Thursday, August 18, 2011

அமெரிக்காவிலும் ஐரோப்பாவிளும் வளரும் வலதுசாரி தீவிரவாதம்.



ஒஸ்லோவில் ஜூலை 22 இல் இடம்பெற்ற தாக்குதலில் வலதுசாரி தீவிரவாதியான ஆண்டர்ஸ் ப்றேவிக் என்ற பாசிசவாதியுடன் இன்னொரு பயங்கரவாதமும் மிக நீண்டநாளுக்குப் பின் கண்டுகொள்ளப்பட்டது.


அமெரிக்காவில் 1980 களில் உருவான கடும் அரச எதிர்ப்புக் குழுவான sovereign citizen movement போன்றவை அமெரிக்க அப்போதே வலதுசாரி தீவிரவாதத்தில் விலுந்துவிட்டதேன்பதை காட்டியது.இவர்கள் அமெரிக்காவின் Fedaral law க்கு கட்டுப்பட மாட்டார்கள்,இவர்கள் கட்டுபடுவது English common law க்கு மட்டுமே.முக்கியமாக இவர்கள் வரி கட்டமாட்டார்கள்.இவர்கள் வரி கட்டாமல் இருப்பதோடு இனத்துவேசன்களைப் பரப்புவதிலும் முன்னிப்பவர்கள்.மேலும் தீவிர வலது சாரிகளுடன் இணைந்து கொண்டு தமது கொள்கையைப்பரப்ப வன்முறையை கையாள்பவர்கள்.இவர்கள் பிற தவிர இனத்துவேச இயக்கங்களுடன் இணைந்து செயல்படுபவர்கள் ( சியோனிசம் ).மதிய தலைமை ஒன்று இல்லாத காரணத்தினால் இவர்களை கண்டுபிடிப்பது மிகவும் கஷ்டமாக உள்ளாதாக அமெரிக்காவின் FBI தெரிவிக்கிறது,என்றாலும் இவர்கள் அதிக எண்ணிக்கயில் இருப்பதாக அது கூறுகிறது.இவர்களைப் பற்றி FBI வெப்தளத்திலும் Domestic Terrorism என்றே கூறப்பட்டுள்ளது.
 


America’s Militia movement என்ற தீவிர வலதுசாரிக் குழுவும் இதே கொள்கையுடனே வழிநடத்தப்படுகிறது.மேலே கூறப்பட்ட குழுபோல் அல்லாமல்  இது அரசியல்ரீதியாக குறிப்பிடத்தக்க ஒரு அரசியல் குழுவாகும்.இந்த குழுவினர் ஆயுதம் வைத்திருப்பது அமெரிக்காவில் சட்டப்படி குற்றமாகும்.சமீபத்தில், அமெரிக்காவில் தோன்றிய Tea Party Movement [ 2009 ] அமெரிக்காவின் அரசியலில் பாரிய அளவில் தாக்கம் செலுத்துகிறது.இது அமெரிக்கா தீவிர வலதுசாரி அரசியலில் ஈடுபடுகிறது என்பதை  காட்டுகிறது.இந்த அனைத்து குழுக்களும் தீவிர வலதுசாரிகளின் நிதியுதவியிலேயே இயங்குகிறது.முக்கியமாக டேவிட் மற்றும் சார்லஸ் கோச் போன்ற பில்லியனர்கள் நிதியுதவி இவர்களுக்கு பெரும் உதவியாக உள்ளது.தற்போது இந்த இயக்கங்கள் அவர்களுக்கு சார்பான ஊடகங்களைப் பயன்படுத்தி அமெரிக்காவில் தேசியரீதியாக ஒரு அங்கிகாரத்தை பெற்றுவருகிறது.

2003 இல் Laurence W. Britt என்ற அரசியல் ஆய்வாளர் தனது “Fascism Anyone?” என்ற கட்டுரையில்  ஒரு பாசிச அரசின்
14 பண்புகளைபற்றி விளக்கினார். 


1.தேசியவாதைதை பலப்படுத்தல் மற்றும் அதை எல்லா இடங்களிலும் தொடர்ச்சியாக வெளிப்படுத்தல்.


