Wednesday, August 31, 2011

லிபியா TO பலஸ்தீன - அடக்குமுறையிலிருந்து சுதந்திரம் வரை.

கடாபியை விரட்டியாச்சி இனித் துவங்குவதே மிகவும் கஷ்டமான போராட்டம்.


நாம் மிகவும் சுவாரஸ்யமான ஒரு காலப்பகுதியில் தற்போது வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.இந்த ஆண்டு மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஒரு குறிப்பிடப்பட வேண்டிய ஒரு ஆண்டாகும்,மற்ற நாட்டினருக்கும்.நீங்கள் எங்கிருந்தாலும் எவராக இருந்தாலும் உலக வரலாற்றில் இடம்பெற்ற இந்நிகழ்வுகளை நிச்சயம் உங்கள் வாழ்வு முழுவதும் நினைவில் வைத்திருப்பீர்கள். பல தசாப்தங்களாக பல மில்லியன் மக்களின் விதியை அடக்குமுறை கொண்டு ஆண்டுவந்த பல சர்வாதிகாரிகள் ஒன்றன் பின் ஒன்றாக விழுவதை நீங்கள் எல்லா நாளும் பார்க்க முடியாது. 

லிபியா மக்கள் கடைசியாக எஹிப்து மற்றும் துனிசியா மக்களுடன் இணைந்து கொண்டனர்,அவர்கள் பெற்ற அதே சந்தோசத்தை தற்போது லிபியா மக்களும் பெற்றுக்கொண்டுள்ளனர்.இதற்கு தக்க காரணமும் உள்ளது,நான்கு தசாப்தங்களாக அடக்குமுறையான ஆட்ச்சிக்குள் வாழ்ந்த லிபியா மக்கள் தங்களை நாற்பது வருடங்களாக ஆண்ட கேர்னல் முஅம்மர் கடாபியை நாட்டை விட்டு துரத்திவிட்ட சந்தோசமேயாகும்.இது லிபியா மக்களுக்கு மட்டும் உரித்தான வெற்றியல்ல இது மொத்த மத்திய கிழக்குக்கும்,சுதந்திரம்,தனி மனித கண்ணியம்,விடுதலை போன்றவற்றில் நம்பிக்கையுள்ள அனைவருக்கும் இது ஒரு காவிய வெற்றியாகும்.


எகிப்து மற்றும் துனிசியா மக்களைப்போல் நிச்சயமாக இந்த வருட நோன்புப் பெருநாள் லிபியா மக்களுக்கும்  ஒரு விசேடமான பெருநாளாக இருக்கும்.அவர்கள் பெருநாள் பரிசாக பெற்றது சுதந்திரத்தையே.பயத்திலிருந்து விடுதலை,கொடுங்கோன்மையிலிருந்து விடுதலை,அவமதிப்பிளிருந்து விடுதலை இப்படி அடுக்கிக்கொண்டு போகலாம்.

எனினும் இப்படி விடுதலை செய்யப்பட்ட மத்திய கிழக்கு நாடுகளின் நிலை என்ன ? இது ஒரு முக்கியமான கேள்வியாகும்.

எகிப்து மற்றும் துனிசியா போலன்றி லிப்யா பல பழங்குடியினரைக் கொண்ட நாடாகும்,மேலும் லிபியாவில் ஒரு அடிப்படையான நிறுவனக் கட்டமைப்பு இல்லை.

