Wednesday, September 28, 2011

பாலஸ்தீனும் ஐ.நா வும் - சமாதான திட்டத்தின் முடிவும்.

அப்பாஸ் விண்ணப்பத்தை சமர்பித்த போது.

ஒரு பாலஸ்தீன அரசை ஐக்கிய நாடுகள் சபை அங்கீகரிக்க கோரி பாலஸ்தீன அதிகாரத்தின் (Palestinian Authority) ஜனாதிபதி மஹ்மத் அப்பாஸ், அவருடைய கோரிக்கையை முன்வைத்து அறிவித்த ஓர் உரைக்காக, வெள்ளியன்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபை எழுந்துநின்று கரகோசம் செய்தது.
இஸ்ரேல்ஆக்கிரமிப்பால் செய்யப்பட்ட படுகொலைகள், நாசங்கள்மற்றும் அவமானங்களை விவரித்த வாக்கியங்களும் அந்த உரையில்இடம் பெற்றிருந்த போதினும், வெளியுறவுமந்திரிகள், அரசுதலைவர்கள் மற்றும் ஐ.நா. பிரதிநிதிகள்என அப்பாஸின் உரையை கேட்டதரப்பினர், பாலஸ்தீனமக்களின் முந்தைய ஆறு தசாப்த கால அவலநிலையை உணர்ந்தவர்களாகஇல்லை. அவர்களில்,குறிப்பாகஅரேபிய உலகிலுள்ள பல அரசாங்கங்கள் கூடஅதற்கு  உடந்தையாக இருந்தன.
பாலஸ்தீனஅரசு அங்கீகரிக்கப்படுவதைத்தடுக்க, வாஷிங்டன்பாதுகாப்பு சபையிலுள்ள அதன்வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தும்என்று ஏற்கனவே அறிவித்திருந்தது. அதற்குஎதிராக இருந்த விரோதத்தால், அந்தஉற்சாகமான விடையிறுப்பு உந்தப்பட்டிருக்கலாம்.
பாதுகாப்பு சபையிலுள்ள நாடுகள் வாக்கெடுப்பில்கலந்து கொள்ளாமல் இருக்கவும், அல்லதுஎதிராக வாக்களிக்கவும் அந்நாடுகளைநிர்பந்திக்க அச்சுறுத்தல்கள்மற்றும் மிரட்டல்களின் ஒருவெட்கக்கேடான பிரச்சாரத்தை அமெரிக்க அதிகாரிகள் நடத்தினர். எடுத்துக்காட்டாக, அந்தவிண்ணப்பத்திற்கு ஆதரவாக போர்ச்சுக்கல் வாக்களித்தால், அந்நாட்டிற்கு வழங்கிவரும் நெருக்கடி-காலபொருளாதார உதவியை அமெரிக்கா நிறுத்திவிடுமென்று கூறியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
அமெரிக்கபாசாங்குத்தனத்தின் வெளிப்பாடும், அச்சுறுத்தலும், வாஷிங்டன் ஐக்கியநாடுகள் சபையில் முன்வைக்கவிருந்த செய்தியை இல்லாதொழிக்கவே உதவியிருந்தது. அதில், லிபியஆட்சி மாற்றத்திற்கான அமெரிக்கா-நேட்டோ யுத்தத்தை புகழ்வதும், மற்றும் இதனை அமெரிக்கஆதரவிலானபன்முகச்சார்பியத்திற்கும் (multilateralism) மற்றும் "அரேபியமக்கள் எழுச்சியின்" ஒருநீட்சிக்கும் கிடைத்த ஒரு வெற்றியாக காட்டுவதுமே அதன் நோக்கமாகும்.
ஒபாமாபொதுச்சபையின் தம்முடைய உரையில் இந்த கருத்துக்களைசேர்த்திருந்த போதினும், பாலஸ்தீனம்மீதான கருத்துமுரண்பாட்டில்அவை மறைக்கப்பட்டுவிட்டதை கசப்பான விரக்தியுடன்   ஒத்துக்கொள்ள அவர் நிர்பந்திக்கப்பட்டார்.