2.மனித உரிமைகள் மற்றும் சிவில் உரிமைகள் என்பவற்றின் முக்கியத்துவத்தை புறக்கணித்தல்.உரிமைகள் வழங்கினால் அது மேல்தட்டு அதிகார வர்கத்தின் செயற்பாடுகளுக்கு இடையூறாக இருக்கும் என நினைக்கின்றனர்.


3.தமக்கு அரசியல்ரீதியாக எதிரியாக உள்ளவர்களை கேவலப்படுத்தல்.அரசியல் ஆதாயத்துக்காக வீண் பலிகளையும் குற்றகளையும் அவர்கள் மேல் சுமத்துதல்.
4.நாட்டின் இராணுவத்துரையில் அளவுக்கு  மிஞ்சிய ஆதிக்கம் செலுத்தல்.அதற்கு தேசிய சொத்தில் சமமற்ற பங்கீடு செய்தல்.




5.வரையறையற்ற பாலியல்.இதனூடாக பெண்களை இரண்டாம் தர குடிமகன்களாய் பாவித்தல்.


6. "ஒரு கட்டுப்படுத்தப்பட்ட வெகுஜன ஊடகங்கள்," தனியார் வசமாக அல்லது அரசின் வசமாக ஊடகத்தை வைத்துக் கொண்டு மேல்தட்டு அதிகார வர்கத்தின் தவிர கொள்கைகளைப் பரப்பல்.


7."தேசிய பாதுகாப்பை மிகைப்படுத்திக் காட்டல்".இதை மக்களை அடக்குவதற்கும் மக்கள் மீது கலகத்தை பாவிப்பதற்கும் ஒரு கருவியாக பயன்படுத்தல்.


8. மதமும் ஆளும் மேல்தட்டு வர்க்கமும் ஒன்றாக செயல்படல்.இந்த மேல்தட்டு வர்க்கம் தங்களை மதத்துக்காக போராடும் போராளிகளாக காட்டும்.மற்ற நம்பிக்கைகளை இழிவாகவும் தரக்குறைவாகவும் நினைக்கும்.
 
9.
பொருளாதாரத்தை தம் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளல்.


10.தொழிலாளர் உரிமைகள் ஒடுக்கப்பட்டு மெது மெதுவாக அகற்றப்படல்.அரசியல்ரீதியாக பலமுள்ள நிறுவனக்களின் ஆதிக்கம் அதிகரித்தல்.


11.அறிவுஜீவிகள் மற்றும் அறிவார்ந்த கலைகளை அடக்குதல்,தடைசெய்தல்.
 

12.குற்றங்களும் தண்டனைகளும் அதிகரித்தல்.அவற்றின்மீது கடுமையான சட்ட நடைமுறைகளை எடுத்தல்.


13.ஊழல் மலிந்து காணப்படல்.மேற்தட்டு அதிகார வர்க்கம் ஊழல் மூலம் தங்களை செளிப்பாக்கிக் கொள்ளல்.


14.தேர்தல் மோசடி அதிகளவில் இடம்பெறல்.


இந்த அனைத்துப் பண்புகளும் அமெரிக்காவில் தற்போது நாம் காணலாம்.அமெரிக்காவில் ஜனநாயகம் என்பது வெறும் ஒரு வார்த்தையே ஆகும்.அனால் அங்கு அரசியல்ரீதியாக முடிவுகளை எடுப்பது ஒரு குறிப்பிட்ட அதிகார வர்கத்தினரே.


  Huey Long என்ற அறிஞ்சர் " பாசிசம் உங்கள் நாடுகளுக்கு உங்களையறியாமல் வரும் எப்படி என்றால் அது அமெரிக்க கொடியால் மூடப்பட்டிருக்கும்,ஆனால் நீங்கள் நினைப்பதோ அது ஜனநாயம் என்றே ஆனால் அது தீவிர பாசிசமேயாகும்".மிகவும் சினேகபூர்வமாக வரும் இந்த பாசிசம்,அந்நாட்டில் அதன் இருப்பை உறுதியாகிக் கொண்ட பின் அதன் இருண்ட பக்கத்தைக் காட்ட ஆரம்பிக்கும்.தனியுரிமை, முதலாளித்துவம் கையாலாகாத நிலையில் பாசிசத்தைச் சரணடைகின்றது என்பது உண்மையே.தனியுரிமை முதலாளித்துவத்தின் தேய்ந்த நிலையே பாசிசம் என மார்க்சியவாதிகள் அதனைக் கண்டிப்பதுண்டு.


