் தகுதியின்மையையும் திருக்குர்ஆன் இவ்வாறு பட்டியலிடுகிறது :
1.பரம்பரை வாதம்
            “ஒரு யூதராகவோ (கிறிஸ்தவர்கள் வாதிக்கின்றபடி) ஒரு கிறிஸ்தவராகவோ இல்லாத எவரும் சுவனம் புக மாட்டார் என்று அவர்கள் கூறுகின்றார்கள். இவை அவர்களின் நப்பாசைகளே ஆகும்.” (2:111)
            இன்னுமோர் இடத்தில் அவர்களின் பாரம்பர்ய வாதத்தைக் குறித்து கூறுகிறது : “(யூதர்கள் கூறுகின்றார்கள்:) நீங்கள் யூதர்களாக இருங்கள்; நேர் வழி பெறுவீர்கள்! (கிறிஸ்தவர்கள் கூறுகின்றார்கள்:) நீங்கள் கிறிஸ்தவர்களாக இருங்கள்; நேர்வழி பெறுவீர்கள்! (அவர்களிடம்) சொல்வீராக : இல்லை, நான் அனைத்திலிருந்தும் முகம் திருப்பி இப்ராஹீமின் வழிமுறையை ஏற்றுக் கொண்டுள்ளேன். மேலும் அவர் இணை வைப்பவர்களில் ஒருவராய் இருக்கவில்லை.” (2:135)
            மனித சமூகத்தை ஒன்றாகக் கருதுகின்றவர்களுக்கே உலகத் தலைமைப் பதவியை நிர்வகிக்கின்ற தகுதி உள்ளது எனும் படிப்பினையை இந்த வசனத்தில் அவர்களின் பாரம்பர்ய வாதத்தைக் கடுமையாக விமர்சித்த வண்ணம் அல்லாஹ் கூறுகின்றான்.
2.சத்தியத்தை மறைத்தல்
            கிப்லா மாற்றம் தொடர்பான விவாதம் தொடங்குவதற்கு சற்று முன்பு, இஸ்ராயீல்கள் சத்தியத்தை மறைக்கின்றனர் எனக் குர்ஆன் குற்றம் சாற்றுகிறது.
            “அல்லாஹ்விடமிருந்து வந்த ஒரு சான்றைத் தன்னிடம் வைத்துக் கொண்டு அதனை மறைப்பவனை விடப் பெரிய அக்கிரமக்காரன் யார்? மேலும் நீங்கள் செய்து கொண்டிருப்பவைப் பற்றி அல்லாஹ் கவனமற்றவனாக இல்லை.” (2:140)
            கிப்லா மாற்ற விவாதத்தின் இறுதியில் சத்தியத்தை மறைத்து வைக்கக் கூடியவர்களுக்கு கிடைக்கக் கூடிய இம்மை – மறுமை தண்டனைகள் குறித்து குர்ஆன் விளக்கியுள்ளது.
            (2:159,160 & 174) உத்தம சமுதாயம், சமநிலைச் சமுதாயம் ஆகிய சிறப்புகளைப் பெற்ற ஒரு சமூகத்தினரிடம் சத்தியத்திற்கு சான்று பகர்தல் எனும் மிக முக்கியமான தகுதி இருக்க வேண்டியது மிக அவசியமாகும்.
            3. தவறான விளக்கம் அளித்தல்.
            அல்லாஹ் கூறுகின்றான் : “சொற்ப விலைக்கு விற்று, சிறிது இலாபம் பெறுவதற்காக தமது கைகளாலேயே ஒரு (சட்ட) நூலை எழுதிப் பின்னர், இது அல்லாஹ்விடமிருந்து வந்துள்ளது என்று (மக்களை நோக்கிக்) கூறுவோருக்குக் கேடுதான்! எனவே, அவர்களுடைய கைகள் எழுதியதும் அவர்களுக்குக் கேடுதான். மேலும் அதனைக் கொண்டு அவர்கள் சம்பாதித்ததும் அவர்களுக்குக் கேடுதான்!” (2:79)