நிஜத்தில், பாலஸ்தீனமக்கள் மீதிருக்கும் இஸ்ரேலின் கொடுங்கோன்மைக்கு வாஷிங்டன்அளித்துவரும் நிபந்தனையற்ற ஆதரவானது, அப்பிராந்தியம்முழுவதிலும் அதன் சூறையாடும் ஒட்டுமொத்த ஏகாதிபத்தியகொள்கையின் ஒரு சிறிய பகுதியாகும். அதன் அத்தகையகொள்கைகள் எண்ணெய் வளம்மிக்க லிபியாவின் ஆட்சி மாற்றயுத்தத்தில் அதன் மிகவும் பகிரங்கமான வெளிப்பாட்டைக்கண்டுள்ளது. “அரேபியஎழுச்சியை" பொறுத்தவரையில், ஒபாமாநிர்வாகம் இஸ்ரேலுடன் சேர்ந்துகொண்டு, அவர்களின்நெருங்கிய கூட்டாளியான எகிப்தில் முபாரக்கையும், துனிசியாவில்பென் அலியையும் அதிகாரத்தில் நிறுத்துவதற்கு சாத்தியப்பட்டகடைசி தருணம் வரையில் போராடின. தற்போதுஅவ்விரு நாடுகளிலும், ஏகாதிபத்தியநலன்களைப் பாதுகாக்கும் மற்றும் தொழிலாளர்கள், இளைஞர்களின்புரட்சிகர போராட்டங்களைத் நசுக்கும் ஆட்சிகளை உறுதிப்படுத்த அவை வேலை செய்து வருகின்றன.
ஐக்கியநாடுகள் சபையின் அங்கீகாரத்திற்கானபாலஸ்தீன ஆணையத்தின் மனுவை தடுக்க ஒபாமா நிர்வாகம் ஏன்நிர்பந்திக்கப்பட்டிருப்பதாகஉணர்கிறது? ஒரு தீர்விற்கானஒரே பாதையாக இருக்கக்கூடிய "இருதரப்பு" பேச்சுவார்த்தைகளைத் குழப்பத்திற்கு உள்ளாக்கும் விதத்தில், இந்த "ஒருதலைபட்சமான" நடவடிக்கை "சமாதான வழிமுறைகளுக்கு-" குழிபறிக்கும்என்பதே உத்தியோகப்பூர்வகதையாகும்.
சமாதான வழிமுறை" என்றழைக்கப்படுவதுஇரண்டு தசாப்தங்களாக நடந்து கொண்டிருக்கும் ஒரு நாடகமாகும். அது அமைதியையும்உருவாக்கவில்லை அல்லது பாலஸ்தீன மக்களின் எந்தவிருப்பங்களையும் கூட பூர்த்தி செய்துவிடவில்லை. மாறாக அதுஇஸ்ரேலிய அரசின் ஒருதலைபட்சமானநடவடிக்கைகளை மூடிமறைக்க உதவியுள்ளது. இஸ்ரேலியஅரசு கடந்த பத்து ஆண்டுகளில் மட்டும் ஜியோனிச குடியேறியவாசிகளின்எண்ணிக்கையை இரட்டிப்பாக்கியதோடு, ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குகரையிலும் மற்றும்ஜெருசலேமின் இன்னும் கூடுதல் பாகங்களை அதன் கட்டுப்பாட்டில்ஒருங்கிணைத்துக் கொண்டுள்ளது. இது இராணுவ சோதனை சாவடிகளின் பெருக்கத்தோடும் மற்றும் யூதர்களுக்கு மட்டும் என்ற பாதுகாப்பு சாலைகள் மூலம்  ஒரு தேசிய இருப்பை மட்டும் ஈடுவைத்துள்ளது மட்டுமல்லாது ஆக்கிரமிப்பின் கீழ் பாலஸ்தீனியர்களின் வாழ்க்கையையே சாத்தியமற்றதாக்கியுள்ளது.
அமெரிக்கதரகின் கீழ் நடக்கும் "சமாதான வழிமுறை" திவாலாகிவிட்டதைஐக்கிய நாடுகள் சபை மௌனமாக ஒப்புக் கொண்டுள்ள போதினும், அப்பாஸூம்பாலஸ்தீன ஆணையத்தின் முதலாளித்துவ தலைமையும் எவ்வித மாற்றீட்டையும்முன்நிறுத்தவில்லை. மாறாகஐக்கிய நாடுகள் சபையின் உத்திகள் ஏதேனும் விதத்தில்பேச்சுவார்த்தைகளைமீட்டுயிர்ப்பிக்கும் என்பதில்சிரத்தையற்ற நம்பிக்கையை அவர்கள் எழுப்பியுள்ளனர்.
பாலஸ்தீனத்தைஓர் அங்கத்துவநாடாக ஐக்கிய நாடுகள் சபை அங்கீகரிக்கவேண்டுமானால், கடந்த ஐம்பதுஆண்டுகளில் இஸ்ரேல்-பாலஸ்தீனபிரச்சினையில் ஐக்கிய நாடுகள்சபையால் கொண்டு வரப்பட்ட பல தீர்மானங்களில் குறிப்பிட்ட பாலஸ்தீன மக்களின் நிலைமையை மாற்றுவதை தவிர வேறொன்றும் செய்யவேண்டியதில்லை. இஸ்ரேலியஆக்கிரமிப்பையும், இராணுவதாக்குதல்களையும் முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து அதுவாய்திறக்காது. நாட்டைவிட்டுவெளியேற்றப்பட்டிருக்கும்மில்லியன் கணக்கான பாலஸ்தீனர்கள்மீண்டும் திரும்புவதற்குரியஅவர்களின் உரிமையை அதனால் பாதுகாக்க முடியாது. மேலும்இஸ்ரேலுக்குள் வாழும் 1.5 மில்லியன்பாலஸ்தீனர்களுக்கு சம உரிமையையும் அதனால் வென்றுகொடுக்க முடியாது.