லிபியாவுக்கு இது ஒரு வரலாறு காணாத வெற்றி என்றாலும் தற்போதைய நிலைமைகளில் லிபியாவின் புதிய நிர்வாகத்துக்கும் மக்களுக்கும் இதை கொண்டாட நேரமில்லை.ஏனெனில் கடாபியின் நாற்பது வருட ஆட்சி இந்த மாதத்துடன் முடிந்துவிட்டது,ஆனால் இனித் துவங்குவதே மிகப் பெரிய போராட்டம்,அதுதான் புதிய லிபியாவை நிர்மாணிக்கும் போராட்டம்,தற்போது துவங்கி இருப்பது அப்போராட்டமே.தற்போது லிப்யா அணைத்து முனைகளிலிருந்தும் பல சவால்களையும் அச்சுறுத்தல்களையும் எதிர்கொண்ட வண்ணம் உள்ளது.அனால் லிப்யா மக்கள் இவை அனைத்தையும் தாண்டி ஒரு நல்ல லிபியாவை உருவாக்க பாடுபட்ட வண்ணம் உள்ளனர்,அவர்களின் இதய உறுதியும் நீடித்த நம்பிக்கையும் ஒரு நல்ல லிப்யா உருவாக நிச்சயம் துணை இருக்கும்,இவை கொண்டு உருவாகும் ஒரு சுதந்திரமான லிப்யா நிச்சயம் எந்த தடையையும்  தாண்டும்.

லிப்யா மக்களால் மிகவும் கஷ்டப்பட்டுப் பெற்ற இந்த வெற்றி மேற்குலகில் ஒருவித களிப்பையும் ஒருவித கிலியையும் ஏற்படுத்தியிருக்கும்.கடாபிக்கு எதிரான மக்கள் போராட்டத்தில் மேற்குலகம்  மக்கள் மக்கமே நின்றது (அதற்கு தக்க காரணமும் உள்ளது.).நேட்டோவின் விமானங்கள் கடாபியின் மிக முக்கியமான தளங்களுக்கும்,ஏன் சிவிலியன்கள் வாழும் பகுதிகளுக்கும் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தி போராளிகளின் பாதையை இலகுவாக்கிக் கொடுத்தது.எனினும், இறுதியில் இந்த புரட்சியின் பெருமை லிபிய மக்களையே சேர்ந்தது.லிப்யா மக்களின் முயட்சியிள்லாமல் நம்பிக்கையில்லாமல் மிக முக்கியமாக அவர்களின் எண்ணற்ற தியாகங்கள் இல்லாமல் ஒருநாளும் இந்த நம்பிக்கையின் விடிவை பெற்றிருக்க முடியாது.

கடாபிக்கு நேர்ந்த இந்த இந்த இழிவான வெளியேற்றம் வெகு விரைவில் அஸ்ஸாதுக்கும் சாலிஹ்க்கும் வெகு விரைவில் இடம்பெறும்.இவர்களின் சரிவும் சாவிற்க முடியாது,இவர்களின் நாடுகளில் இன்ஷா அல்லா நிச்சயம் வெகு விரைவில் நம்பிக்கையின் ஒலி வெகு விரைவில் வீசும்.இனியும் இவர்கள் தம் இருப்பை தக்கவைத்துக் கொள்ள நினைத்தால்,அது பெரிய அவமானத்தில் கொண்டுபோய் சேர்க்கும்.

சிரியா,எமன்,பாலஸ்தீன்,காஷ்மீர்,செச்னிய மற்றும் உலகில் அடக்குமுறைகளுக்கு எதிராக எழுந்த மக்களின் தியாகங்கள் வீண் போகக்கூடாது,விடியல் நெருங்கி வருகிறது.உலகில் நீங்கள் யாராக இருந்தாலும் எங்கிருந்தாலும் வெகு விரைவில் சுதந்திரத்தின் இனிமையான சுகந்தத்தை வெகு விரைவில் சுவாசிப்பீர்.
 
  லிபியாவின் புதிய நிர்வாகம் வரலாற்றிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு தமது ஆட்சியை நிறுவுவார்கள் என்று நாம் நம்புகிறோம்.

 லிப்ய மக்கள் கடந்த ஆறு மாதங்களாக சுதந்திரத்துக்காக
போராடினார்கள்,ஆனால் பலஸ்தீன மக்களோ கடந்த ஆறு தசாப்த காலங்களாக போராடிவருகிறனர்.அவர்கள் அவர்களின் விடுதலைப் போராட்டத்தில் எந்தவிதமான் குறைபாடும் வைக்கவில்லை.The Coalition of the Willing has an opportunity to redeem itself.



உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்.தவறுகளை சுட்டிக்காட்டவும்.
நன்றி.



No comments:

Post a Comment