            வேத வசனங்களிலிருந்து சுயநலன்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கானவற்றை  மட்டும் ஏற்றுக் கொண்டு மீதியுள்ளவற்றைப் புறக்கணிக்கவும் செய்கின்ற இஸ்ராயீல்களின் தீய பழக்கத்தைக் குர்ஆன் கண்டிக்கிறது : “நீங்கள் வேதத்தின் ஒரு பகுதியை நம்பி, மறு பகுதியை நிராகரிக்கிறீர்களா? உங்களில் இவ்வாறு செய்பவர்களுக்கு இவ்வுலக வாழ்வில் இழிவைத் தவிர வேறெந்தக் கூலியும் இல்லை. மறுமை நாளிலோ மிகக்கடுமையான வேதனையின் பக்கம் அவர்கள் திருப்பப்படுவார்கள். மேலும் நீங்கள் செய்து கொண்டிருக்கின்ற (இழி) செயல்கள் பற்றி அல்லாஹ் கவனமற்றவனாய் இல்லை.” (2:85). இஸ்ராயீல்களின் தகுதியையும், பதவியையும் பறித்து இவ்வுலகிலேயே இழிவுபடுத்தப்படுவதற்கான காரணத்தையும் விளக்குகிறது குர்ஆன்.
4. இறைச் சட்டங்களைப் பரிகசிப்பது.
            அல்லாஹ் வழங்கிய அருட்கொடைகளை மதிக்காமல் இறைச் சட்டங்களையும் இறைத்தூதரின் போதனைகளையும் பரிகாசம் செய்த இஸ்ராயீல்களைக் குர்ஆன் கண்டிக்கிறது. பசுவின் மீது கொண்ட பக்தியின் காரணமாக அதை வழிபடும் பழக்கத்தைக் கொண்ட இஸ்ராயீல்களை அதிலிருந்து விடுபடச் செய்யவும், அது தவறு என்பதை உணர்த்தவும் பசுவை அறுக்கும்படி கூறப்பட்டபோது அவர்கள் கடைப்பிடித்த நிலைப்பாடு இதற்கு எடுத்துக்காட்டாகும். (2: 67 – 74)
            ஓர் உத்தம சமுதாயத்திடம் இருக்க வேண்டிய சிறப்புத் தன்மைகள் தவிர அடிப்படை மனித இயல்புகளான மன வலிமை, உறுதி, விவேகம், வீரம், கடின உழைப்பு, விடுதலை வேட்கை, குறிக்கோள் மீதான பற்று, அர்ப்பணிப்பு, விவகாரங்களைப் புரிந்து கொள்ளும் ஆற்றல், திட்டமிடல், மக்களைச் செயல்படத் தூண்டும் ஆற்றல் ஆகிய குணங்களை இழந்த நிலையில் இருந்தனர் இஸ்ராயீல்கள் என்பதை திருக்குர்ஆன் ‘அல்பகரா’ அத்தியாயத்தின் மூலம் படம் பிடித்துக் காட்டுகிறது.
            இத்தகைய ஆன்மீக, மனித வள ஆற்றல்கள் மேலிடுகின்ற போது தான் இறைவனின் பிரதிநிதி எனும் பொறுப்பு ஒரு சமூகத்தின் மீது சுமத்தப்படுகிறது. இத்தகைய ஒரு குழுவினர் உலகில் இல்லை என்றால், மனித வள ஆற்றல்களை மட்டுமே கொண்ட, உலக விவகாரங்களில் மேம்பட்டு நிற்கின்றவர்களுக்கு அல்லாஹ் உலகத் தலைமைப் பதவியை வழங்குகின்றான். இதுவும் அல்லாஹ்வின் நடவடிக்கைகளில் ஒன்றாகும்.
 
