Wednesday, May 4, 2011

இன்றே உழைப்போம் வாருங்கள்.....

கிலாபத்வீழ்த்தப்பட்டது,
தாங்க முடியாத சோகத்தால்
இதயம் நிறைந்தது.


பலஸ்தீன்ஆக்கிரமிக்கப்பட்டது,
அங்கத்தைதுண்டாக்கியவேதனை
உடலெங்கும் பரவியது

ஆப்கான்அழிக்கப்பட்டது,
வார்த்தைக்குள் வராத துயரம்
கண்களை ஆறாக்கியது.


ஈராக்இடிக்கப்பட்டது,
கனவிலும் காணாத கவலை
தூக்கத்தை அபகரித்தது.


ஷரி அத்தை சாடினார்கள்,
முழுஷரிஅத்தையும் அமுலாக்கும்
கிலாபத்தேஇலக்கென்றோம்..


குர்ஆனை மிதித்தார்கள்,
ஒருவருக்கும் தயங்காமல்
குரல் கொடுத்தோம்.
ஓதி செயற்பட்டோம்.


தூதரை அவமதித்தார்கள்,
ஒரு கணமும் ஓயாமல்
பதில் கொடுத்தோம்.
நபி வழியில் நாம் நடந்தோம்.


ஈமானை மறுக்கலாம்,
இஸ்லாத்தை மறைக்கலாம்,
முஸ்லிமை வெறுக்கலாம்,
பல போர்கள் தொடுக்கலாம்,
எமது இறுதி மூச்சும்
இஸ்லாத்துக் கென்றோம் நாம்.



 புனித பூமியை மீட்கவும்..
ஆக்கிரமிப்பை அகற்றவும்..
ஓன்று பட்டோம் நாம்.
குர்ஆனாய் நடமாடி..
நபிவழியில் நாம் ஆள ..
இன்றே உழைப்போம் வாருங்கள்.
.
 ( கவிதை எழுதியவர் - ஹரூன்  மூஸா )

No comments:

Post a Comment