அமெரிக்காவின் பொதுவான விடயங்களில்,அதாவது இராணுவம்,மற்ற நாடுகளின் மீதான போர்,பெருநிறுவனங்களின் ஆதிக்கம் மற்றும் நிதிக் கொள்கை என்பவற்றில் Republicans ஆகா இருக்கட்டும் Democrats ஆகா  இருக்கட்டும் இரு கட்சிக்கும் இடையே மிகச் சிறிய வித்தியாசங்களே உள்ளன.
இவர்கள் மக்களின் நலனைவிட அவர்களின் நலனுக்கே முன்னுரிமை வழங்குகின்றனர்.




இதன் விளைவாக, முன்னெப்போதையும் விட, அமெரிக்கவில் தற்போது தேசிய பாதுகாப்பு என்ற போர்வையில் செல்வத்துக்காகவும் ஆட்சி அதிகாரத்துகாகவும் மனித மற்றும் சிவில் உரிமைகள் பாரிய அளவில் மீறப்படிகின்றன.

 
இதன் விளைவாக, முன்னெப்போதையும் விட, அமெரிக்கவில் தற்போது தேசிய பாதுகாப்பு என்ற போர்வையில் செல்வத்துக்காகவும் ஆட்சி அதிகாரத்துகாகவும் மனித மற்றும் சிவில் உரிமைகள் பாரிய அளவில் மீறப்படிகின்றன.For Example
 
1.
9 /11 க்கு முன்னும் அதற்குப் பின்னும் அதிகரித்துள்ள பயங்கரவாதத்துக்கு எதிரான செயற்பாடுகள்.


2.சட்டரீதியற்ற முறையில் பல தசாப்தங்களாக தனி நபர் செயட்பாட்டாலர்களையும் செயற்பாட்டுக் குழுக்களையும் கண்காணித்தல்.இது தற்போது ஒபாமாவின் ஆட்சியில் அதிகரித்துள்ளது எனலாம்.குறிப்பாக இவர்களின் மின்னஞ்சல்.தனிப்பட்ட பதிவுகள்,நிதிக் கொடுக்கல் வாங்கல்கள்,இண்டர்நெட் மற்றும் செல் என்பவற்றை எந்தவித கட்டுப்பாடும் இன்றி அமெரிக்க அரசு கண்காணிக்கிறது.இதன் விளைவாக,அமெரிக்காவை இவர்கள் யாரும் கேள்வி கேட்க முடியாத ஒரு இராச்சியமாக மாற்ற துடிக்கின்றனர்.



3.அமெரிக்காவில் கருத்துச் சுதந்திரம் வெறும் ஒரு மாயையே ஆகும்.அது கருத்துச் சுதந்திரத்தை அடக்கவே முயற்ச்சிக்கிறது.அமெரிக்க மக்களுக்கு அதன் அரசியலமைப்பினால்  வழங்கப்பட்டுள்ள உரிமைகளையும் தற்போது அமெரிக்கா மறுத்துவருகிறது.1996 இல் அமெரிக்காவில் கொண்டுவரப்பட்ட பயங்கரவாத  எதிர்ப்புச் சட்டம் மற்றும் Effective Penalty Act என்பன இந்த நடவடிக்கைகளை அமெரிக்க அரசுக்கு இலகுபடுத்தியுள்ளது.இவை மக்கள் மீது தடைகளையும் கடுமையான தண்டனைகளையும் பிரயோகிக்க  பாவிக்கப்படுகிறது.இந்த வழிமுறையைப் பின்பற்றியே 2001 இல்  Patriot Act உருவாக்கப்பட்டு இந்த அடக்குமுறைகள் அமெரிக்க மக்கள் மீது திணிக்கப்பட்டுவருகிறது.நவம்பர் 2002 இல், புஷ் நிர்வாகத்தின் உள்நாட்டு பாதுகாப்பு சட்டம் (Home Land Security Act .) ஒரு விரிவான சர்வாதிகார கருவியாக  பயன்பட்டது.இது மக்களின் சுதந்திரத்தை அடக்க தொடர்ந்து பயன்பட்டு வருகிறது.புஷ்ஷின் இந்த சட்டமூலத்தை தற்போது ஒபாமாவும் ஒரு வரி தப்பாமல் பின்பற்றி வருகிறார்.இந்த பாசிசவாதிகள் தேசிய பாதுகாப்பு என்ற போர்வையில் மக்களின் அடிப்படை சுதந்திரத்திலும் கைவைத்துள்ளனர்.