 
 
நன்றி : சமரசம் செப்டம்பர் 2009
தமிழில் – சுல்தானா

Sunday, September 4, 2011

ஒரே இறைவன் வெவ்வேறு பிரார்த்தனைகள்?

அல்லாஹ் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு முன் வாழ்ந்த எல்லா சமூகத்தவர்களுக்கும் அவர்களுக்கு அனுப்பப்பட்ட நபிமார்கள் மூலம் தன்னை எவ்வாறு தொழ(பிரார்த்தனை செய்ய)வேண்டும் என அறிவுருத்தியுள்ளான்.இதற்கு குரானிலும் பல ஆதாரங்கள் உள்ளன.என்றாலும் அந்த தொழுகை முறை எவ்வாறு இருந்தன என்பது பற்றி ஒரு தெளிவான ஆதாரம் நம்மிடையே இல்லை.

கீழுள்ள வசனங்கள் தெளிவாக நமக்கு உணர்த்துவது என்னவென்றால் நபிகள் நாயகம் (ஸல்) அவரகளுக்கு முன் வாழ்ந்த சமூகத்தவர்களுக்கு அல்லாஹ் தன்னை தொழுமாறு(பிரார்த்திக்குமாறு) கட்டளையிட்டுள்ளான் என்பது.

இப்ராஹீம் (அலை) அவர்களுக்கு..
(“என்) இறைவனே! தொழுகையை நிலைநிறுத்துவோராக என்னையும், என்னுடைய சந்ததியிலுள்ளோரையும் ஆக்குவாயாக! எங்கள் இறைவனே! என்னுடைய பிரார்த்தனையையும் ஏற்றுக் கொள்வாயாக!”(14 : 40 )

மூஸா (அலை) அவர்களுக்கு..
“நிச்சயமாக நாம் தான் அல்லாஹ்! என்னைத் தவிர வேறு நாயன் இல்லை; ஆகவே, என்னையே நீர் வணங்கும், என்னை தியானிக்கும் பொருட்டு தொழுகையை நிலைநிறுத்துவீராக.(20:14)

ஈஸா (அலை) அவர்களுக்கு..
“இன்னும், நான் எங்கிருந்தாலும், அவன் என்னை முபாரக்கானவனாக (நற்பாக்கியமுடையவனாக) ஆக்கியிருக்கின்றான்; மேலும், நான் உயிருடன் இருக்கும் காலமெல்லாம் தொழுகையையும், ஜகாத்தையும் (நிறை வேற்ற) எனக்கு வஸீய்யத் செய்து (கட்டளையிட்டு) இருக்கின்றான்.(19:31)


 நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு..
(நபியே!) இவ்வேதத்திலிருந்து உமக்கு அறிவிக்கப்பட்டதை நீர் எடுத்தோதுவீராக; இன்னும் தொழுகையை நிலை நிறுத்துவீராக; நிச்சயமாக தொழுகை (மனிதரை) மானக்கேடானவற்றையும் தீமையையும் விட்டு விலக்கும். நிச்சயமாக, அல்லாஹ்வின் திக்ரு (தியானம்) மிகவும் பெரிதா(ன சக்தியா)கும்; அன்றியும் அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கறிகிறான்.(29:45)

இஸ்லாத்தின் பார்வையில் தொழுகை என்பது ஒரு முஸ்லிமின் தலையாய கடமை,மேலும் இஸ்லாத்தின் தூண்களில் ஒன்று.தொழுகை முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு மிஹ்ராஜின் போது சுவர்கத்தில் அருளப்பட்ட ஒரு மாபெரும் பரிசாகும்.இதனாலே தொழுகை எங்களைப் படைத்த ரப்பாகிய அல்லாவுக்கும் அவனை வணங்கும் முஸ்லிம்களுக்கும் இடையே ஒரு தொடர்பை உருவாக்குகிறது.எனவே தொழுகை என்பது ஒவ்வொரு முஸ்லிமுக்கும் ஒரு அத்தியாவசிய கடமையாகும்.அதனாலே அல்லாஹ் அதன் முக்கியத்துவத்தை திரும்பத் திரும்ப ஒவ்வொரு இடத்திலும் நமக்கு நினைவூட்டுகிறான்.

