Friday, April 29, 2011

கலாச்சாரங்களின் மோதல் 2 - CLASH OF CIVILIZATION 2

இரண்டு பில்லியன் மக்கள் தொகை கொண்ட இஸ்லாமிய சமூகம் இன்று ஒசாமா பின் லாதினின் வெறும் மரபு வழி பின்தொன்றல்கலாகவோ அல்லது வெறும் தாலிபான் இயக்கத்தின் உறுப்பினர்களாகவோ தரம் தாழ்த்தப்படுகின்றனர்.குறிக்கு இலக்காக்கப்படும் சமூதாயத்தவர்களிடம் உள்ள வேறுபாடு ஏற்றுக்கொள்ளப்பட்டால் அவர்களை அடக்கி ஆள விரும்புபவர்களுக்கு அது ஆபத்தாக அமையும்.எனவே முஸ்லிம்கள் ஒன்றிணைந்த சமூகமாக காட்டப்படுகின்றனர்.ஆதிக்க வர்கத்தினருக்கு,சிறுபான்மையினரை ஒரே வகையினராகக் கொண்டு கையாள்வது எளிதாக இருக்கும் (இந்தியா).அவர்கள் எவ்வளவு பின்தங்கியவர்களாக காட்டப்படுகின்றனரோ அவ்வளவுக்கு ஆதிக்க வர்கத்தினர் நன்மை அடைவர்.எல்லா வகையிலும் அது ஆதிக்க வர்கத்தினருக்கு உறுதுணையாக அமையும். 

 இந்த நோக்கத்தோடு முஸ்லிம்கள் அவர்கள் எந்த நாட்டில் வாழ்ந்தாலும் ஒரே அச்சில் வார்கப்பட்டவர்கலாகவே காட்டப்படுகின்றனர்.இதனால் அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்வது எளிதாக்கப்படுகிறது.முஸ்லிம் ஒரே சமூகத்தவர்களாக,ஒரே எண்ணம் படைத்தவர்களாக தற்கால பாங்கை (modernity ) எதிர்பவர்களாக சித்தரிக்கப்பட முடியும்.அவர்கள் எல்லோரும் பயங்கரவாதிகள்,எனவே இஸ்லாமில் ஏதேனும் ஒரு அம்சம் பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதாக ஒரு வாதத்தை வைத்துக் கொண்டு  முஸ்லிம்களுக்கு எதிராக இனக்கலவரம் என்ற பெயரில் படுகொலைகள் (குஜராத்) பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்ற பெயரில் படுகொலைகள் (ஆப்கான்,ஈராக்) போன்றவற்றிக்கு மிக எளிதாக அங்கிகாரம் பெற முடியும்.

No comments:

Post a Comment