சட்டரீதியாக அறிவிக்கப்படாமல் அமெரிக்காவில் தற்போது ஒரு மிகத்தீவிரமான ஒரு பாசிச ஆட்சி நடைபெறுகிறது என்பது உறுதி.தீவிர பாசிசம் அமெரிக்காவை தனது  இரும்புக் கரம் கொண்டு வழிநடத்திச் செல்கிறது என்பதும் நூற்றுக்கு நூறு வீதம் உறுதி.


ஐரோப்பாவில் மீண்டும் எழுச்சி பெரும் வலதுசாரி தீவிரவாதம்.


  தீவிரவாதியான ஆண்டர்ஸ் ப்றேவிக் தன்னை விட ஐரோப்பாவில் வளர்ந்து  வரும் ஒரு பாரிய கருத்தியல் தீவிரவாதத்தை இனங்காட்டினான்.அது அவனை விட அட்டூழியம் நிறைந்ததாகவும் பயங்கரமானதாகவும் கண்டுகொள்ளப்பட்டது.அதுவே ஐரோப்பாவில் மீள் எழுச்சி பெற்றுவரும்  வலதுசாரி தீவிரவாதம்.


Xenophobia இதன் வெளிப்பாடுகளில் ஒன்றாகும்.Xenophobia என்பது அந்நியர்கள் அல்லது பிற கலாச்சாரங்கள் மீதான் அச்சம் ஆகும்.இதனால் பல மக்கள் பாதிக்கப்பட்டாலும் குறித்த சிலரே வன்முறையல் இடுபடுகின்றனர்.


அமெரிக்காவில் இதனை Tea Party குழுவினர் பிரதிபலிக்கின்றனர்.இவர்கள் அமெரிக்காவில் உள்ள தீவிர வலதுசாரிக் கொள்கையுடையவர்களுக்கும் அவர்களின் செயற்பாடுகளுக்கும் முழுமையான ஆதரவை வழங்குகின்றனர்.அமெரிக்காவில் அரசாங்கத்துக்கெதிராக நடைபெறும் ஆர்ப்பாட்டங்களின் பின்னணியில்  பெரும்பாலும் இவர்களே உள்ளனர்,மாநில ரீதியான பிளவுக்கு ஆதரவு வழங்குகின்றனர்.இன்றைய நாளில் அமெரிக்கா சிக்கித்தவிக்கும் பொருதார சரிவுக்கும் இவர்களே காரணம் என பலர் குற்றம் சாட்டியுள்ளனர்.




 ஐரோப்பா முழுவதும், கிட்டத்தட்ட எல்லா நாடுகளிலும் உள்ள தீவிர வலதுசாரிக் கட்சிகளின் நோக்கம் ஒன்றே அது வெளிநாட்டவர்கள் விரட்டப்பட வேண்டும்,அதனூடாக தம் நாடு சுத்தப்படுத்தப்பட வேண்டும்,நாட்டை அதற்கு உரிமையுள்ளவ்ர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.


பாசிசம் என்ற இச்சொல் பெனிடோ முசோலினி என்ற சர்வாதிகாரியால் உருவாக்கப்பட்டது.இந்த பெனிடோ முசோலினி ஒரு தீவிர இடதுசாரியாக இருந்து பின்னர் வலதுசாரியாக மாறியவன்.இன்று இந்த கொள்கை மிக நுட்பமாக அதுபோல் மிகவும் பயங்கரமாக பின்பற்றப்படுகிறது.இது ஜனநாயக உரிமைகளையும் சமூக உரிமைகளையும் அறிப்புக்குல்லாக்கும் ஒரு கேடுகெட்ட கொள்கையாகும். 


இதன் விளைவாக, சமூக ஜனநாயகஆட்சி கிட்டத்தட்ட மறைந்துவிட்டது.குறிப்பாக நார்டிக் நாடுகளை பெரும்பாலும் வலதுசாரி கட்சிகளே ஆளுகின்றன.நோர்வேயைத்தவிர.