"நீங்கள் தொழுகையை முடித்துக் கொண்டால், நின்ற நிலையிலும், இருந்த இருப்பிலும், விலாப்புறங்களின் மீது (படுத்திருக்கும்) நிலையிலும் அல்லாஹ்வை திக்ரு செய்யுங்கள்; பின்னர் நீங்கள் (ஆபத்தினின்று விடுபட்டு) அமைதியான நிலைக்கு வந்ததும், முறைப்படி தொழுது கொள்ளுங்கள் - ஏனெனில், நிச்சயமாக குறிப்பிட்ட நேரங்களில் தொழுகையை நிறைவேற்றுவது முஃமின்களுக்கு விதியாக்கப் பெற்றுள்ளது."(4:103)

மறுமை நாளில் அல்லாஹ் தன் அடியானிடம் தொழுகையைப் பற்றி கேட்பான்,அப்போது அவனின் தொழுகை சீராக இருந்தால்  எல்லாம் சீராக இருக்கும் மாறாக தொழுகை கேடாக இருந்தால் அவனுக்கு எல்லாம் கேடாகவே இருக்கும்.(தபரானி)

பைபிளின் புதிய மற்றும் பழைய ஏற்பாடுகளில் இறைவனைத் தொழுவது என்பது முகம்குப்புற வீழ்தல்(prostration) என்றே கூறப்பட்டுள்ளது.


  • இப்ராஹீம்(அலை) அவர்களின் வணக்கமுறையை பைபிள் கூறும்போது..
"அப்பொழுது ஆபிராம் முகங்குப்புற விழுந்து வணங்கினான். தேவன் அவனோடே பேசி:"(Genesis 17:3)

  • மூசா (அலை) அவர்களின் வணக்கமுறையை பைபிள் கூறும்போது..
"மோசே தீவிரமாகத் தரைமட்டும் குனிந்து பணிந்துகொண்டு:"(Exodus 34:8)

  • ஈஸா (அலை) அவர்களின் வணக்கமுறையை பைபிள் கூறும்போது..
சற்று அப்புறம்போய், முகங்குப்புற விழுந்து: என் பிதாவே, இந்தப்பாத்திரம் என்னைவிட்டு நீங்கக்கூடுமானால் நீங்கும்படிசெய்யும்; ஆகிலும் என் சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது என்று ஜெபம்பண்ணினார்.(Matthew 26:39)

இவ்வாறே முஹம்மது(ஸல்) அவர்களுக்கு முன் வாழ்ந்த சமூகங்களுக்கு அவர்களுக்கு அனுப்பப்பட்ட நபிமார்கள் மூலம் எப்படி தொழ வேண்டும் என்று கற்றுக்கொடுக்கப்பட்டது.ஆனால் நமக்கு வழங்கப்பட்ட ஒருநாளைக்கு ஐந்துவேளை தொழுகை அவர்களுக்கு வழங்கப்பட்டதா ?  என்பது பற்றி பைபிளில் எவ்வித ஆதாரமும் இல்லை.

அறிஞர்களின் கூற்றுப்படி,நபியவர்களின் விண்ணுலக யாத்திரையின் பின் தற்போதுள்ள தொழுகை முறை கட்டாயமாக்கப்பட முன்,அந்த சமூகத்தினருக்கு ஒரு வழிபாட்டு முறை இருந்ததாகவும் அது இரு ரக்காத்துகள் வீதம் மாலையிலும் காலையிலும் கடைபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.இதற்கு ஆதாரமாக பின்வரும் குரான் வசனத்தை காட்டுகின்றனர்

"ஆகவே, நீர் பொறுமையுடன் இருப்பீராக. நிச்சயமாக அல்லாஹ்வின் வாக்குறுதி உறுதியுடையதாகும். உம் பாவத்திற்காக மன்னிப்புக் கோருவீராக; மாலையிலும் காலையிலும் உம் இறைவனைப் புகழ்ந்து, தஸ்பீஹு (துதி) செய்து கொண்டு இருப்பீராக!"(40:55)
 
மேலுள்ள வசனம் நபி மூஸா (அலை) அவர்களுக்கு அல்லாஹ் தன்னை தொழுமாறு கட்டளையிடும் வசனமாகும்.


