Tuesday, May 3, 2011

இஸ்லாமிய வரலாற்றில் இரக்கவுணர்வு மற்றும் மனிதநேயம் - 4

கைப்பற்றப்பட்ட நாடுகளில் மக்கள் நிர்பந்தப்படுத்தி இஸ்லாத்திற்கு மதம் மாறச் செய்தனர் எனும் குற்றச்சாட்டை மேலைநாட்டு வரலாற்று ஆய்வாளர்களே அது உண்மையல்ல என்று மறுக்கின்றனர்.முஸ்லிம்கள் நீதியும் பொறுமையும் மிக்க மனப்பான்மையுடையவர்கள் என்று உறுதிப்படுத்தியுள்ளனர்.

L.BRAWNY எனும் மேலைநாட்டு ஆய்வாளர் தனது THE PROSPECT OF ISLAM எனும் நூலில் இவ்வாறு கூறுகிறார்,

       ''முஸ்லிம்கள் சென்ற இடமெல்லாம் வாள்முனையில் இஸ்லாத்தை பரப்பினார்கள் என்று கிருஸ்துவர்கள் கூறும் குற்றச்சாட்டை எதேய்சையாக உறுதி செய்யப்பட உண்மைகள் தகத்தெரிகிறன.முஸ்லிம்களுடைய வெற்றிகளின் பின்னால் உள்ள உண்மையான நோக்கம் இஸ்லாமிய சகோதரத்துவம் தான் என்று குறிப்பிட்டுள்ளார்.வரலாறு முழுவதும் முஸ்லிம் நாடுகளில் ஆட்சி செய்து வந்த முஸ்லிம் நிர்வாகிகளில் பெரும்பாலானோர் மற்ற மதத்தினரை மிகுந்த சகிப்புத்தன்மையுடனும் மதிப்பளித்தும் வந்தனர் என்றும் முஸ்லிம் நாடுகளின் எல்லைக்குள் வாழ்ந்த யூதர்களும் கிருஸ்தவர்களும் பாதுகாப்புடனும் வாழ்ந்து வந்தனர் என்றும் ஆதாரங்களுடன் கூறுகிறார்.''

No comments:

Post a Comment