பழமைவாத,இனவெறியுள்ள,தீவிர போக்குடைய இந்த அண்டெர்ஸ் ப்றேவிக் போன்றவர்களும் அவனின் குழுவினரும் தற்போது நோர்வே அரசுக்கு பெரும் சவாலாக உள்ளனர்.இந்த அண்டெர்ஸ் ப்றேவிக் தனது கொள்கை பிரகடனத்தில் தொழிலார்களை வலதுக்கு திரும்பும்படி கூறியுள்ளான்,மேலும் சுதந்திர பலஸ்தீன அரசுக்கான ஆதரவை நிறுத்தும் படியும்,இஸ்ரேலை விமர்சனம் செய்வதை  நிறுத்தும் படியும் கூறியுள்ளான்.நேட்டோ சர்வதேச ஏகாதிபத்தியத்தின் உறுதியாக இருக்கும் எனவும் கூறியுள்ளான்.

ஸ்வீடனில்  வலதுசாரி எழுச்சி பெற்றமை,ஐரோப்பாவின் சமூக ஜனநாயகத்தின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியது எனலாம்.ஸ்வீடனின் சமூக ஜனநாயகவாதிகள் கடந்த செப்டம்பர் தேர்தலில் பின்னடைவை சந்தித்தது,இது அவர்கள் 1914 ட்க்குப் பின் சந்தித்த மோசமான பின்னடைவாகும்.முதன்முறையாக குடியேற்ற எதிர்ப்பு கட்சி ஒன்று ஆசனங்களை வென்றது.

ஐரோப்பா முழுவதும் வளர்ந்து  வரும்  இஸ்லாமிய எதிர்ப்பு.மார்க்க்சசிய எதிர்ப்பு,குடியேற்றக்காரகளின் மீதான வெறுப்பு தற்போது நோர்வே மற்றும் டென்மார்க்கில் கொடிகட்டிப் பறக்கிறது.பாசிசத்துக்கு  முன்னால் ஒரு குறுகிய பாய்ச்சல் உள்ளதா? நாசிசம் வன்முறையில் எழுந்தது.அவர்கள் ஒரு மாற்றத்தை எதிர்பார்த்தனர்.அந்த மாற்றத்தில் திட்டமிடப்பட்டதை விட நிறையவிடயங்கள் உள்ளடங்கி இருந்தன.வன்முறையால் எல்லோரையும் வளத்துக்குத் திருப்புதல்,சகியாமை,சர்வாதிபத்தியம் மற்றும் உலகப் போர்கள் என்பன அடங்கியிருந்தன.இவை உலகை ஒரு வாழத் தகுதியற்ற இடமாக மாற்றியது.

தற்போது அமெரிக்காவையும் ஐரோப்பாவையும் இந்த வலதுசாரி தீவிரவாதம் வெகுவாக பாதித்திருக்கிறது.இன்று அங்கு எல்லா இடங்களிலும் அடக்குமுறை தலைவிரித்தாடுகிறது.குறிப்பாக முஸ்லிம்கள்.இன்று அமெரிக்காவில் முஸ்லிகளில் அரைவாசிப்பேர் மதரீதியான அடக்குமுறைகளுக்கு அலாவதாக ஒரு கணிப்பீடு கூறுகிறது.இன்று இந்த நாடுகள் ஒரு பாசிச தலைமையின் கீழ் அணிதிரண்டு அந்நாடுகளில்  வாழும் பிற இனத்தாருக்கு பல்வேறுபட்ட தொந்தரவுகளை வளங்கியவண்ணம் உள்ளனர்.


 9/11 தாக்குதல் அமெரிக்காவில் ஒரு தீவிர வலதுசாரி இயக்கத்தை தூண்டிவிட்டது.அதேபோல் ஐரோப்பாவில் இந்த அன்றேஸ் ப்றேவிக் மேற்கொண்ட கொலைவெறித் தாக்குதல் ஏற்கனவே முடுக்குவிடப்பட்டிருந்த தீவிர வலதுசாரி இயக்கத்தை இன்னும் தூண்டிவிடும் என்பது நிச்சயம்.ஐரோப்பாவில் ஏற்கனவே விதைக்கப்பட்டிருந்த பாசிச விதைகள் இன்று விருட்சமாய் வளைந்து நிற்கின்றன.

 

 

 

No comments:

Post a Comment