அல்லாஹ் எல்லாம் அறிந்தவன்.தவறுகள் இருந்தால் சுட்டிக்காட்டவும்.
மேலதிக விளக்கங்கள் தெரிந்தால் Comment இடவும்.
ஜசாகல்லாஹு ஹைர்.
Special Thanks To Onislam.com

Saturday, August 6, 2011

ஷைத்தான் ஒரு மலக்கா ? இல்லை ஜின்னா ?

நபி ஆதம் (அலை) அவர்களும் - இப்லீஸும் இருக்கின்ற வரலாற்று சம்பவங்கள் அருள்மறை குர்ஆனில் பல வசனங்களில் குறிப்பிடப் பட்டுள்ளது.
அருள்மறை குர்ஆனின் 2வது அத்தியாயம் ஸுரத்துல் பகராவின் 34வது வசனம் கீழ் கண்டவாறு குறிப்பிடுகிறது:

பின்னர் நாம் மலக்குகளை நோக்கி, 'ஆதமுக்கு பணி(ந்து ஸுஜுது செய்) யுங்கள்' என்று சொன்னபோது இப்லீஸைத் தவிர மற்ற அனைவரும் சிரம் பணிந்தனர். அவன் (இப்லீஸு) மறுத்தான்: ஆணவமும் கொண்டான்: இன்னும் அவன் காஃபிர்களைச் சார்ந்தவனாகி விட்டான்
.(அல் குர்ஆன் 2:34)

 
மேற்படி பொருள் தரக் கூடிய அருள்மறை குர்ஆனின் அத்தியாயங்களின் பெயர்களும் வசனங்களின் எண்களும் பின் வருமாறு:
அத்தியாயம் 15 ஸுரத்துல் ஹிஜ்ர் வசனம் 28 - 31
அத்தியாயம் 17 ஸுரத்துல் பனீ இஸ்ராயீல் வசனம் 61
அத்தியாயம் 20 ஸுரத்துல் தாஹா வசனம் 116
அத்தியாயம் 38 ஸுரத்துல் ஸாத் வசனம் 71 - 74.
ஆனால் அருள்மறை குர்ஆனின் அத்தியாயம் 18 ஸுரத்துல் கஃபுவின் 50வது வசனம் கீழ் கண்டவாறு குறிப்பிடுகிறது:

அன்றியும், 'ஆதமுக்கு ஸுஜுது செய்யுங்கள்' என்று நாம் மலக்குகளிடத்தில் கூறியதை (நபியே) நினைவு கூர்வீராக: அப்போது இப்லீஸைத்தவிர, அவர்கள் ஸுஜுது செய்தார்கள்;: அவன் (இப்லீஸ்) ஜின் இனத்தை சேர்ந்தவனாக இருந்தான்:... (அல் குர்ஆன் 18:50)

2. அரபிய முறையில் பின்பற்றுதல்:

 
பின்னர் நாம் மலக்குகளை நோக்கி, 'ஆதமுக்கு பணி(ந்து ஸுஜுது செய்) யுங்கள்' என்று சொன்னபோது இப்லீஸைத் தவிர மற்ற அனைவரும் சிரம் பணிந்தனர். அவன் (இப்லீஸு) மறுத்தான்: ஆணவமும் கொண்டான்: இன்னும் அவன் காஃபிர்களைச் சார்ந்தவனாகி விட்டான்.
(அல் குர்ஆன் 2:34)



