Monday, May 2, 2011

இஸ்லாமிய வரலாற்றில் இரக்கவுணர்வு மற்றும் மனிதநேயம் - 2

நபிகள் நாயகம் [ ஸல் ] அவர்களின் பின் வந்த கலீபாக்களும் நீதி வழங்குவதில் மிகக் கவனமாக இருந்தார்கள்.கைப்பற்றப்பட்ட நாடுகளில் அனைத்து விதமான மக்களுக்கும் சரி சமமாக நீதி செலுத்தினார்கள்.முதல் கலீபா அபூபக்கர் [ ரலி ] அவர்கள் தம் மக்களை நீதியுடனும் பொறுமை நிறைந்த மனப்பான்மையுடனும் நடந்து கொள்ளுமாறு ஏவினார்கள்.சிரியா நாட்டிற்கு சென்ற முதல் பயணத்தில் தம் இரானுவத்திணரப் பார்த்து அபூபக்கர் [ரலி] கீழ் வருமாறு பணித்தார்கள்

      "நில்லுங்கள் மக்களே! நீங்கள் மனதில் இருத்தும் பொருட்டு நான் பத்து விதிகளை இங்கே வெளியிடுகிறேன்,
  1. நயவஞ்சகம் செய்யாதீர்
  2. நேர்வழியிலிருந்து பிரழ்ந்துவிடாதீர்
  3. குழந்தைகள்,வயோதிபர்கள்,பெண்கள் போன்றோரை கொல்லவோ முடமாகவோ ஆக்காதீர்
  4. பேரீத்தம் பழ மரத்தை வெட்டாதீர்,
  5. பேரீத்தம் பழ மரங்களுக்கு நெருப்பு வைக்காதீர்
  6. பழம் ஈயும் மரங்களை வெட்டாதீர்
  7. உங்களின் உணவுத் தேவைக்காக இன்றி ஆடு,மாடு.ஒட்டகை எதனையும் கொல்லாதீர்
  8. துறவி மடங்களுக்காக தங்களை அர்பணித்துக் கொண்டோரை அவர்கள் வாழ்வில் அவர்கள் தேர்தெடுத்துக் கொண்ட விடயத்தை செய்ய எதுவாக விட்டு விடுங்கள்.
  9. உங்களுக்கு மக்கள் உணவு தர முன்வருவார்கள்,அவற்றை நீங்கள் உண்ணலாம்.
  10. ஆனால் அல்லாவின் பெயரைச் சொல்ல மறந்து விடாதீர்கள்.
இவை யாவும் திருக்குரான் வலியுறுத்திய நபிகள் நாயகம் [ஸல்] வாழ்ந்துகாட்டிய பண்புகளும் மனப்பான்மையும் தான்.
                                                                                                   
                                                                                                     "இஸ்லாம் பயங்கரவாதத்தை கண்டிக்கிறது" எனும் நூலிலிருந்து.

No comments:

Post a Comment