அப்பாஸூம், பாலஸ்தீனஅதிகாரத்தின் தலைமையும் அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்துவதாக கூறிக்கொள்ளும் பாலஸ்தீன மக்களிடையே கொஞ்சநஞ்ச நம்பிக்கையைவென்றெடுக்கும் ஒரு விடாப்பிடியானமுயற்சியில் ஐ.நாபக்கம் திரும்பியுள்ளனர். சில விதத்தில், பாலஸ்தீனஅதிகாரமானது எகிப்திலும், துனிசியாவிலும்மக்களால் தூக்கியெறியப்பட்டஆட்சிகளிலிருந்து மிகவும் வேறுபட்டதல்ல. அமெரிக்காவின்நிதியுதவி பெறும் மற்றும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பிற்குஒத்துழைத்து வேலை செய்துவரும் ஒரு பரந்த பொலிஸ் இயந்திரத்தை நிர்வகித்து வருகின்ற நிலையில், தேர்ந்தெடுக்கப்படாமலேயே, அது கட்டளைகள் மூலமே  ஆட்சி செய்கிறது. அது பாலஸ்தீனதொழிலாளர்கள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களைப்பிரதிநிதித்துவப்படுத்தவில்லைமாறாக வெளிநாட்டு மானியங்கள் மற்றும் ஊழலிருந்து தங்களைத்தாங்களேசெழிப்பாக்கிக் கொண்ட அரசாங்கஅதிகாரிகள் மற்றும் வியாபாரிகளின்ஒரு சிறிய தட்டை அதுபிரதிநிதித்துவப்படுத்துகிறது.
இந்தஆண்டின் தொடக்கத்தில் அல்-ஜசீராவால்வெளியிடப்பட்ட இஸ்ரேலிய-பாலஸ்தீனபேச்சுவார்த்தைகளின் ஒரு தசாப்த கால ஆவணங்களின் இரகசிய சுருக்கக்குறிப்புகள், “பாலஸ்தீனசெய்தித்தாள்களில்" காட்டப்பட்டதைப்போல, வெளிநாடுகளில்வாழும் பாலஸ்தீனியர்கள்திரும்பி வருவதற்கான உரிமையை மறுத்தும், தோற்றப்பாட்டளவில்கிழக்கு ஜெருசலேமின் அனைத்து பாகங்களையும் கைவிட்டும், ஒரு "யூதஅரசாக" இஸ்ரேலியஅந்தஸ்தை பாதுகாப்பதை நோக்கமாககொண்ட இனச்சுத்திகரிப்பில் இணைந்தியங்க உடன்பட்டும் பாலஸ்தீன தலைவர்கள் துல்லியமாக ஒட்டுமொத்தமாக சரணடைந்துள்ளனர்.
வாஷிங்டனின்பிடிவாதம் பொதுவாக 2012 தேர்தல்களையும்மற்றும் யூத வாக்குகள்" என்றழைக்கப்படுவதையும்ஆதாரமாக வைத்து விவரிக்கப்படுகிறது. “யூதவாக்குகள்" என்பதுஅமெரிக்க யூதர்களின்பெரும்பான்மையையோ (அல்லதுஅந்த விஷயத்தில் இஸ்ரேலில் உள்ள பெரும்பான்மையினரையோ) பிரதிநிதித்துவப்படுத்தாத, மாறாகஇஸ்ரேல் அரசியலமைப்பில் உள்ளமிகவும் வலதுசாரி உட்கூறுகளை பிரதிநிதித்துவப்படுத்தும்ஒரு சக்திவாய்ந்த மற்றும் மிதமிஞ்சிய செல்வத்தைக்குவித்திருக்கும் ஜியோனிச பிரிவினை  குறிக்கும் ஒருவழக்குச் சொல்லாகும். அமெரிக்கஇஸ்ரேலிய அரசியல் நடவடிக்கை குழு (AIPAC) போன்றஅமைப்புகள் அமெரிக்காவின்இரண்டு முதலாளித்துவ கட்சிகளின் கொள்கைகள் மீது ஒரு அசுரத்தனமான பாரபட்ச செல்வாக்கைக்கொண்டிருக்க முயல்கின்றன என்பதில் எவ்வித சந்தேகமும்இல்லை