மேற்படி அருள்மறை குர்ஆனின் மொழியாக்கத்தை நாம் மேலோட்டமாகப் படித்துப் பார்த்தால் - இப்லீஸும் மலக்கு இனத்தைச் சார்ந்தவன் தானோ என்று நம்மை எண்ணத் தூண்டும். அருள்மறை குர்ஆன் அரபி மொழியில் இறக்கியருளப்பட்டது என்பதை நாம் அறிவோம். அரபி இலக்கணத்தில் ஒரு கட்டளையை பின்பற்றுவதற்கென்று ஓர் முறை உள்ளது. அதற்கு 'தக்லீப்' என்று பெயர். மேற்படி முறைப்படி - பெரும்பாலானவர்களுக்கு விதிக்கப்படக்கூடிய கட்டளை -சிறுபான்மையாக உள்ளவர்களுக்கும் பொருந்தும். உதாரணத்திற்கு 100 மாணவர்கள் உள்ள ஒரு வகுப்பறையில் 99 பேர் ஆண்களும் மீதி ஒருவர் மாத்திரம் பெண்ணாகவும் இருக்கிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள். ஆண் மாணவர்கள் அனைவரும் எழுந்திருங்கள் என்று நான் அரபி மொழியில் சொன்னால், அது வகுப்பறையில் அமர்ந்திருக்கும் பெண் மாணவிக்கும் பொருந்தும். பெண் மாணவியும் எழுந்திருக்க வேண்டும் என்று நான் அரபியில் தனியாகச் சொல்ல வேண்டிய கட்டாயம் இல்லை.


அதுபோலத்தான் அருள்மறை குர்ஆனின் மேற்படி வசனத்திலும், அல்லாஹ் மலக்குகளுக்கு கட்டளையிடும்போது - இப்லீஸும் அங்கு இருந்ததால் - இப்லீஸுக்கு என்று தனியாக கட்டளையிட வேண்டிய அவசியம் இல்லை. அவ்வாறு இப்லீஸுக்கு என்று தனியாக கட்டளை இடாத காரணத்தால் - இப்லீஸும் - மலக்கு இனமோ என்று நம்மை எண்ணத் தூண்டுகிறது. ஆனால் இப்ல{ஸ் மலக்கு இனம் இல்லை. அவன் ஜின் இனத்தைச் சார்ந்தவன் என்பது அருள்மறை குர்ஆனின் 18வது அத்தியாயம் ஸுரத்துல் கஃபுவின் 50வது வசனத்திலிருந்து நாம் தெளிவாக அறியலாம். அருள்மறை குர்ஆனின் மற்ற எந்த வசனத்திலும் இப்ல{ஸ் மலக்கு இனம் என்று குறிப்பிடவில்லை என்பதாலும், அருள்மறை குர்ஆனின் 18வது அத்தியாயம் ஸுரத்துல் கஃபுவின் 50வது வசனம் இப்லீஸு ஜின் இனத்தைச் சார்ந்தவன் என்று தெளிவாக குறிப்பிடுவதாலும் - இப்லீஸு ஜின் இனத்தைச் சார்ந்தவன்தான் என்பதை நாம் தெளிவாக விளங்கிக் கொள்ள முடியும்.


3. ஜின்களுக்கு அல்லாஹ்வின் கட்டளையை ஏற்கவோ அல்லது ஏற்காமல் இருக்கவோ உள்ள சுதந்திரம் உண்டு.
 
அடுத்து ஜின்கள் சுதந்திரமானவை. அவைகள் அல்லாஹ்வின் கட்டளையை ஏற்று நடக்கவோ அல்லது அல்லாஹ்வின் கட்டளையை நிராகரிக்கவோ உள்ள உரிமை உண்டு. ஆனால் மலக்குகளுக்கு அல்லாஹ் அற்த உரிமையை வழங்கவில்லை. மலக்குகள் அல்லாஹ்வின் கட்டளையை அப்படியே ஏற்று செயல்படக் கூடியவை. எனலே இப்லீஸ் மலக்கு இனமாக இருந்தால், அல்லாஹ்வின் கட்டளையை நிராகரிக்கும் செயலுக்கே இடமில்லை. இவ்வாறு அல்லாஹ்வின் கட்டளையை இப்லீஸ் ஏற்றுக் கொள்ளாமல் நிராகரித்ததிலிருந்தும் - இப்லீஸ் மலக்கு இனமல்ல, ஜின் இனம்தான் என்பதை நாம் தெளிவாக அறிந்து கொள்ளலாம்.



ARTICLE FROM OTRUMAI TEAM