AIPAC Rules America.
எவ்வாறிருந்தபோதினும், அங்கேஉள்ளார்ந்த மிகவும் அடிப்படையான நலன்கள் உள்ளன. இஸ்ரேல்அரை நூற்றாண்டிற்கும் மேலாகமத்தியகிழக்கில் அமெரிக்க ஏகாதிபத்திய தலையீட்டிற்குஒரு கொத்தளமாக இருந்து உதவியுள்ளது. அனைத்திற்கும்மேலாக, 1978இல்மெனாசெம் பெகின் (Menachem Begin) மற்றும் அன்வர் சதாத்தால் (Anwar Sadat) கையெழுத்திடப்பட்டகேம்ப் டேவிட் உடன்படிக்கை வரையில் அனைத்து வழிகளிலும்சென்று திரும்பிப் பார்த்தால், “சமாதானத்திற்கான" பேச்சுவார்த்தைகளில்வாஷிங்டன் ஒருவித "நேர்மையானதரகராக" சேவை செய்வதாககாட்டப்படும் பாசாங்குத்தனமானது, அப்பிராந்தியத்தில்அதன் நலன்களை அதிகரிக்க அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்குஒரு கருவியை அளித்துள்ளது

1978 Camp David Summit.
2000 Camp David Summit.
 அரசாக-ஆக்குவதில்ஐக்கிய நாடுகள் சபை வாக்கெடுப்பிற்குஅமெரிக்கா காட்டும் விரோதமானது, “சமாதான வழிமுறை" என்றழைக்கப்படுவதன்மீது அதற்கிருக்கும் ஏகபோகத்தைத் தக்கவைப்பதில் அது தீர்மானமாக இருப்பதின் பெரும் பகுதியால் உந்தப்பட்டுள்ளது. முக்கியமாக, பிரெஞ்ச்ஏகாதிபத்திய மற்றும் லிபியாவிலுள் Total Oil நிறுவனத்தின்நலன்களை முன்னெடுக்கயுத்தவிமானங்களையும், ஏவுகணைகளையும்பயன்படுத்துவதில் முனைப்பாக இருந்த பிரான்ஸ் ஜனாதிபதிநிகோலஸ் சர்கோசி, அமெரிக்காவால்நடத்தப்பட்ட அமைதி பேச்சுவார்த்தைகள்தோல்வியடைந்துவிட்டனஎன்பதற்கும், அவரின்சொந்த பிரெஞ்ச் தீர்வை முன்னெடுப்பதற்கும் பாலஸ்தீனத்தை அரசாக-ஆக்கக்கோரும் விண்ணப்பத்தின் மீதானநடந்த விவாதத்தைப் பயன்படுத்தினார்.
ஒருபுறம்பாலஸ்தீன அதிகாரத்தில் ஆளும்கோஷ்டி நலன்களால் உந்தப்பட்டும், மறுபுறம்ஏகாதிபத்திய சூழ்ச்சிகளால்உந்தப்பட்டிருக்கும் பாலஸ்தீன அரசாக்கத்தின் மீதான ஐக்கியநாடுகள் சபையின் விவாதமானது, பாலஸ்தீனமக்களின் ஜனநாயக மற்றும் சமூக தேவைகளைப் பாதுகாப்பதோடுசிறிதும் சம்பந்தப்பட்டதல்ல. முடிவில், அவை புரட்சிகரபோராட்ட வழிமுறைகளினால்மட்டுமே அடையப்பட முடியும்.
துனிசியாவிலும், எகிப்திலும் பரந்த எழுச்சிகளை தோற்றுவித்த உலக முதலாளித்துவத்தின் தீர்க்கமுடியாத நெருக்கடி, இஸ்ரேலிலும் ஆக்கிரமிப்பு பாலஸ்தீன பிராந்தியங்களிலும் கூட அதிகரித்துவரும் எழுச்சிகளுக்கு எண்ணெய் ஊற்றி வருகின்றன. அவை இஸ்ரேலிலேயே சமூக நிலைமைகளின் மீது பரந்த நாடுதழுவிய ஆர்ப்பாட்டங்களில் சமீபத்தில் எதிரொலித்தன.




இது www.wsws.com இணையத்தளத்தில் வெளியான கட்டுரையின் தமிழாக்கமாகும்.இக்கட்டுரையை எழுதியவர் Bill Van Auken என்பவராவார்.எல்லா கட்டுரைகளும் விமர்சனத்துக்கு உட்பட்டவையே.
ஜசாகள்ளஹு ஹைர்.

உங்கள் நண்பன் 
எம்.ஹிமாஸ் நிலார்.

No comments:

Post a Comment